Posts

Showing posts from 2017

இம்மாத கவிச்சூரியன் மின்னிதழில் வெளியான ஹைக்கூக்கள்!

Image
கவிச்சூரியன் மின்னிதழில் இந்த மாதம் வெளியான எனது ஹைக்கூக்கள்! பதிவிட்ட கிறிஸ்து ஞான வள்ளுவன் சாருக்கும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து உதவிய ரேகா ராகவன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவைப்பற்றிய கருத்துக்களை பதிந்து செல்லலாமே! நன்றி!

வாழ்க்கைச்சக்கரம்! கவிதை!

Image
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற என் கவிதை. தேர்ந்தெடுத்த நடுவர் கி. ரவிக்குமார் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றி! படக்கவிதை. கவிதைப் போட்டி! ஒளிப்படமாய் விளங்குகிறது எங்கள் வாழ்க்கை! ஒளிப்பதற்கு ஏதும் இல்லை! இருசக்கர வாகனத்தில் ஆறு பேர் பயணிக்கிறோம்! துவிசக்கரம் போல சுழல்கிறது நடுத்தரமான வாழ்க்கைப் பயணம்! அதிக சுமைதான்! ஆனாலும் இழுத்துக் கொண்டே ஓடுகின்றோம்! சுமக்க கஷ்டப்படுவதில்லை! சோகங்களைக் கூட சுமைகளிடையே தொலைத்துவிட்டு சுகங்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்! கல்யாணம் சீர்வரிசை, காதுகுத்து காய்ச்சல் தலைவலி, திடீர் பயணம் என்று தினம் தினம் முளைக்கும் புது சுமைகள் நடுத்தரனின் வாழ்வில் நாள்தோறும் சகஜமே! நடுத்தரனுக்கு தோள் கொடுத்து உதவும் இரு சக்கரப்பிறவி நான்! என்ன செய்ய? அவன் பாரத்தை குறைக்க என் மீதும் பாரமேற்றிக் கொள்கிறேன்! நடுத்தரனின் சுமைகளோடு ஒப்பிட்டால் என் பாரம் குறைவுதான்! இறுதி மூச்சிருக்கும் வரை இழுக்கின்றான் குடும்ப பாரம்! இறுதி எண்ணெய்த்துளி வரை அவனோடு அவன் குடும்பம் சுமக்கிறேன்! இறக்கிவிட்டு பயணிக்கை

தமிழ் இந்து நாளிதழில் வெளியான பஞ்ச்கள்!

Image
தமிழ் இந்து நாளிதழில் நேற்றும் 25-12-17- இன்றும் வெளியான 26-12-17 எனது பஞ்ச்கள்! தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் இந்து குழுமத்தினருக்கும் ஊக்கமளிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் வலைப்பூ வாசக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! நன்றி!

இந்த வார தினமணி-கவிதை மணியில் என் கவிதை!

இந்த வார தினமணி கவிதை மணியில் இடம்பெற்ற எனது கவிதை. கொண்டாடப்படும் தினங்கள்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  25th December 2017 05:19 PM   |    அ+ அ  அ-     |   வாழ்க்கையை ரசித்து வாழ்கையில் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படும் தினங்களே! எல்லா நாளும் இனிய நாளே! அந்நாளை நல்லதாக்குவது தீயதாக்குவதும் நம் செயல்களே! ஒவ்வொரு நொடியும் நமக்கான பொழுது! உணர்ந்து பணியாற்றினால் உருவாகும் உனக்கான நாள்! விடியும் நாள் வெறும் வெள்ளைக் காகிதம்! அதில் வண்ணங்கள் தீட்டுவது நம் எண்ணங்களே! இனிப்பாகவும் கசப்பாகவும் கறுப்பாகவும் வண்ணமாகவும் நல்லதாகவும் கெட்டதாகவும் கொண்டாட்டமும் குதூகலமாகவும் வருத்தமாகவும் துயரமாகவும் மாற்றுவது நம் செயல்களே! பிறந்தநாள்! நினைவுநாள்! பண்டிகைநாள்! விடுமுறைநாள்! திருமணநாள்! என்று விதவிதமாய் பெயர் சூட்டி வித்தியாசப்படுத்தி விழாக்கொண்டாடுகிறோம்! கொண்டாடப்படும் தினங்களென்றால் கொள்ளை மகிழ்ச்சித்தான்! எல்லோரையும் மகிழ்விக்க நல்லோரால் உருவானதுதான் கொண்டாடப்படும் தினங்கள்! கொண்டாட்ட தினங்களை சந்தோஷமாய் கொண்டாடுவோம்! இடைவிடாத பண்டிகைக

இந்த மாத கொலுசு மின்னிதழில் வெளியான எனது படைப்புகள்!

