Posts

Showing posts from August, 2017

தினமணி கவிதை மணியில் என் கவிதை!

கண்ணால் காண்பதும்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  27th August 2017 03:25 PM   |    அ+ அ  அ-     |   கண்ணால் காண்பதும் பொய்யாகும் காட்சிகள் தெளிவில்லாத போது! கயிறு கூட பாம்பாகத் தெரியலாம் மனதில் தைரியம் இல்லாத போது! கடவுளும் கூட கல்லாகலாம் உள்ளத்தில் நாத்திகம் உருவெடுக்கும்போது! நல்லவன் கூட தீயவனாகலாம் நமக்கு பிடிக்காத போது! மேதைகள் எல்லாம் பேதைகள் ஆகலாம் மூளை மழுங்கும் போது! பார்வைகள் குறைகையில் பார்க்கும் காட்சிகள் சிறுக்கையில் காமாலை பீடிக்கையில் காண்பவை எல்லாம் பொய்யாகலாம்! எது பொய்? எது மெய்? எது உண்மை? எது போலி? பார்த்து அறிவதிலும் சில பாதிப்புக்கள் இருக்கத்தான் செய்யும்! நமக்குப் பிடித்தவன் தவறே செய்தாலும் நல்லவனாய் காட்டும் கண்கள்! நமக்கு வேண்டாதவன் நல்லதே செய்தாலும் தீயோனாய் காட்டிவிடும்! உள்ளம் நினைப்பதை ஒளிப்படமாய் காட்டும் கண்கள்! உள்ளம் வெண்மையானால் உலகம் வெண்மையாக காட்டும்! உள்ளம் கருத்தால் உலகமும் இருண்டு போய்விடும்! கண்ணால் காண்பதும் இருவகை! புறக்கண்! அகக் கண் இரு பார்வை! இரண்டும் வெளுத்தால்   கண்ணால் காண்பதெல

தினமணி கவிதை மணியில் என் கவிதைகள்!

தினமணி கவிதை மணி இணையப்பக்கத்தில் வாரம் தோறும் என் கவிதைகள் பிரசுரம் ஆவதை அறிந்திருப்பீர்கள்! போன வாரமும் இந்த வாரமும் பிரசுரம் ஆன கவிதைகள் உங்கள் பார்வைக்கு.  கவிதைக்கு வாரா வாரம் அவர்களே ஓர் தலைப்பு தருவார்கள். அந்த தலைப்பில் எந்த வகைமையில் வேண்டுமானாலும் கவிதைகள் அனுப்பலாம். சனிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். திங்களன்று பிரசுரம் ஆகும். சன்மானம் எதிர்பார்க்க முடியாது. நம் படைப்பு ஊடகத்தில் பிரசுரமாகும் என்ற திருப்தியே சன்மானம். ஆர்வமுள்ளவர்கள் தினமணி இணையப்பக்கத்திற்கு சென்று முயற்சிக்கலாம். வரும் வார தலைப்பு. கண்ணால் காண்பதும்.  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  -  askdinamani@dinamani.com இனி என்னுடைய கவிதைகளை நீங்கள் படிக்கலாம்! மழைநீர் போல:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   12th August 2017 04:02 PM   |     அ+ அ  அ-     |   வான் சிந்தும் மழைத்துளிக்கு நிறமில்லை! மனமில்லை! சுவையில்லை! அது தான் சேரும் நிலத்தினைச்சார்ந்து உவர்ப்போ கசப்போ இனிப்போ என்று ஏதொவொரு சுவை பெறுகிறது! கடலில் விழுந்தால் உப்பாகிறது! செம்மண்ணில் விழுந்தால் செந்நீரா

இவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்!

Image
இவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்!   அரபு நாட்டில் உமர் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். நமது அரசியல்வாதிகள் போல பந்தாவும் பகட்டும் அவரிடம் கிடையாது. இருப்பதைக் கொண்டு எளிமையாக வாழ்ந்த அவர் மக்களிடம் நன்மதிப்பு பெற்றிருந்தார்.    ஒரு சமயம் அவர் ஏமன் நாட்டின் மீது படையெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த படையெடுப்பில் உமர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் உமர் கைப்பற்றினார். பின்னர் அவைகளை மூட்டையாக கட்டி தம் நாட்டுக்கு கொண்டுவந்தார்.     இன்றைய தலைவர்கள் போல அதை தாமே அனுபவிக்க நினையாமல், அந்த பொருள்களை எல்லாம் தன் வீரர்களுக்கு ஏற்ற தாழ்வு இன்றி சமமாக பங்கிட்டு கொடுத்தார். அதே போல தனக்கும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டார்.     ஏமன் நாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களில் விலை உயர்ந்த ஒரு பட்டாடையும் இருந்தது. அதை அனைவருக்கும் பங்கிட்ட போது ஒரு சிறு துண்டே அனைவருக்கும் கிடைத்தது. அந்த துணியில் தனக்கு மேலாடை தைத்துக் கொண்டார் உமர்.    அன்று மக்களுக்கு இஸ்லாம் மதத்தின் உயர்வை பற்றி பேசுவதற்காக மதினா நகரத்தில் இர

