Posts

Showing posts from April, 2014

யார் ஜெயிப்பார்கள்? கதம்ப சோறு பகுதி 33

Image
கதம்ப சோறு பகுதி 33 யார் ஜெயிப்பார்கள்? தமிழகத்தில் கடந்தவாரம் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. அதுவும் இல்லாமல் அதிகம் பேர் வாக்களித்தனர். இளைய தலைமுறையினர் பலர் ஆர்வமுடன் வாக்களித்துள்ளனர். மலேசியாவில் இருந்து வாக்களிக்க ஒரு நண்பர் வந்து வாக்களித்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. ஆனாலும் சென்னையில் வழக்கம் போல வாக்குப்பதிவு சதவீதம் மிக குறைவு. அதுவும் தென் சென்னையில் மிகக் குறைவு. நிறைய படித்தவர்கள் நிறைந்த இந்த நகரத்தில் வாக்களிக்க இவர்கள் விரும்பாததன் காரணம் புரியவில்லை! ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்பட்டியலில் பெயர் விடுபட்டு தவறான முகவரி அச்சிடப்பட்டு என்று பல்வேறு குழப்பங்கள் வேறு. இப்படி சில குழப்பங்கள் இருப்பினும் இத்தனை தேர்தல்களைவிட இந்த முறை தேர்தல் ஆணையம் சிறப்பாகத்தான் செயல்பட்டுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை! வாக்களிப்புக்கு முந்திய நாள் இரவு ஓட்டுக்கு இருநூறு வீதம் ஆளுங்கட்சி அளித்ததாக பல்வேறு ஊர்கள

பொய்மை!

Image
பொய்மை! தொழிலதிபர் மாணிக்க வேல் என்றால் அந்த ஊரில் அறியாதவர்கள் யாரும் கிடையாது. ஒரு காலத்தில் சிறிய கூலித்தொழிலாளியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒரு சிறு தொழிலதிபராக உருவெடுத்து வந்துள்ளார். வளர்ந்தவுடன் பழசை மறந்து விடும் இன்றைய உலகில் இன்னும் பழைய நண்பர்கள், ஊர், என்று எதையும் மறக்காது இருப்பவர்.  எவர் வந்து எந்த உதவி கேட்டாலும் தன்னால் இயலுமாயின் தயங்காது செய்து கொடுப்பவர். கல்லூரிகளை நடத்தி காசு பார்த்துக்கொண்டு கல்வித்தந்தை என்று பட்டம் போட்டுக்கொள்பவர் மத்தியில் தன்னுடைய சொந்த ஊரில் இலவசமாக பள்ளிக்கூடம் நடத்துபவர். இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.   அந்த தொழிலதிபர் மாணிக்க வேலின் இல்லத்தில் தான் நான் அமர்ந்து இருந்தேன். என் கையில் சற்று முன் தொழிலதிபரின் மனைவி தந்துவிட்டு போன குளிர்பானம் இருந்தது. எதிரே மாணிக்க வேல் அமர்ந்திருந்தார்.  “கூச்சப்படாம சாப்பிடுங்க! இது நம்ம வீடு மாதிரி” என்றார்.    நான் ஒரு சமூக சேவகன். ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியார் பணி செய்து ஓய்வு அடைந்தபின் சமூக பணிகளில் அக்கறை செலுத்தி என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். இன்

புகைப்பட ஹைக்கூ 73

Image
புகைப்பட ஹைக்கூ 73 வெடித்து கூடியது வானம்! மின்னல்! வெளிச்சக் கீற்றுக்கள் விதைத்தது மழை! மின்னல்! உடைத்து பார்த்ததும் ஒளிவிட்டது மின்னல்! வேர்விட்டது வானம் விரவி வந்தது மழை! மின்னல்! வான்மகளை தழுவ வானத்தில் மேகமோதல்! மின்னல்! கீறல் விழுந்த வானம் தூறலாய் மழை! மின்னல்! வேர்பிடித்தும் கொடிபிடிக்கவில்லை மின்னல்! வெளிச்சச் சிதறல்கள் ஒளிந்துகொண்டன மின்னல்! மேக இருளை மோகித்தது மின்னல்! கண்ணொளி பறித்தது மின்னொளி மின்னல்! வெள்ளம் பாய்ந்தது விபத்து இல்லை! மின்னல்! மின் வெட்டில் ஒளிர்ந்தது மின்னல்! கிளைவிட்டது இலைவிடவில்லை! மின்னல்! வெளிச்சக் கீற்றை விழுங்கியது வானம்! மின்னல்! மேகம் பிரசவித்த மோகினி மின்னல்! ஒளிவெள்ளம் ஒளிந்து விளையாடியது! மின்னல்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 53

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 53 வணக்கம் வாசகர்களே! சென்ற வாரம் அன்மொழித்தொகை குறித்து படித்தோம். இது கொஞ்சம் இலக்கணத்தின் உள்ளே சென்று படிப்பதாக பலருக்கு தோன்றியிருக்கிறது. பலருக்கு கொஞ்சம் கடினமாகக் கூட இருந்திருக்கிறது என்று அறிகிறேன். இதை வாசித்தவர்களும் குறைவே! நாம் வரிசையாக இந்த இலக்கணங்களை கற்காமல் அவ்வப்போது ஒன்று என்று முன்னுக்கு பின்னாக கற்று வருவதும் புரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது. இதுவரை 52 பகுதிகள் வந்து பல இலக்கணங்கள் அறிந்து வருகிறோம். இவற்றை வரிசைப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. இனி வரிசையாக தொடர்ச்சியாக சில இலக்கணங்களை சொல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு முன் நாம் பார்த்த தொகைகள் உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை இவற்றை தவிர்த்து வினைத்தொகை, பண்புத்தொகை, வேற்றுமைத்தொகை முதலியனவும் உள்ளன. அவற்றை இன்று பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பு சென்ற வாரம் கற்றதை நினைவு கூற இங்கு செல்லவும். அன்மொழித்தொகை தொகை என்றால் என்ன?     சொற்கள் தனித்து நின்றும் மற்ற சொற்களோடு சேர்ந்து நின்றும் பொருள் தரும்.புலவர்கள் இரண்டு சொற்களை

பணியார மழை! பாப்பா மலர்!

