Posts

Showing posts from June, 2012

நெல்லையில் நித்தி நடத்திய யாகம்! கலக்கல் கதம்பம்!

Image
நெல்லையில் நித்தி நடத்திய யாகம்! தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து விடுபடவும் போலீஸ் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நித்தியானந்தா தனது சீடர்கள் மூலம்  ரகசிய யாகம், வழிபாடு செய்து வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. சிதம்பரம் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவில் இந்த ரகசிய யாகத்தை உச்சிகால பூஜைக்கு முன்பாக சிவாச்சார்யார்களை கொண்டு நித்தியின் சீடர்கள் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இதற்காக பட்டு வஸ்திரங்களும் நிறைய பூக்களும் தருவிக்கப்பட்டதாகவும் பூஜைக்கான நைவேத்தியங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்வாக அதிகாரியோ பட்டு வஸ்திரங்கள்  சார்த்த மும்பை பெரிய தொழில் அதிபர் பெயரில் அனுமதி வாங்கப்பட்டது. நித்தியானந்தாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது என்கிறார். இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.      இங்கே என் கேள்வி} நித்தியானந்தா ஒரு திருட்டு ஆசாமி என்று எல்லோரும் சொல்லி வரும் வேளையில் இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோவில் அர்ச்சகர்கள் செய்தது நியாயமா?

97000= 1000 கரூர் வைஸ்யாவின் கருணை!

Image
வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 97 ஆயிரம் ரூபாயில், லோக் அதாலத் மூலம் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே செலுத்துவது என செட்டில்மென்ட் ஏற்பட்டது. கரூர் வைஸ்யா வங்கியில் கடன் பெற்றவர்கள் தொடர்பான வழக்குகள், லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. லோக் அதாலத்துக்கு, மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த லோக் அதாலத்தில், கை விரல்களை இழந்து கஷ்டப்படும் தொழிலாளிக்கு யோகம் அடித்தது. பொன்னேரி தாலுகாவில் உள்ள மலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் கரூர் வைஸ்யா வங்கியில் தனிநபர் கடன் பெற்றிருந்தார். வட்டியுடன் சேர்த்து 96 ஆயிரத்து 903 ரூபாய் வங்கிக்கு அவர் திருப்பிச் செலுத்த வேண்டும். அவரால் செலுத்த முடியவில்லை. காரணம், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கையில் ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டன. இதனால், அவரால் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியவில்லை; வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனையும் செலுத்த முடியவில்லை. இவரது வழக்கு, லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருதரப்பிலும் பேச்சு

குளவி நண்பன்! பாப்பா மலர்!

Image
குளவி நண்பன்! மானூர் என்னும் அழகியசிற்றூரில்  விக்ரமன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். தாய் தந்தையரை இழந்த அவனுக்கு வயதான பாட்டி மட்டுமே துணை.  விக்ரமன் சுறுசுறுப்பானவன். புத்திசாலி. நன்றாக உழைப்பவனும் கூட பாட்டிக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்து வேலைகளில் உதவி செய்வான்.    ஒரு நாள் அவன் தன் குடிசை வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது குளவி ஒன்று அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. அது சுவற்றில் கூடு கட்ட முனைந்து கொண்டிருந்தது. எரிச்சல் அடைந்த  விக்ரமன் அதை விரட்டினான். ஒரு அட்டையை எடுத்து அதை அடிக்க முயன்றான்.     அப்போது அந்த குளவி பேசியது நண்பா! என்னை அடிக்காதே என்றது. விக்ரமன்ஆச்சர்யத்துடன் யாரது குளவியா பேசுவது என்றான். ஆம் குளவிதான் பேசுகிறேன். நண்பா என்னை அடிக்காதே! என்னுடைய உதவி உனக்கு ஒரு சமயத்தில் தேவைப்படும் என்னை விட்டுவிடு என்றது.  விக்ரமனும்குளவிதானே என்று எண்ணாமல் குளவியாரே உன்னை கொல்வதால் எனக்கும் ஒன்றும் இல்லைதான்! ஆனால் என்னை தொந்தரவு செய்யாமல் போய்விடு என்றான்.     குளவியும் நண்பரே! உனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் என்னை நினைத்து குளவி நண்

பசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி:

