சென்னையில் நில நடுக்கம்!

சென்னை: சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.

சென்னையில் இன்று மாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தியாகராய நகர், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கேகே நகர் பகுதிகளில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

திடீரென வீட்டில் உள்ள பொருள்கள் அதிர்வுற்றதாலும், காலுக்குக் கீழே அதிர்வை உணர்ந்தாலும் வீட்டை விட்டு ஓடிவந்தனர் மக்கள்.

ஒருவருக்கொருவர் பயத்துடன் நிலநடுக்கம் பற்றி பேசிக் கொண்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடுகளுக்குத் திரும்பினர்.

ரிக்டர் அளவுகோலில் இந்த பூகம்பத்தின் அளவு எவ்வளவு என இன்னமும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை.

இன்று காலை ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?