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93 1. அந்த கட்சியோட மேடைப் பேச்சாளர் எதுக்கு திடீர்னு தனக்கு கட்சியிலே பொறுப்பு வேணும்னு கேட்டு அடம்பிடிக்கிறாரு!    “பொறுப்பில்லாம பேசறாரு”!ன்னு யாரும் விமர்சனம் பண்ணிடக் கூடாதாம்! 2.  பையன் கமல் ரசிகன்!     இருக்கட்டும்! அதுக்காக இந்த வாரம் வீட்டுல இருந்து யாரு எலிமினேட் ஆகனும்னு ஒரு நாமினேஷன் வைச்சிக்கலாம்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை! 3.   .  மந்திரியாரே! அரண்மனை மேன்மாடத்தில் நிறைய புறாக்கள் கூட்டமாக உள்ளதே என்ன விஷயம்?   ஆட்சியின்  அவலங்களை புறாத் தூது மூலமாக மக்கள் அனுப்பி உள்ளார்கள் மன்னா!  4. பிக் பாஸ் நிகழ்ச்சியிலே கலந்துக்க வந்த வாய்ப்பை நம்ம தலைவர் மறுத்துட்டாராமே ஏன்?    அங்கேயும் “ஓட்டு” வாங்கணும்னு சொன்னாங்களாம்! 5  ஜெயிலுக்கு போன தலைவரை மீட் பண்ண போனியே என்ன ஆச்சு!    ஷாப்பிங் போயிருக்காரு! பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க! 6.  பேச்சாளர்:   எங்கள் கட்சி தலைவர் “சமரசத்துக்கு” தயார் என்று அறிவித்த வேலையில் தக்காளி விலையை ஏற்றி சதி செய்த எதிர் கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன்! 7,  த

தினமணி கவிதை மணியில் என் கவிதைகள்!

தினமணி கவிதை மணி இணைய பக்கத்தில் சென்ற திங்களன்றும் இன்றும்  வெளியான எனது கவிதைகளை தங்களின் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன்!   தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமத்திற்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்! ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   31st July 2017 04:24 PM   |     அ+ அ  அ-     |   ஒரு புள்ளியில் தொடங்கிய வரிவடிவம் ”அ”கரம் என்ற எழுத்தானது! ஒரு புள்ளியில் தொடங்கும் ஓவியனின் தூரிகை அழகிய சித்திரம் தந்தது! ஒரு புள்ளியில்  தொடங்கி சந்திக்கும் கோடுகள் இணைகையில் வட்டம் வந்தது. எத்தனை பெரிய சரித்திரங்களும் தொடங்கியது ஒரு புள்ளியில் தான்! ஒற்றாய் ஒற்றி வரும் புள்ளிகளால் நற்றாய் தமிழ் சிறக்கிறாள்! அஹிம்சை வழியில் சாதித்த காந்திக்கும் தென்னாப்பிரிக்க சம்பவம் ஒரு புள்ளியாய் தொடங்கிய பயணம் தான்! மதிய உணவு தந்த கருப்பு காந்திக்கும் ஏழைச்சிறுவன் பதில் ஒரு புள்ளியாய் தொடங்கியது! அடிமைத்தளைகளை அகற்ற தேசத்தலைவர்களுக்கு ஆகஸ்ட் புரட்சி ஓ

” பஞ்ச்”சர் பாபு - பகுதி 1

Image
இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்றொரு பகுதி வருகிறது! அதற்கு நானும் சில பஞ்ச்கள் அனுப்பி பிரசுரம் ஆகியிருக்கிறது. பிரசுரம் ஆகாத பஞ்ச்கள் நிறைய இருக்கிறது!     அந்த பஞ்ச்களை அவ்வப்போது இப்பகுதியில் வெளியிட உத்தேசம்! உங்கள் ஆதரவை பொறுத்து இந்த பகுதி தொடரும். இந்த வார “ பஞ்ச்’ சர் பாபு ! செய்தி:  பெங்களூர் சிறையில் கன்னடம் கற்கிறார் சசிகலா: டிஐஜி ரூபா தகவல் பஞ்ச்:  தோழியை ஆட்டுவிச்சது முடிஞ்சிருச்சு! இனி மொழியை ஆட்டுவிக்க போறாங்களோ? செய்தி:  நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.. பஞ்ச்: “நாடகத்துலே உங்க “ரோல்” என்னன்னு சொல்லவே இல்லையே தலைவரே! செய்தி:  ஏழு வயதில் இருந்தே பொது வாழ்வில் இருப்பவன் நான்- எச்.ராஜா பஞ்ச்: அப்பவே வீட்டுல “தண்ணி” தெளிச்சி விட்டுட்டாங்களா? பஞ்ச்: தமிழக மக்களோட ஊழ்வினைதான் காரணம்! செய்தி:  சசிகலா - ரூபா மோதல் திரைப்படமாகிறது - 'குப்பி' ரமேஷ் இயக்குகிறார் பஞ்ச்: படத்துல “பஞ்ச்” டயலாக் எல்லாம் இருக்குமா? செய்தி:  ஏரி குளங்களோ