Image
ஈரோடு: பசுவின் கோமியம் மற்றும் சாணத்திலிருந்து, மருந்துப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில், ஈரோடு மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது. ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள், மெதுவாக இயற்கை வேளாண்மைக்கு மாறுகின்றனர். பஞ்ச கவ்யம் தயாரிப்பு:விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஈரோடு மாவட்டத்திலும், ஏராளமான விவசாயிகள், ரசாயன உரத்தை தவிர்த்து, பால், தயிர், மோர், நெய், சாணம், கோமியம் ஆகிய, மாட்டின் பொருட்களை வைத்து "பஞ்ச கவ்யம்' தயாரித்தும், சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றால் "ஜீவாமிர்தம்' தயாரித்தும், பயிர்களுக்கு தெளித்து, நல்ல மகசூல் காண்கின்றனர். நாட்டுப் பசுவை, ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையாகவே, ஈரோடு விவசாயிகள் கருதுகின்றனர். இதன் அடுத்த கட்டமாக, நாட்டுப் பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து, பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஈரோடு, சாவடிப்பாளையம், லக்காபுரம், கோபி, குட்டப்பாளையம் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சேவை அமைப்புகள் மற்றும் தனி ந

புகார் உண்டு! திகார் இல்லை! நான்ரசித்தசிரிப்புகள் 14

Image
       நான் ரசித்த சிரிப்புக்கள்! இது பொய் செய்தியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு!   ஏன்? மின்சாரம் தாக்கி இருவர் பலின்னு போட்டுருக்காங்களே!                       ராஜபாளையம் பேச்சி. தன்னை அரெஸ்ட் பண்ண போதுமான ஆதாரம் இல்லைன்னதும் தலைவர் என்ன சொன்னார்? புகார் உண்டு... திகார் இல்லைன்னு பஞ்ச் அடிக்கிறார்!                            வீ.விஷ்ணுகுமார் தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!   என்ன சொன்னார்? நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!                             வீ.விஷ்ணுகுமார். உன் புருஷனுக்கு இஷ்ட தெய்வம் எதுடி? எங்களுக்கு கல்யாணம் ஆனதிலிருந்து அவர் கும்பிடாத தெய்வம் இல்லை!                       ஆர்.சி முத்துக்கண்ணு. கோர்ட்டுக்கு ஆகும் செலவைக் கூட தலைவர் எப்படி எழுதறார் பார்! என்ன எழுதியிருக்கிறார்? நீதிக்கு தலைவணங்கிய வகைக்குனு எழுதி இருக்கிறார்!                             அம்பை தேவா. மன்னரின் திறமையை ஒரே வார்த்தையில் புகழ்ந்ததற்காக மன்னர் புலவரை சவுக்கால் அடிக்கிறாரே புலவர் அப்படி என்ன வார்த்தை சொல்லி

சானியாமிர்சாவை லவ்விய சந்தானம்!

Image
வாழ்க்கையில் சில கேரக்டர்கள் சுவாரஸ்யம்! எது நடந்தாலும் ஓக்கே! நான் இப்படித்தான் இருப்பேன்! என் வாழ்க்கை என்னுடையது நான் இப்படித்தான் வாழ்வேன் என்று வாழ்வது ஒருவகை! இந்த வகையினரின் நடத்தை பிறரை பாதிக்காமல் இருக்க வேண்டும்.     இன்னொரு வகை எல்லாவற்றிற்கும் பிறரை பழி போடுவது! கடவுளை குற்றம் சொல்வது. நான் பிறந்த நேரம் சரியில்லை அதான் இப்படி அல்லாடுறேன் என்று சதா புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் ஒரு ரகம்!  இவர்கள் வாழ்க்கை எப்போதும் இனிப்பது இல்லை!     நாம் பார்க்க போகும் கேரக்டர் சந்தானம்! சினிமா நடிகர் சந்தானம் போலவே ஒரு ஜாலி டைப் கேரக்டர்! கையில் காசிருந்தால் கர்ணன் தான்! கொடை வள்ளலாகி கூடியிருக்கும் தோழர்களுக்கு பாட்டில் பாட்டிலாய் சரக்கு சப்ளை செய்வார். காசு இல்லையேல் அன்று அவனுக்கு கொடுத்தோமே என்று கணக்கு பார்த்து அவனிடம் சென்று கேட்க மாட்டார். அப்படியொரு நல்ல குணம். வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதர் இந்த சந்தானம்.      இவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் ஏற்பட்டு விட்டது. சானியா மிர்சாவுடனான காதல் தான் அது. என்னடா சந்தானத்துக்கும் சானியா மிர்சாவுக்குமா? ஏ

நவரச நாயகன் நித்தி! காமெடி கும்மி!பேஸ்புக் போட்டோஸ்!

Image
 வணக்கம் போய் வரேன்! படங்கள் உதவி} பேஸ் புக், கூகுள் இமெஜஸ் தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

நியாயம்! ஒருபக்ககதை!

