Posts

Showing posts from July, 2014

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 11

Image
ஜோக்ஸ்! 1.       என் மனைவி இதுவரைக்கும் வாயைத்திறந்து அது வேணும் இது வேணும்னு கேட்டதில்லை! அவ்வளவு நல்ல குணமா? நீ வேற அவளே வாங்கிட்டு என்கிட்ட பில்லை மட்டும் காட்டுவா! 2.       போர்க்களத்தில் இறங்கிவிட்டால் மன்னரை கையில் பிடிக்க முடியாது? அவ்வளவு வீரமாக போரிடுவாரா? ஊகும்! அவ்வளவு வேகமாக ஓடுவார்! 3.       மாப்பிள்ளை இடிஞ்சி போய் வந்திருக்காரா? என்ன விஷயம்? அடுக்குமாடி குடியிருப்பிலே ப்ளாட் வாங்கியிருந்தாராம்! 4.       அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே? பல் கூச்சம்னு சொல்லிப்போனா நாலு பேரோட சேர்ந்து பழகுனா கூச்சமெல்லாம் காணாம போயிரும்னு சொல்றாரே! 5.       தலைவரோட நிதி நிலைமை சரி இல்லை போல! எப்படி சொல்றே? சில்லறைக் கட்சிகளை கூட்டணியிலே சேர்த்துக்கிட்டா ஏதாவது சில்லரை தேருமான்னு கேக்கறாரே! 6.       மன்னருடைய உடல் வயிரம் பாய்ந்த உடல்! அவ்வளவு திடமா? ஊகும் அடிவாங்கி வாங்கி மரத்துப்போய்விட்டது! 7.       மனைவி ஊருக்குப் போனா சந்தோஷப்படாம ஏன் வருத்தமா இருக்கே? நிறைய ஹோம் ஒர்க் கொடுத்துட்டு போயிருக்காளே! 8.       ஹீரோவுக்கும்

மரபணு மாற்ற பயிர்களின் விளை நிலமாகும் இந்தியா! கதம்ப சோறு! பகுதி 46

Image
கதம்ப சோறு  பகுதி 46 தொடரும் ஆளில்லா ரயில்வேகேட் மரணங்கள்!       தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடந்தபோது ரயில் மோதி 18 பள்ளிக்குழந்தைகள் பலியான செய்தி வேதனை தந்தது. விபத்து நடந்தபின் ஆயிரம் காரணங்கள் கற்பிக்கப்படுகிறது. வேன் டிரைவர் புதியவர். போன் பேசிக்கொண்டு ஓட்டினார். மாற்றுப்பாதையில் அவசர அவசரமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று வேகமாக ஓட்டினார் என்று ஆயிரம் காரணங்கள். இந்த காரணங்கள் ஒன்றுகூட இறந்துபோன ஓர் உயிரையாவது திருப்பித் தர உதவுமா? எந்த விபத்து நடந்தாலும் அதைப்பற்றி ஆயிரம் விவாதங்கள் ஒருவாரம் இல்லை ஒருமாதம் வரை நடக்கிறது! பின் அப்படியே மறந்துபோய்விடுகிறோம். நாம் மட்டும் அல்ல அரசாங்கமும் கூட! சரி விபத்து நடந்துவிட்டது. அடுத்து நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து உடனே செயல்பட்டால் அடுத்து இதுமாதிரி நடக்க வாய்ப்பு இல்லை! உதாரணமாக ஆளில்லா ரயில்வே கேட் என்பதால் விபத்து. சரி இனி அந்த இடத்திற்கு ஆள் ஒருவரை நியமித்து கேட் மூடத்திறக்க செய்யலாம். இதை மாநில நிர்வாகமோ மாவட்ட நிர்

