நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 17
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidbwuGMRsFlQzkc5t6DjMehbRjzj4wfPS7V5eMkcx6msMxeYY0Sow5yeFJoyQmz9_XoX_Hs1Qwi0FYxoMWz6fLG7fECu1EnjsrlLuchcvdQAGptSLVX91TBkVvZ2UImcMl0HDBflez3P_p/s1600/download+%252852%2529.jpg)
நொடிக்கதைகள்! பகுதி 17 வாஸ்து! பிரபல அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்கு ப்ளான் போட்டுத்தரும் இஞ்ஜினியர் குமார் தன் புது வீட்டிற்கு ப்ளான் போட்டுத் தரும்படி வாஸ்து ஜோஸியரிடம் கேட்டுக்கொண்டிருந்தான். ஓசி! எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? காலையிலே வந்து கடையை திறந்தாத்தானே வியாபாரம் நல்லா நடக்கும்? சலூன் கடை வாசலில் காத்திருந்தவன் கோபத்துடன் கேட்டுவிட்டு சரி சரி அந்த பேப்பரை இப்படிக் கொடு என்று பேப்பரை விரித்து வாசிக்க ஆரம்பித்தான். பழங்கதை! இப்படித்தான் போனவருஷம் விடாது அடை மழை பேய்ஞ்சது….! என்று ஆரம்பித்த அப்பாவிடம் சரி சரி! அதெல்லாம் பேஸ்புக் மெமரீஸ்லே பார்த்து ஷேர் பண்ணிட்டேன்! விடு விடு! உன் பழங்கதையை என்றான். மடிப்பு! ”ஒரு நாளைக்கேனும் உங்க துணிகளை நீங்க மடிச்சு வைச்சுக்க கூடாதா?” என்றவளிடம் ”அப்புறம் நீ எதுக்கு இருக்கே? ”என்று கெத்தாக கேட்டவன் துணிக்கடையில் நுழைந்ததும் மடித்து வைக்க ஏராளமான புடவைகள் காத்து இருந்தன. க்ளீன் போல்ட்! சாக்லெட் நிறைய சாப்பிட்டா பல் சொத்தையாயிரும்னு சொல்லி எனக்கு மட்டும் சாக்லெட் வாங்கி வ