Image
கொலுசு மின்னிதழில் சமீப காலமாக எழுத ஆரம்பித்துள்ளேன். டிசம்பர் மின்னிதழில் வெளியான படைப்புக்கள் தங்களின் பார்வைக்கு. தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தமிழ் இந்துவில் வெளியான எனது பஞ்ச்கள்!

Image
தமிழ் இந்து நாளிதழில் கடந்த வாரம் பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் வெளியான எனது பஞ்ச்கள் உங்கள் பார்வைக்கு. இந்து குழுமத்தினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினர் மற்றும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னுட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் வெளியான கதை!

Image
இந்து பத்திரிக்கை புதன் கிழமை தோறும் மாயாபஜார் என்ற பெயரில் சிறுவர்களுக்கான இணைப்பு வெளியிடுகிறது. கடந்த வாரத்தில் அதில் எனது சிறுவர்கதை ஒன்று பிரசுரமானது. வெளியிட்ட இந்து குழுமத்தினருக்கும் பாராட்டிய தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! படைப்பு இதோ! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

எழுத்தாள்பவர்கள் வரிசையில் நான்!

Image
தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தில் நண்பர் வேலூர் வெ.ராம்குமார் அவர்கள் குழுவில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டு வருகிறார். அதற்கு கலைவண்ணம் படைப்பவர் நண்பர் கமலக்கண்ணன். பல ஜாம்பாவன்களை பற்றி எழுதும் அந்த பதிவில் 32வது அத்தியாயமாக என்னைப் பற்றிய விபரங்களை நண்பர் எழுதி அசத்தியுள்ளார். வலையுக நண்பர்கள் படித்து ரசிக்க அந்த பதிவை கீழே தந்துள்ளேன். நன்றி! வலைப்பூ நண்பர்களால்தான் மெருகேற்றப்பட்டேன். இந்த பெருமிதமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்கிறேன்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தினமணி கவிதை மணியில் போனவாரம் வெளியான கவிதை!

சென்ற வார தினமணி கவிதை மணி இணையதளக் கவிதை உங்களின் பார்வைக்கு! மனதிற்கிட்ட கட்டளை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  16th December 2017 03:53 PM   |    அ+ அ  அ-     |   ஓடி ஆடி விளையாடுவது போல ஓடிக்கொண்டே இருக்கும் மனசு! ஒருநிலையில் கொள்ளாமல் ஓட்டம் எடுக்கும் மனசு! கடலலைகள் பாய்வது போல காற்றுக்கு அலைவது போல நொடிக்கொரு முறை அலைபாயும் மனசு! அலை பாயும் மனசு! அடக்கிவிடும் நம் உயர்வு! உச்சத்தில் ஏறியவர் கூட  உடனடியாக சரிவார்  உறுதியில்லா மனசால்! எண்ணம் போல வாழ்க்கை என திண்ணமாய் சொன்ன பெரியவர்கள் திசை மாறும் மனசை திருப்பி விட பயிற்றுவித்தனர்! தறிகெட்டோடும் மனசை தடுத்து நிறுத்தி கட்டளையிட்டனர்! ஓடாதே! ஒருநிலையில் நில்லெனவே தியானத்தில் நிலைநிறுத்தினர்! முறையான பயிற்சியாலே மூச்சிழுத்து விட்டு யோக நிலைக்கு அழைத்தனர் மனதிற்கு கட்டளையிட்டு  மடியில் இருத்தி வைத்தனர்! கட்டுண்ட மனதாலே கவலை போம்! சட்டென்று மாறும் மனதாலே அவதிதான் என்றென்றும்! திக்கெட்டும் உன் கைக்கெட்ட திடம் கொண்டு உன் மனதை கட்டிவை! உலகெல்லாம் ஆட்டுவிக்க வேண்டுமென்றால் உன் ஆழ்மனசை க

