Posts

Showing posts from October, 2018

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!

Image
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்! நம்மை எல்லாம் படைத்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு மிகவும் உகந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரம் பவுர்ணமியோடு சேர்ந்து வரும் தினம் விஷேசமாக கடைபிடிக்க படுகிறது.  ஐப்பசி மாதம் துலா மாதம் என்று விஷேசமாக கூறப்படுகின்றது.     இந்த மாதத்தில்தான் துலா ஸ்நானம் என்ற காவேரியில் முழுகி முன்னோரை வழிபடும் சிறப்பும் இருக்கிறது. இந்த மாதத்திலே அஸ்வினி நட்சத்திரத்தோடு வரக்கூடிய பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இத்தகைய அன்னத்தினால் ஆன அபிஷேகம் சிவபெருமானுக்கு மட்டுமே செய்விக்கப்படுகிறது. சிவபெருமான் லிங்கத் திருமேனி உடையவர். அவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அன்னமும் லிங்க உருவம் உடையது. அன்னத்தால் ஆன சிவனை அன்னாபிஷேக தினத்தன்று தரிசித்து சேவிப்பது கோடி சிவனை வணங்கியதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன.    எவ்வளவுகொடுத்தாலும் போதாது என்று சொல்பவன் கூட போதும் என்று சொல்லக்கூடியது அன்னம்.   உலகில்   வாழும்   உயிர்களின்

சகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்!

Image
சகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்!  சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30 மணி முதல் 6-00 மணிவரை பிரதோஷ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதோஷத்தில் இருபது வகைகள் உண்டு என்று ஆகமத்தில் கூறப்படினும் மாதம் இருமுறை இந்த இரண்டு பிரதோஷங்கள் சிவாலயங்களில் விமரிசையாக கொண்டாடப்பபடும்.      கார்த்திகை மாத தேய்பிறை திரயோதசி நாளில் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டார். அது ஒரு சனிக்கிழமை என்று கூறப்படுவதால் சனிக்கிழமை வரும் பிரதோஷங்கள் பெருமை வாய்ந்ததாகவும் விஷேசமாகவும் கொண்டாடப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதம் தேய்பிறை சனிப்பிரதோஷம் சனிமஹாப் பிரதோஷம் என்று வழங்கப்பட்டு சிறப்பான ஆராதனைகள் சிவனுக்கு நடைபெறுகின்றன.    பிரதோஷ வழிபாடு சகல வினைகளையும் போக்கக் கூடியது, வறுமை, கடன், மரணபயம், ரோகம், போன்ற சகல துயரங்களை வேரறுக்கக் கூடியது என்று காரணாகமம் என்ற ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. சனிப்பிரதோஷம் இன்னும் விஷேசமானதால் சனிப்பிரதோஷத்தன்று உபவாசம் இருந்து சிவனை நினைந்துருகி சிவாலயங்களுக்கு சென்று அபிஷேகப் பொருட்களை சமர்ப்பித்து