Image
நியாயம்! ஒவ்வொரு முறையும் ராகவனோடு கடைக்கு போகையிலும் கவனித்தாள் கோமதி. வெத்தலை பழம் பூ போன்றவைகளை அந்த கிழவியிடமே வாங்குவான். வேறு பலர் கூப்பிட்டாலும் காதிலேயே வாங்க மாட்டான்.   இத்தனைக்கும் அந்த கிழவி கறார் விலைதான் சொல்லுவாள் பத்து பைசா குறைக்கமாட்டாள். எல்லோரிடமும் பேரம் பேசி பொருள் வாங்கும் கோமதிக்கு கூட இந்த கிழவியிடம் பாச்சா பலிக்கவில்லை!   ஏம்மா என்கிட்ட ஒரே விலைதான்! இஷ்டமானா வாங்கு! இல்லை போயிகினு இரு! என்பாள் அந்த கிழவி எத்தனையோ முறை இப்படி சொல்லிவிட்டாள். ஆனால் ராகவன் தான் விடாப்பிடியாக இந்தகிழவியிடம்தான் வாங்குவேன் என்று அடம்பிடித்து வாங்குகிறான்.    அன்று ராகவன் கடைக்கு வரவில்லை என்றதும் கோமதிக்கு நிம்மதியாக இருந்தது! இன்று அந்த கிழவியிடம் வாங்காமல் வேறு எங்காவது வாங்கி கொள்ளலாம்! எப்படி கறாராக பேசுகிறாள்? என்னை போல ஒரு நாலு வாடிக்கைகளை இழந்தால்தான் புத்தி வரும் என்று சபித்தாள்.   அவள் தேவையான் பழம் வெத்தலைகளை வேறு கடையில் பேரம் பேசி வாங்கி கொண்டு வருவதை பார்த்தாள் கிழவி! நல்லா பாரு! இன்று எவ்வளவு குறைத்து வாங்கிப் போகிறேன் தெரியுமா? ஊரிலேயே நீ ஒருத்த

தாலியை தின்ற நாய்! கேரளாவில் அதிசயம்!

Image
தாலியை கடித்து தின்ற நாய்குட்டி!  கேரளாவில் கொல்லம் மாநிலத்தின் மைய நாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லத்தி. இவர் செல்லமாக பாமரேனியன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த செல்ல நாய் இவருடன் படுக்கையிலேயே படுத்து தூங்குமாம். லத்தி மாடர்ன் பெண்மணி போலும். புருஷன் கட்டிய தாலியை இரவில் படுக்கும் போது தலையணை அடியில் வைத்துவிட்டு தூங்குவாராம். வழக்கம் போல அன்றும் அப்படி கழட்டி வைத்து விட்டுத் தூங்கியவருக்கு விடிந்ததும் அதிர்ச்சியோ அதிர்ச்சி தாலியைக் காணோம்.         அதிர்ச்சியில் உறைந்து போனாலும் வீடு முழுக்க தேடிய அவர் இறுதியில் நாயின் வாயில் சில தங்க துணுக்குகள் ஒட்டியிருப்பதை கவனித்து உள்ளார். ஆகா பயல் சிக்கிட்டான் என்று விளக்கெண்ணெய் கொடுத்துள்ளார். நாய் ஆய் போனதில் சில பாகங்களே கிடைத்துள்ளது. விஷயம் ஊர்ஜிதமானது. விஷமக்கார நாய் தான் தாலியை  பிஸ்கெட்டாக நினைத்து மென்று முழுங்கி விட்டது என்று.    இரண்டரை பவுன் தங்கத்தை சுவாகா செய்த நாயை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று தாலி முழுங்கியதை கூறினார்கள். அங்கு வாந்தி வரவழைத்து தாலியின் சில பகுதிகளை மீட்டனர். ஆனாலும் இன்னும் சில பகுதிகள் நாயின

அண்ணா மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து! சென்னையில் பரபரப்பு!

Image
சென்னை அண்ணா சாலையில்  அண்ணா மேம்பாலத்திலிருந்து வடபழனி செல்லும் 17 எம் என்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் காயமடைந்தவர்கள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.     சென்னையில் பல்வேறு கோரமான விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும் பாலத்தில் இருந்து அதுவும் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குப்புற கீழே விழும் பஸ் விபத்து இதுவரை நடந்தது இல்லை. இதனால் பொதுமக்கள் மனதில் பீதியுடன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.     விபத்திற்கு காரணம் பேருந்தின் ஓட்டுனர் அலைபேசி பேசியபடி ஓட்டியதும். வளைவு திருப்பத்தில் அவரது இருக்கை கழன்று கொண்டு பேலன்ஸ் தடுமாறி கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்ததாக  விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.    ஓட்டுனர்களே உங்களை நம்பித்தான் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கிண்றனர். அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் என்று பலவித கடமைகள் உண்டு. விபத்துக்கள் எதிர்பாராதவை என்றாலும் இது போன்ற விபத்

திருந்தாத டீச்சரால் உயிரிழந்த மாணவி!

