Posts

Showing posts from June, 2018

தினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2

தினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு! மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  18th June 2018 04:15 PM   |    அ+ அ  அ-     |   உச்சத்தில் இருக்கிறது சூரியன்! பச்சை பசுமைகள் அழிந்து கொண்டிருக்கிறது! கிராமங்களில் கூட விவசாயம் பிராணனை மெதுவாகவிட்டுக்கொண்டிருக்கிறது! ஒங்கி உயர்ந்து நின்ற மலைச்சிகரங்கள் தூங்கி விழிக்கையில் தூசாக மாறிக்கொண்டிருக்கிறது! கேணிகளுக்கு சமாதி கட்டியாகிவிட்டது! கோணிகளில் விற்ற அரிசி நெகிழிகளில் அடைபட்டு மூச்சிறைக்கிறது! சாலைகள் விரிகையில் சடுதியில் காணாமல்போகிறது சோலைகள் நிறைந்த கிராமங்கள்! உடலிழந்து ஓடும் திராணியற்று ஒளிந்து ,மறைந்து கொண்டிருக்கின்றன ஆறுகள்! ஆழியின் அடியிலும் கூட நெகிழி குப்பைகள்! நிலம் கெட்டு நீர் கெட்டு உணவுகெட்டு உடல் கெட்டு உறுதி கெட்டு ஊர் கெட்டு உடைபட்டுக்கிடக்கின்றது சூழல்! முக்கால்விழுக்காட்டை விழுங்கி ஏப்பம் விட்டபின்னும் முழுதினும் அடங்கவில்லை பசி! கால்விழுக்காடு மிச்சமிருக்கிறது! உச்ச வெப்பத்தை தணித்து வைக்க உலக அழிவை தள்ளி வ

தினமணி கவிதை மணி ஜூன் 2018 இணைய தள கவிதைகள் ! பகுதி 1

தினமணி கவிதைமணி இணைய தளப்பக்கத்தில் ஜூன் மாதம் வெளியான கவிதைகள் இரண்டு உங்கள் பார்வைக்கு! வாழ்க்கையென்னும் போர்க்களம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  03rd June 2018 02:05 PM   |    அ+ அ  அ-     |   வாழ்க்கையென்னும் போர்க்களத்தில் அனுதினமும் போராட்டம்தான்! தினம் தினமும் பூத்திடுமே புதுப்புது பிரச்சனைகள்! பதுங்கு குழிகளும் கண்ணிவெடிகளும் இங்கு தாராளம்! துணிச்சல் இருப்பவன் துணிந்து இங்கே போராடி ஜெயிக்கின்றான்! தன்னம்பிக்கை என்னும் கதாயுதம்! தந்திடுமே என்றும் வாழ்க்கையெனும் போர்க்களத்தில் போராளிக்கு பெரும் வெற்றி! ஊக்கத்தை தொலைத்தோருக்கு என்றுமே துக்கம்தான்! தூக்கத்தை விரும்புவோருக்கு வாழ்க்கையில் என்றும் வெற்றிடம் தான்! வெற்றிகளை குவித்திட்டோர் வீண்ஜம்பம் பேசுவதில்லை! போற்றி பாடல்களை விரும்பிட்டோருக்கு ஏற்றம் என்றுமே நிலைப்பதில்லை! வஞ்சகம் வன்மம், பகை, சூது, பொறாமை, எரிச்சல் பொய் , களவு ,புனைச்சுருட்டு என்று பலவித ஆயுதங்கள்! போர்க்களத்தில் இத்தனையும் சமாளிக்கும் அன்பு எனும் ஒற்றை ஆயுதம்! வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அன்பும் நம்பிக்கையும் நம

இந்து மாயாபஜாரில் போனமாதம் வெளியான சிறுவர்கதை!

Image
இந்து நாளிதழின் சிறுவர்களுக்கான இணைப்பு மாயாபஜாரில் எனது சிறுவர்கதைகள் அவ்வப்போது பிரசுரம் ஆவதை அறிந்திருப்பீர்கள்! போனமாதம் பிரசுரம் ஆன கதை ஒன்று உங்களின் பார்வைக்கு! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து செல்லுங்கள்! நன்றி!

தினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை!

என்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை பொழிகிறது அன்னையின் அன்பு மொழி! என்றும் என் இதயத்தில் இடம்பிடிக்கிறது தந்தையின் நட்பு மொழி! என்றும் என் இதயத்தில் இதமளிக்கிறது என்னவளின் சைகை மொழி! என்றும் என் இதயத்தில் முள்ளாய் குத்துகிறது துரோகத்தின் மவுன வலி! என்றும் என் இதயத்தில் புதைந்து கிடக்கிறது அடங்கிப்போன ஆசைகளின் மவுனமொழி! என்றும் என் இதயத்தில் ரணமாய் ஆறாதிருக்கிறது நாவினால் பிறிதொருவன் சுட்ட வலி! என்றும் என் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறது குழந்தைகளின் குறும்பு மொழி! என்றும் என் இதயத்தில் ஒளிந்திருக்கிறது தேசத்தின் பக்தி வழி! என்றும் என் இதயத்தில் வழிந்தோடுகிறது இரக்கமென்னும் ஈர ஆறு! என்றும் என் இதயத்தில் நினைவாக பூத்திருக்கிறது பால்யத்தின் பருவ மொழி! என்றும் என் இதயத்தில் லயித்திருக்கிறது என் தாய் தமிழ் மொழி! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!