Posts

Showing posts from August, 2013

பதிவர் சந்திப்புக்கு ஏன் போக வேண்டும்?

Image
பதிவர் சந்திப்புக்கு ஏன் போக வேண்டும்? தமிழ் வலைப்பதிவர்களின் இரண்டாம் ஆண்டு சந்திப்பும் பிரபல பதிவர்களின் புத்தக வெளியீடும் வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ளது. பதிவர் சந்திப்பு குறித்து நிறைய பேர் நிறையவும் நிறைவாகவும் எழுதி விட்டார்கள். நேற்று கூட மதுரைத் தமிழன் அவரது பாணியில் சிறப்பாக எழுதி அசத்தி விட்டார்.     சென்ற வருடம் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை! இந்த வருடமும் உறுதியாக கலந்து கொள்வேன் என்று சொல்வதற்கு இல்லை! இருந்த போதும் பதிவர் சந்திப்பு குறித்து பதிவு வெளியிட ஆசை! ஆனால் எனது கணிணி பழுது அடைந்ததாலும் பணி சுமையினாலும் உடனடியாக பதிவு வெளியிட வில்லை! இதோ இரண்டு நாள்கள்தான் உள்ளன ஏதாவது பதிவிடா விட்டால் எப்படி? பதிவர் சந்திப்புக்கு எதுவும் உடலுழைப்புதான் செய்ய வில்லை! செய்தியை ஒரு நாலு பேருக்காவது பகிர வேண்டாமா? அதனால்தான் இந்த பதிவு.     முதலில் இந்த வலைபதிவர் சந்திப்பை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தும் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். வலைபதிவர்கள் வலையிலும் முகநூலிலும், டிவிட்டர் போன்றவற்றிலும் எண்ணற்றோர் இருப்பினும் அவர்கள் ஒன்றாக குழுமுவது என

புகைப்பட ஹைக்கூ 47

Image
புகைப்பட ஹைக்கூ 47 உறைவிடம் இல்லாதவர்களிடம் உறைந்து கிடக்கிறது அன்பு! வற்றிய பூமியில் ஊற்றெடுத்தது வற்றாத பாசம்! நடைபாதையில் நடப்பட்டது அன்பு! ஒளிந்து கொண்ட பாசம் வெளிப்பட்டது நடைபாதை சிறுவர்கள்! உடை இல்லாவிட்டாலும் தடைபடவில்லை பாசம் வீதியில் சிறுவர்கள்! பாச நிழலில் இளைப்பாறியது குழந்தை! வறுமையிலும் வளர்ந்து நிற்கிறது பாசம்! ஊட்டி வளர்க்கப்படுகிறது குழந்தைமட்டுமல்ல பாசமும்! நிறம் கருத்தாலும் நீர்த்துப்போகவில்லை! பாசம்! ஏழையானாலும் ஏழையாகவில்லை! பாசம்! விலையில்லா பொருள் விளைந்தது சிறுவனிடம்! தேடினாலும் கிடைக்காது தேக்கி வைத்த பாசம் இயந்திர உலகில் பொங்கிய மகிழ்ச்சியில் வீங்கி உடைந்தது பாசம்! அள்ளி அணைத்ததும் அடைபட்டது அன்பு! கொடுக்க கொடுக்க குறையாது அன்பு! நீரூற்றாமலே வேரூன்றியது அன்பு! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கண்ணன் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி!

Image
கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும் . பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து , இருபுறமும் குத்துவிளக்கேற்றி , நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய் , வெற்றிலைப் பாக்கு , பூ , பழம் வைக்க வேண்டும் .  கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால் , கிருஷ்ணஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பால் , தயிர் , வெண்ணெய் , அவல் , நாவற்பழம் , கொய்யாபழம் , விளாம்பழம் , வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை , உப்பு சீடை , முறுக்கு , லட்டு , மைசூர்பாகு , தேன்குழல் , மனோகரம் , திரட்டுப்பால் , பர்பி போன்றவற்றையும் படைக்கலாம் .   அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம் , கிருஷ்ணாஷ்டகம் , கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும் . துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து , மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும் . தூப தீபம் ( பத்தி , கற்பூர