தினமணி கவிதை மணியில் இந்த மாதம் வெளியான எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் இடம்பெறுவதை அறிந்திருப்பீர்கள்! இந்தமாதம் வேலைப்பளுவினால் அதை உங்களுடன் வாரா வாரம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை! இந்த மாதம் வெளியான  எனது  இரண்டு கவிதைகள் இதோ! விடையில்லா விடுகதை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  03rd December 2017 06:19 PM   |    அ+ அ  அ-     |   வாழ்க்கை ஓர் விடுகதை என்றே விடைதேடிப் புறப்பட்டேன்! விடியல்கள் தோறும் புதுப்புது விடுகதைகள் முளைத்தது! நித்தம் ஒரு நாடகம்! சித்தம் போன போக்கில் பயணிக்கிறது வாழ்க்கை! ஆடிக்கொண்டிருப்பது நாமென்றாலும் ஆட்டுவிப்பது நாமில்லை! நான் நானென்றே சொல்லித்திரிகிறோம் உண்மையில் “நான்” யாரென்றே தெரியாமல்! ஊரெல்லாம் அடித்து சேர்த்து வைத்தவனுக்கும் பாரெல்லாம் கொடிகட்டி பறப்பவனுக்கும் நாடெல்லாம் ஓர் குடையில் ஆண்டவனுக்கும் கூட விடையில்லா விடுகதைதான் வாழ்க்கை! குவித்த கோடிகள் கூட வருவதில்லை! கொண்டிட்ட பழிச்சொல் மாண்டும் மறைவதில்லை! சேர்த்திட்ட புகழுக்கு மறைவில்லை! சேர்ப்பதும் தோற்பதும் வாழ்வதும் வீழ்வதும் நம் கையில் இல்லை! ஒரு நொடியில் உதிக்கும் ஆசை ஓரு படுகுழியில்

குமுதத்தில் வெளியான எனது ஜோக்!

Image
போன வார குமுதத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு எனது ஜோக் வெளியானது. கொஞ்சம் சலித்து போன சமயத்தில் ஒரு தூண்டில் போட்டாற்போல மீண்டும் ஜோக் எழுத உற்சாகம்தொற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் முன்பு போல எழுத முடிவதில்லை. எனினும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அல்லவா? தொடர்ந்து முயல்வோம்!  குமுதம் ஆசிரியர் குழுவினருக்கும் பதிவிட்டு வாழ்த்திய ஏந்தல் இளங்கோ சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி!

இந்த வாரத்தில் இந்துவில் வெளியான எனது பஞ்ச்கள்!

Image
தமிழ் இந்து நாளிதழில் இந்த வாரம் வெளியான எனது பஞ்ச்கள் கீழே! ஆதரவு நல்கும் இந்து குழுமத்திற்கும் ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

இந்த வாரம் திங்களன்று கவிதை மணி இணைய தளத்தில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்! முகப்பு     ஸ்பெஷல்ஸ்     கவிதைமணி என் முதல் கனவு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  25th November 2017 03:52 PM   |    அ+ அ  அ-     |   ஒவ்வொரு நாளும் ஒர் கனவோடு விடிகிறது! ஒவ்வொன்றும் புதிது புதிதாய்! ஒளிப்படமாய் மனதில் ஓடினாலும் வெளிப்படையாய் சொல்ல மறக்கிறது! ஆழ்மனதில் புதைந்த நினைவுகள் கண் மூடி உறங்குகையில் கனவாக ஓடி மகிழ்விக்கின்றன! எல்லோருக்கும் ஓர் முதல் கனவிருக்கும்! எல்லோருக்கும் அது நினைவாவதில்லை! நடிக்க விரும்புபவனுக்கு ஹீரோ ஆவது முதல் கனவாயிருக்கும்! படிக்க விரும்புபவனுக்கு பாடத்தில் முதலிடம் வருவது முதல் கனவாயிருக்கும்! தொழிலில் சாதிக்கத் துடிப்பவனுக்கு தொழிலதிபர் ஆவது பெருங்கனவாயிருக்கும்! என் முதல் கனவு என்பதெல்லாம் எழுத்தறிவிக்கும் ஆசான் ஆவது! வகையாய் வாய்ப்புக்கள் தவறியபோது வருந்தினேன் கனவு கலைந்து!  முதல் கனவு  கலையலாம்  முடிவு வரை தொடரும் கனவுகள்  என்றாவது ஒருநாள்

தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் வெளியாவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தவாரம் என் மகள்கள் பெயரிலும் இரு கவிதைகள் எழுதினேன். எனது ஒன்று என மூன்று கவிதைகள் பிரசுரம் ஆயின. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்! யாருமில்லாத மேடையில்: எஸ். வேதஜனனி By  கவிதைமணி   |   Published on :  19th November 2017 04:52 PM   |    அ+ அ  அ-     |   யாருமில்லாத மேடையில் அரங்கேறுகிறது வாழ்க்கை நாடகம்! நாளொரு காட்சிகள்! பொழுதொரு வசனங்கள்! இயக்கி வைக்கிறான் இறைவன்! நாடக மேடையில் விமர்சனம் உண்டு! நடக்கும் வாழ்க்கையிலும் விமர்சனம் உண்டு! நாடக மேடைக்கு பார்வையாளர்கள் உண்டு! வாழ்க்கை நாடகத்தில் பார்வையாளர் நாமே!  மேடை நாடகத்திற்கு கட்டணச்சீட்டு! வாழ்க்கை நாடகத்திற்கு பயணச்சீட்டு! நாளொன்று கழிகையில் செலாவணி ஆகிறது மேடைக்காட்சிகள்! நெடுந்தொடர் ஆயினும் நிறைவே பெறுவதில்லை வாழ்க்கை நாடகம்! யாருமில்லா மேடையில்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  19th November 2017 02:49 PM   |    அ+ அ  அ-     |   ரசிக்க யாருமில்லைதான்! ஆனாலும் அழகாய்

இந்து தமிழ் நாளிதழில் வெளியான முகப்பு பஞ்ச்

Image
இந்து தமிழ் நாளிதழில் நேற்று வெளியான பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் எனது கருத்து இடம்பெற்றுள்ளது. பதிவிட்ட பூங்கதிர் சாருக்கும் வாழ்த்துக்கள் நல்கிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் வெளியான எனது ஹைக்கூக்கள்!

Image
கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் நவம்பர் மாத இதழில் எனது சில ஹைக்கூக்கள் பிரசுரமாயின. பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழக எழுத்தாளர் குழுவில் பதிவிட்ட முத்து ஆனந்த் சாருக்கும் வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

பாவையர் மலர் இதழில் வெளியான எனது கவிதை!

Image
பாவையர் மலர்   நவம்பர் மாத  இதழில் எனது கவிதை பிரசுரமானது. பிரசுரித்த ஆசிரியர் திருமதி வான்மதி மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கொலுசு மின்னிதழில் வெளியான எனது ஹைக்கூக்கள்!

Image
நவம்பர் மாத கொலுசு மின்னிதழில் எனது சில ஹைக்கூக்கள் பிரசுரமாயின! பிரசுரம் செய்த கொலுசு மின்னிதழ் ஆசிரிய குழுவினர். வாழ்த்துக்கள் வழங்கிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்! இதே மின்னிதழில் எனது சிறுகதை ஒன்றும் பதிவானது. அது

தினமணி கவிதைமணியில் இந்தவாரம் வெளியான என் கவிதை!

தினமணி கவிதை மணியில் இந்தவாரம் வெளியான எனது கவிதை! தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு நல்கும் தினமணி குழுமத்தினருக்கும் எழுத ஊக்கமளிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் வலையக நண்பர்களுக்கும் அன்பின் நன்றிகள்! உன் குரல் கேட்டால்:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  12th November 2017 02:32 PM   |    அ+ அ  அ-     |   உன் குரல் கேட்கையில் பாடும் குயில்களும் பாட்டை நிறுத்தி சற்றே ஆவலுடன் செவிமடுக்கும்! உன் குரல் கேட்கையில் ஓடும் நதிகளும் ஒருநிமிடம் ஓசையின்றி நின்று போகும்! உன் குரல் கேட்கையில் செடியில் மொட்டுக்கள் மெல்ல இதழ்விரித்து புன் சிரிக்கும்! உன் குரல் கேட்கையில் ஆடும் மயிலினங்கள் மகிழ்ந்து மகிழ்நடனம் புரியும்! உன் குரல் கேட்கையில் வானில் ஓடும் முகிலினங்கள் குளிர்ந்து மழை பொழியும்! உன் குரல் கேட்கையில் பாடும் புல்லினங்கள் பரவசமாகி கானம் சேர்ந்திசைக்கும்! உன் குரல் கேட்கையில் பசுவின் மடியில் தானாய் பால் சுரக்கும்! உன் குரல் கேட்கையில் முரடனின் மனதில் கூட அருள் சுரக்கும்! ஒடுங்கும் முதுமை கூட உன் குரல் கேட்டால் ஓடி ஆ

மீண்டும் பாக்யாவில் ஜோக்ஸ்!

Image
சென்ற வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் மூன்று பிரசுரம் ஆனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது நகைச்சுவைகள் பாக்யாவில் இடம்பெற்றதில் மகிழ்ச்சி! பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் நண்பர் எஸ்.எஸ். பூங்கதிர் சாருக்கும். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் இதை பதிவிட்டு வாழ்த்திய வேளாங்கண்ணி சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றிகள்! கீழே ஜோக்ஸ் இந்து  தமிழ் நாளிதழிலும் போன வாரம் செவ்வாயன்று ஒரு முகப்பு பஞ்ச் இடம்பெற்றது. உடனே பகிரமுடியவில்லை! அது கீழே! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

இன்றைய தினமணி கவிதை மணியில் எனது கவிதை!

