Posts

Showing posts from February, 2021

படித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்!

Image
  படித்த நரியும் முட்டாள் முதலையும்! பாப்பாமலர்! வேணுவனம் என்னும் காட்டில் நதி ஒன்று ஓடியது. அந்த நதியில் முதலை ஒன்று தன் குட்டிகளுடன் வசித்துவந்தது. அந்த காட்டில் புத்திசாலியான நரியும் தன் மனைவியுடன் வசித்துவந்தது. நரி தன் தந்திரத்தால் பலரையும் வென்ற கதை அந்த காட்டில் பிரசித்தம். அதுவும் முதலைகளை முட்டாள்கள் ஆக்கிய செய்தியும் பிரசித்தமாக இருந்தது.    எனவே முதலை தன் குட்டிகளை நரியிடம் பாடம் படிக்க அனுப்புவது என்று முடிவு செய்தது. அந்த முதலைக்கு ஏழு குட்டிகள். ஒருநாள் தனது ஏழு குட்டிகளுடன் நரியின் இருப்பிடத்திற்கு முதலை வந்தது. பொந்துக்குள் பதுங்கியிருந்த நரி நண்டுகளை சுவைத்துக்கொண்டு இருந்தது. முதலை தன் வீடு தேடி வந்ததை கண்ட நரி ஆச்சர்யம் அடைந்தது. ஆனாலும் அதை வெளிப்படுத்தாது, “நண்பா முதலையாரே! என்ன இத்தனை தூரம் இந்த சாமானியனைத் தேடி வந்து இருக்கிறீர்?” என்றூ வினவியது.       “ நரி நண்பா! நீதான் காட்டில் அதிகம் படித்த புத்திசாலி! உன் திறமையால் சிங்கராஜாவுக்கே மந்திரியாக இருக்கிறாய்! எங்கள் குடும்பம் படிப்பறிவு இல்லாமல் அசிங்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. என் பிள்ளைகளாவது நன்றாகப்படித்து

பாச்சாஸ் ஃபன் க்ளப்! பகுதி 3 கிரிக்கெட் வித் கில்லி பாய்ஸ்!

Image
    கிரிக்கெட் வித் கில்லி பாய்ஸ் !   பாச்சா மாமாவுக்கு   உடம்பெல்லாம் பரபரத்தது . யூ ட்யூபில்   பழைய கிரிக்கெட் மேட்ச்களை பொழுது போவதற்காக பார்த்துக் கொண்டிருந்தார் . அவர் ஐ . பி . எல் ரசிகர் . வருஷா வருஷம் ஒரு ஐ . பி . எல் மேட்ச் விடாது பார்த்துவிட்டு ச்ச்சு மாமியிடம் திட்டு வாங்கிவிட்டு படுக்காவிட்டால் அவருக்கு தூக்கமே வராது .      இந்த வருஷம் கொரானாவால் ஐ . பி . எல் ரத்தானாதால் யார் பாதிக்கப்பட்டார்களோ இல்லையோ ? பாச்சாதான்   அதிகம் பாதிக்கப்பட்டார் . ஐ . பி . எல் போச்சே ? தோனி ஆட்டத்தை   பார்க்க முடியலையே என்று புலம்பித்தீர்த்துவிட்டார் .   தபேலாதான் யூ ட்யுபில் பழைய கிரிக்கெட் மேட்ச்களை பார்க்கலாம் என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனான் . அதுமுதல் விடாது கிரிக்கெட் மேட்ச்களை பார்க்க நெட் பேக் காலியாகிவிட்டது .   ” அடியேய் ! பொஞ்சாதி ! நெட் பேக் காலியாயிருச்சுடி கொஞ்சம் போட்டு விடுடி !”   கெத்தாக மாமியிடம் கேட்டார் பாஞ்சா .   ” நாட்ல பாதிபேரு வயிறு காலியாயிருக்குன்னு புலம்பறான் ! நீங்க என்னடா