Image
பணியார மழை!  பாப்பா மலர்!  ஒரு ஊர்ல அஞ்சு அண்ணன் தம்பிங்க இருந்தாங்க. அவங்க அஞ்சு பேர்ல கடைசியா பிறந்த பையன் அப்பாவியான மனுசன். அஞ்சு பேருக்கும் கல்யாணம் முடிச்சப்பறம் குடும்ப சொத்தை பாகம் பிரிச்சிக்கிட்டாங்க.   அப்போ மத்த நாலு அண்ணன்களும் இந்த கடைசித் தம்பியை  ஏமாத்த முடிவு பண்ணிட்டாங்க. சொத்து எதையும் இவனுக்கு கொடுக்காம ஒரு கிழட்டு எருமை மாட்டை மட்டும் கொடுத்து அவனையும் அவன் மனைவியையும் வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அவனோட மனைவியாலேயும் எதுவும் எதிர்த்து பேச முடியலை. இதெல்லாம் நாங்க சொந்தமா சம்பாரிச்சது உன் புருஷனுக்குத்தான் ஒண்ணும் தெரியாதே!  ஏதோ பாவம் பார்த்து இந்த எருமை மாட்டை தர்றோம் பார்த்து பிழைச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு மேல எதிர்த்து பேசினா வீணா பிரச்சனைதானேன்னு  அந்தம்மாவும் அந்த அப்பாவியும் தனியா ஒரு குடிசை போட்டு தங்கிக்கிட்டாங்க.     ஒரு நாள் ரொம்பவும் பணமுடையா ஆகிப்போச்சு. அப்பாவியோட மனைவி வீட்டுக்காரர் கிட்டே சொன்னாங்க இந்த கிழட்டு எருமையை எதுக்கு இன்னும் வெச்சிக்கிட்டு யாருகிட்டயாவது வித்துட்டு பணத்தோட வாங்க!ன்னு.    அப்பாவி புருசனும் அந்த எரும

சுகப்பிரசவம் அருளும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர்!

Image
சுகப்பிரசவம் அருளும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர்!  திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது நகரின் மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்தான். நகரில் நுழையும் போதே குன்றின் மேல் காட்சி தரும் உச்சிப்பிள்ளையார் கோவில்.    உச்சிப்பிள்ளையாரை வணங்கும் முன் அந்த கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவ சுவாமிகளையும் மட்டுவார் குழலி அம்மையையும் தரிசிப்பது மரபு. தென்கைலாயம் என்று வழங்கப்படும் இந்த தலத்தில் திரிசரன் என்ற மூன்று முகமுடைய அசுரன் வழிபட்டு பேறு பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மலையில் சுவாமி, அம்மன், விநாயகர் மூவரும் மூன்று சிகரங்களில் அமர்ந்த படியால் திரிசிரம் எனப்பட்டது.   பிரம்மகிரி என்றும் வழங்கப்பட்ட இந்த மலை பார்ப்பதற்கு நந்தி அமர்ந்திருப்பது போல காட்சி தருவதால் ரிஷபாசலம் என்றும் பெயர் பெற்றது.   இந்த மலைமேல் எழுந்தருளி இருக்கும் ஈசனுக்கு செவ்வந்தி நாதர், திருமலைக்கொழுந்தர், தாயுமானவர் என்றெல்லாம் அன்பர்களால் அழகிய தமிழில் வழங்கப்படுகிறார். அன்னை சுகந்த குந்தளாம்பிகை என்றும் மட்டுவார் குழலம்மை என்றும் விளிக்கப்படுகிறார். சாரமா மு

தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன்னு இனிமே சொல்ல முடியாது ஏன்? ஜோக்ஸ்

Image
ஜோக்ஸ்! 1.       அந்த நடிகை ஏன் திடீர்னு தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க? ‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்! 2.       இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப பயந்து போயிட்டார்? அப்படியா? ஆமாம்! ‘டிஸ்கவரி சேனல் கூட பார்க்கறதில்லேன்னா பார்த்துக்கோயேன்! 3.       தலைவர் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசறாரே! எந்த தைரியத்துல வீசறார்? ஜெயிக்கமாட்டோங்கிற தைரியத்துலதான்! 4.       ஓட்டுப்போடப் போன தலைவர் ஏன் போடாமேயே திரும்பிட்டார்! அவர் கையில கறை படறத விரும்ப மாட்டாராம்! 5.       என்னது மன்னர் தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டாரா? ஆம் தன் கையாலேயே பதுங்குகுழி தோண்டிக்கொண்டார் என்று சொன்னேன்! 6.       அந்த டாக்டர் விவரமானவருன்னு எப்படி சொல்றே? பல்ஸ் பிடிச்சு பார்க்கிறதுக்கு முன்னாடி பர்ஸை பிடிச்சு பார்க்கிறாரே! 7.       மக்களின் இதயங்களில் நான் குடியிருக்கிறேன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சா ஏன்? மக்கள் வாடகை கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க! 8.       அந்த ஆள் முகத்துலேயே முழிக்க கூடாதுன்னு உங்க தொகுத