Posts

Showing posts from February, 2012

இன்று முதல் 8மணி நேரம் மின்வெட்டு! இருண்ட தமிழகம்!

Image
  பற்றாக்குறை அதிகரிப்பால் , மாநிலம் முழுவதும் , அறிவிக்கப்பட்ட மின்வெட்டு , 8 மணி நேரமாக , இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது . கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் , அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு , மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் . மின் பற்றாக்குறையால் , ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது . புதிய மின் திட்டங்கள் அமலாக , இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும் . செயலில் உள்ள திட்டங்களிலும் , சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை . ஆனால் , பயன்பாட்டு அளவு , நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது . உற்பத்திக்கும் , பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல் , தமிழக மின் வாரியம் திணறி வருகிறது . இதை சமாளிக்கும் வகையில் , சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் , 1 மணி நேரம் , புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில் , 3 மணி நேரம் , கிராமப்புறங்களில் , 6 மணி நேரம் என , மூன்று விதமாக , அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது . அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர , பெரும்பாலான இடங்களில் , இதை விடவும்

உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்

Image
மஞ்சள் இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. கொத்தமல்லி உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது. கறிவேப்பிலை உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளைப்பூண்டு கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இ

தளிர் ஹைக்கூ கவிதைகள்! 4

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! வானம் வரையும் வரைபடம் மின்னல் பின்னிரவில் எங்கோ ஒலிக்கும் பாடல் தாலாட்டு விரட்ட விரட்ட விடாமல் துரத்துகிறது காய்ச்சல்! அதிகாலையிலும் வியர்த்தன புற்கள் பனி! கை கால்களை உடைத்தும் சிரித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்! மழை பூமிக்கு குடை காளான்கள்! பரபரப்பான உலகில் அமைதியாக நின்றது சிலை! விசிறி ஓய்வு எடுக்கிறது மின் தடை! உன் முகத்திலுமா பருக்கள் நிலவு! பூட்டிய வீட்டில் சிணுங்கல் சத்தம் தொலைபேசி யாருக்கு இசைக்கின்றன இரவு நேரத்தில் புல்லினங்கள் கருப்பு போர்வையில் சிகப்பு பொட்டுக்கள் நட்சத்திரங்கள் காலை மாலை அணிவகுப்பு எறும்புகள் நெஞ்சில் ஏறி மிதித்தும் அழவில்லை அப்பா குழந்தை படைப்பு தளிர் அண்ணா சுரேஷ்பாபு. தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!  

மாசானி அம்மா.. எப்படியாவது அவனை மந்திரி பதவிலருந்து தூக்கு!' -அதிமுகவினர் மிளகாய் நேர்த்தி!

Image
பொள்ளாச்சி: 'தாயே.. மாசானி அம்மா... இந்த மந்திரியை எப்படியாவது அமைச்சரவையிலருந்து தூக்கி அருள்புரியனும்...' - பொள்ளாச்சி அருகே மாசானியம்மன் கோயிலில் அதிகமாகக் கேட்கும் அதிமுகவினர் வேண்டுதல் குரல் இது. அதுவும் சாதாரணமாக அல்ல, மிளகாய் அரைத்துப் பூசி படு தீவிரமாக வேண்டுவதால், அதிமுக மந்திரிகைகள் ஏக கலக்கத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 'முன்னாள் உயிர்த்தோழி' சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டதால், சசிகலா, ராணவன், திவாகர், மகாதேவன், எம்.நடராஜன், பவனிவேல், ராமசந்திரன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். மேலும், சமீபத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீக்கப்பட்டனர். ஆனால், முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட பல அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்களின் அடாவடி, அத்துமீறல், சட்ட விதி மீறல், திமுகவினருடன் உள்ள தொடர்புக

திண்ணை!

Image
திண்ணை! எட்டாப்பு படிக்கையிலே ஒரு மாச லீவுக்கு ஒடிடுவோம் தாத்தா ஊருக்கு! தாத்தாவோடு கைப்பிடித்து நடக்கையில் தெருவெல்லாம் வேடிக்கை பார்க்கும்! திண்ணை வைத்துக் கட்டப்பட்ட கூடல்வாய் ஓட்டுவீடுகளில் முற்றத்தில் நிலா முகம் காட்டும்! ஓடி பிடித்து விளையாட கல்லாங்காய் கண்ணாமூச்சி எல்லாத்துக்கும் சாட்சியாய் நிற்கும் திண்ணையில் படுத்திருக்கும் பெரிசுகள்! மத்தியான போதினிலே திண்ணையிலே சாய்ந்திருக்கும் பாட்டிமார்கள் கதைக்கும் ஊர் கதைக்கு தனிமவுசு! எப்பொழுதும் கூட்டமிருக்கும் எதிர்வீட்டுத் திண்ணை! முப்பொழுதும் அங்கு நடக்கும் ரம்மி! முன்னிரவு வேளையிலே சிறுசுகளை சேர்த்து முனியாண்டி கதை சொல்லும் முனியம்மா! எப்போதும் திண்ணையிலே கால்நீட்டி படுத்திருக்கும் செல்லம்மாக் கிழவி! திண்ணையிலே மெத்தைவிரித்து கைவிசிறிக்கொண்டு விசிறி தூங்கும் ரத்னம் தாத்தா! ஓவ்வொருவராய் உலகைவிட்டு விடைபெற இன்று நம்மை விட்டு விடை பெற்றது திண்ணை! பல ஆண்டுகழித்து பட்டணம் சென்று ஊர் திரும்புகையில் பல அடுக்குமாடிகள் ஊரிலே நிறைந்திருக்க பாந்தமான திண்ணை மட்டும் காணவில்லை! சொந