தன் குற்றம்

தன் குற்றம் “ என்ன மாமி! சவுக்கியமா? இப்பல்லாம் நம்ம ஆத்து பக்கம் வர மாட்டேங்கிறீங்க?” என்ற குரலைக் கேட்டு முருகர் சன்னதியில் கொடிமரத்தில் சேவித்துக் கொண்டிருந்த வசந்தா மாமி நிமிர்ந்தாள்.   “யாருடாப்பா அது? சங்கரனா? நன்னாயிருக்கியாடா கொழந்தை! ஆத்துல தோப்பனார், அம்மால்லாம் சவுக்கியமா? கொழந்தையை ஸ்கூல்ல சேர்த்திட்டியா?” விசாரித்துக் கொண்டே போனார்.    இதுதான் வசந்தாமாமியிடம் உள்ள ஒரு நல்லப் பழக்கம்! பழகிவிட்டால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு விசாரிப்பார். நாம் ஒரு வார்த்தை பேசிவிட்டால் பதிலுக்கு ஒருமணி நேரம் நம்மை விடமாட்டார். இதற்காகவே பார்த்தும் பார்க்காதது போல நழுவி விடுவது உண்டு. வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காப்பீடு முகவர், மல்டிலெவல்மார்க்கெட்டிங் என்று எதையாவது இன்னும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருப்பார்.    தன்னுடைய பணி நிமித்தமாக அடிக்கடி வெளியே வருவார். அப்போதெல்லாம் மதிய வேளையில் எங்கள் ஊரில் உள்ள குருக்கள் வீட்டில் தான் ஆகாரம். வெளியே சுற்றிக் களைத்துப் போய் வருவார்.  நல்ல உச்சிவெயில் மண்டையை பிளக்கும். “ஏம் மாமி? இவ்ளோ கஷ்டப்படறேள்? உங

வாரமலர் இதழில் என்னுடைய ஜோக்!

Image
வாரமலர் இதழில் என்னுடைய ஜோக்! வணக்கம் அன்பர்களே! வலைப்பூவிலும் முகநூலிலும் என்னதான் எழுதினாலும் அச்சு ஊடகத்தில் வார மாத இதழ்களில் நம் படைப்புக்கள் அச்சேறினால் அளவிட முடியாத மகிழ்ச்சிதான். அந்த மகிழ்ச்சி எனக்கு சில முறை அரங்கேறி இருக்கிறது.    முதன் முதலில் கோகுலம் சிறுவர் இதழில் என் படைப்பு பிரசுரம் ஆனது. பின்னர் இருபது வருடங்கள் கழித்து பாக்யா இதழில் எனது கவிதைகளும், நகைச்சுவைகளும், ஒரு கதையும் தொடர்ந்து சில இதழ்களில் வெளிவந்தது. அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியும் ஊக்கமும் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எனது படைப்புக்களை அனுப்பத் தூண்டியது.    கடந்த மே மாதம் சில ஜோக்குகளை வாரமலர் இதழுக்கு அனுப்பி இருந்தேன். அதில் ஒன்று இந்த வார வாரமலர் இதழில் பிரசுரம் ஆகி எனக்கு இன்ப அதிர்ச்சியினை அளித்தது.   என்னுடைய 13வது வயதில் எனக்கு எழுத்து பழக்கமானது 18வது வயதில் முதல் சிறுவர் கதை பிரசுரம் ஆனது. கையெழுத்துப் பத்திரிக்கை எல்லாம் நடத்தினேன். எல்லாம் 2000 வருடம் வரை. ஆனாலும் அதன் பின்னர் என் எழுத்தில் தோய்வுநிலைதான். சில வருடங்கள் எழுதுவதை நிறுத்தி இருந்தேன். பின்னர் டியுசன் மாணவர்களுக்காக சில

தளிர் சென்ரியு கவிதைகள் 7

Image
   தளிர் சென்ரியு கவிதைகள் 7  1. மண்ணை அள்ளினார்கள்     வாயில் விழுந்தது     மண்!    2. வற்றிய குளங்களில்     புதைந்தது    விவசாயம்!  3. விஷம் என்றெழுதி     விற்பனை!    விலைபோகும் இளைஞர்கள்!   4. ஊரெல்லாம் ஒரே மாசு!     உறக்கத்தை இழந்தாச்சு!     நகரமென்று பேராச்சு!   5. வெள்ளுடை வியாபாரிகள்      விற்பனைக்கு வந்தது       மருத்துவம்!    6. எங்கும் இரசாயணம்!       மங்கிப் போனது       மனித ஆயுள்! 7.           வேகப்பந்தயம்! விலை போனது!  உயிர்! 8.           உச்சிக்குப் போனது விலை!   உயர வாய்ப்பு இல்லாத   ஏழை! 9.           மாசு உள்ளே நுழைந்ததும் மறைந்து போனது  மழை! 10.       ஏற்றிவிட்டார்கள் இறங்கிப்போனது வாழ்க்கை! பெட்ரோல்! 11.       ஆளில்லா கடவுப்பாதை! அழித்துவிட்டது    குழந்தைகளின் எதிர்காலம்! 12.       நீரோடு வாழ்க்கை! நீருக்காக போராட்டம்! தனுஷ்கோடி! 13.       கச்சத்தை தேடி எச்சத்தை தொலைக்கிறார்கள் மீனவர்கள்! 14.       கரையிலா பயணத்தில் கரைந்துகொண்டிருக்கிறது     கடலோட