Image
ஆசிரியர்களே திருந்துங்கள்! கடந்த இரண்டு நாட்களுக்கு முன் படித்த நாளிதழ் செய்தி இந்த பதிவை எழுத தூண்டியது.நாளிதழில் சிறு பத்தியில் வந்த செய்தி என்றாலும் இது சிந்திக்க வேண்டிய ஒன்று. அதுவும் ஆசிரியர்களை பற்றிய ஒன்று. சென்னையில் ஒரு பள்ளி மாணவி ஆசிரியையின் வற்புறுத்தலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அது. மிகவும் நன்றாக படிக்க கூடிய அந்த மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? ஒரு பக்கம் ஆசிரையை, மறுபக்கம் அம்மா! இருவருக்கும்பதில் சொல்ல முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டது அந்த இளம் பிஞ்சு! அப்படி என்ன நெருக்கடி! எல்லாம் வழக்கமாக ஆசிரியர்கள் பண்ணுவதுதான்!      அந்த ஆசிரியையின் வீடு அதே ஊரிலேயே அந்த மாணவியின் தெருவில் இருந்துள்ளது. பள்ளிக்கு வந்த மாணவியை தன் வீட்டிற்கு தினமும் மதிய வேளையில் அனுப்பி தனக்கு சாப்பாடு எடுத்துவரச் சொல்லி இருக்கிறார் அந்த ஆசிரியை. மாணவியும் மறுக்காமல் செய்து வந்தாள். ஒரு நாள் இதை மாணவியின் தாய் பார்த்து விவரம் கேட்டிருக்கிறாள். மாணவியும் ஆசிரியை சோறு எடுத்து வரச் சொன்னதாக தன் தாயிடம் தெரிவித்து இருக்கிறாள். உடனே அந்த தாய் இதென்ன வேலை! நாளையில்

ஒரு இனிய உதயத்துக்கு தயாராகுது தழுவாத "கை'கள்!

Image
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக வீராவேசம் பேசிய தே.மு.தி.க., அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், விஜயகாந்த்தை தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும், முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலை சந்திக்கின்றனர். எனவே, இதில் தங்களுக்குள்ள அதிகாரத்தை விட்டுத்தர, அவர்கள் முன்வரவில்லை. இதனால், தலைமையின் முடிவை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். புறக்கணிப்பு:தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களுடன், 5,104 ஓட்டுக்களை வைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, சமீபத்தில் அறிவித்தது. இதற்கு, அக்கட்சி சொன்ன காரணம், "நதிநீர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றில், மத்திய அரசால், தமிழக மக்களுக்கு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை' என்பது தான்.இதைக் கேட்டதும், காங்கிரஸ் நிர்வாகிகள், "தே.மு.தி.க., தேர்தலை புறக்கணிக்கக் கூடாது' என்று, கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சிலர், தே.மு.தி.க., நிர்வாகிகளை சந்தித்து, இதுகுறித்து ரகசிய பேச்சும் நடத்தி வருகின்றனர். தி.மு.க., தரப்பிலும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. சங்மாவிற்கு ஆ

சச்சினை நிராகரித்த லில்லி!

Image
ஒரு பந்து வீச்சாளராக வேண்டும் என்ற வேட்கையுடன் சென்னையில் உள்ள எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனுக்கு வந்த 14 வயது சச்சின் டெண்டுல்கரைப் பார்த்த அந்த மையத்தின் பொறுப்பாளரும், உலகின் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவருமான டென்னிஸ் லில்லி, அவரை பயிற்சிக்கு ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்து விட்டாராம். இதை நினைவு கூர்ந்து பேசிய லில்லி, நான் சச்சினுக்கு நல்லதுதான் செய்தேன் என்று நினைக்கிறேன் என்று கூறிச் சிரித்தார். டென்னிஸ் லில்லி தலைமையிலும் அவரது நேரடிக் கண்காணிப்பிலும் இயங்கி வரும் இந்த வேகப் பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி மையம் பல உலகப் புகழ் பெற்ற பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் முக்கியமானவர் ஜாகிர் கான். கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மையத்தின் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ள லில்லி தற்போது சென்னையிலிருந்து விடைபெறுகிறார். இதையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1987ம் ஆண்டு என்னிடம் 14 வயது சிறுவன் ஒருவன் வந்தான். அவனை நான் உற்றுப் பார்த்தேன். உயரத்தில் சிறியவனாக உள்ள இந்த சிறுவனால் எப்படி பந்து வீச்முடியும் என்று கருதிய நான்