இன்றைய தினமணி கவிதை மணி இணையதளக் கவிதைப் பக்கத்தில் வெளியான எனது கவிதை! தொடர்ந்து ஆதரவளித்து என்படைப்புக்களை வெளியிட்டு வரும் தினமணி குழுமத்திற்கு மிக்க நன்றி! கவிதையை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் வலையக நட்புக்களுக்கு மனமார்ந்த நன்றி! மேகத்தில் கரைந்த நிலா:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  04th November 2017 05:43 PM   |    அ+ அ  அ-     |   கிராமத்து இரவொன்றின் நீள்பொழுதில் தனியனாய் எனக்கு நீண்ட துணையாக வருகின்றது நிலா! அதன் மோனத்தில் வசீகரித்து மூழ்கையில் வதனத்தில் உதிக்கிறது ஓர் புன்னகை! நடுவானில் கம்பீரமாய் ஒளிவீச சுற்றிலும் மின்மினிகளாய் நட்சத்திரங்கள்! இரவின் கருமையை இரவின் தனிமையை அழகாக்கிய நிலவை ரசிக்கையில் ஆபத்தொன்று சூழ்ந்தது! கருமேகக் கூட்டமொன்று உருவாகி நிலவினை விழுங்க வேகமெடுத்தது! பதறிப்போனேன்! ஆனால் பதறவில்லை நிலா! மேகம் நெருங்க நெருங்க ஒளியிழந்தது பூமி! தன் காதலியை காக்க முடியாமல்! மேகம் சிறிது சிறிதாய் நிலவை விழுங்க நிமிடங்கள் நீண்டது! கருமேகத்தினுள் ஓளிவெள்ளம் பாய்ச்சி கரைந்து மறைந்த நிலா மெல்ல தலைகாட்டியது!

இன்றைய இந்து நாளிதழில் எனது பஞ்ச்!

Image
இன்று வெளியான இந்து தமிழ் நாளிதழ் பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் எனது பஞ்ச் இடம்பெற்றுள்ளது. முதல் தகவல் தந்த சிவகுமார் நடராஜன் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு வரும் இந்து தமிழ் நாளிதழ் குழுமத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! பஞ்ச் கீழே! தங்களின் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்ச்சில் எனது பஞ்ச்

Image
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எக்ஸ்ட்ரா பஞ்ச் பகுதியில் வெளியான எனது கருத்து. முதல் தகவல் தந்த டாக்டர் லக்‌ஷ்மணன் சாருக்கும் தெளிவான படம் அனுப்பிய சிவகுமார் நடராஜன் சாருக்கும் வாழ்த்துக்களை பரிமாறிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழும நண்பர்களுக்கும் இந்து பத்திரிக்கை குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! மிக்க நன்றி!

இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!

தினமணி கவிதை மணி இணையதளத்தில் இன்று என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி ஆசிரியர் குழுவினர் மற்றும் தினமணி குழுமத்தினருக்கு நன்றி! தீ தின்ற உயிர்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   28th October 2017 03:58 PM   |     அ+ அ  அ-     |   தீயின் நாக்குகளை விட தீட்சண்யமாக்கி விட்டு சென்றிருக்கிறது கந்துவட்டி! கந்தை வேட்டி உடுத்தும் ஏழைக்கு ஆசைக்காட்டி மோசம் செய்திருக்கிறது கந்துவட்டி! நூற்றுக்கு நூறு வட்டி வாங்கிய பின்னும் தீரவில்லை அசல்! அதனால் உயிராடியது ஊசல்! ஆட்சியாளர்கள் காத்துக் கொண்டார்கள் தங்கள் ஆட்சியை! தடுக்கவில்லை கந்துவட்டி கும்பலின் ஆட்சியை! கொஞ்சம் மண்ணெண்ணெயும் ஒரு தீப்போறியும் நாலு பேரை பற்ற வைத்து காட்சியாக்கி தமிழகத்திற்கு தந்திருக்கிறது பேரதிர்ச்சியை! தீ தின்ற உயிர்கள்! கேட்பதெல்லாம் கந்து வட்டி அரக்கனிடமிருந்து மீட்சியை! மீட்டெடுக்க அரசு செய்யுமா முயற்சியை? தீ தின்ற உயிர் தீயாய் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது லட்சக்கணக்கான தமிழர்களின் நெஞ்சை! நெறிக்க வேண்டும் கந்துவட்