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 66

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 66 வணக்கம் நண்பர்களே! கடந்த பகுதிகளில் காலமாற்றத்தில் பொருட்களின் பெயர்கள் எப்படி மாறுகின்றன என்று பார்த்தோம். இந்த வாரம் கொஞ்சம் இலக்கணத்தினுள் சென்று பார்க்க இருக்கிறோம்.    நான் இலக்கிய சுவை பகிறும்போது உள்ளுறை உவமமாக சிறப்பாக பாடப்பெற்று வந்துள்ளது இந்த பாடல் என்று குறிப்பிடுவேன். அது என்ன உள்ளுறை உவமம்? அதைப்பற்றிதான் இன்று படிக்க இருக்கிறோம். உள்ளுறை உவமத்தை அறியும் முன் உவமம் என்றால் என்ன என்பதை பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். உவமானம், உவமேயம் பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இப்போது மீண்டும் பார்ப்போம்.  ஒரு கருத்தினை விளக்க இன்னொரு பொருளை ஒப்புமைப் படுத்திக் கூறுவது உவமை ஆகும். உதாரணமாக நல்ல அழகாக நிறமாக இருக்கிறாள் என்பதை ரோஜாப்பூ போல நிறமாக இருக்கிறாள் என்று சொல்வதுண்டு. இதில் ரோஜாப்பூ என்பது உவமை அல்லது உவமம் எனப்படுகிறது. பொதுவாக உவமம்; வினை, பயன், வடிவு, வண்ணம் என நான்கு வகைகளில் பயன்படுத்தப்படும். சிங்கமென கர்ஜித்தான்  - வினை(செயல்) மாரிபோல வாரி வழங்கினான் – பயன் வஜ்ரம் பாய்ந்

வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!

Image
வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்! அந்த அழகான ஆற்றங்கரையோரம் உயரமாய் தென்னைமரங்கள் வளர்ந்திருந்தன. அதில் பறவைகளும் அணில்களும் கூட்டமாய் வசித்து வந்தன. தென்னை மரத்தில் இருந்து விழும் பூக்களையும் சிறு பூச்சிகளையும் தின்று வளர்ந்து வந்தது அணில்கள். அதில் ஒரு குட்டி அணில் ஒன்றும் வசித்து வந்தது. அது யார் சொல்வதையும் கேட்காது. தானாக முடிவெடுத்து திரியும். மரத்திற்கு மரம் தாவும். அந்த அணில் அப்படி தாவி தாவி வெகு தொலைவிற்கு ஒருநாள் வந்துவிட்டது.   அப்போது வானம் இருட்டியது. மேகங்கள் கூடின. சில்லென்ற காற்று வீசியது. அந்த காற்று அப்படியே பேய்க் காற்றாக மாறியது. கருத்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் இடிச்சத்தம் கேட்டது. வானில் மின்னல் பளிச்சிட்டன. இதையெல்லாம் பார்த்ததும் பாவம் மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த குட்டி அணிலுக்கு பயம் வந்துவிட்டது.       அந்த அணில் இதுவரை மழை, இடி, மின்னலை பார்த்ததே இல்லை! ஏதோ விபரீதம் என்று அது நினைக்கும்போதே காற்று மிக பலமாக வீசவும் அந்த தென்னை மரத்தில் இருந்து உலர்ந்த தேங்காய் ஒன்று டமால் என கீழே விழுந்தது. அதே சமயம் பலத்த தூறல் விழவும் அணிலு மி