அமைச்சரா? ஆண்டவனா? நீங்களே சொல்லுங்கள்!
அமைச்சரா? ஆண்டவனா? நீங்களே சொல்லுங்கள்! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாமன்னர் ஔரங்கசீப் சக்ரவர்த்தி அவர்கள் தர்காவில் முன் வரிசையில் நின்று தொழுவது வழக்கம் அந்த வெள்ளிக்கிழமை அன்று மாமன்னர் வர சில நிமிடங்கள் தாமதம் ஆகிவிட்டது. மன்னர் வந்துவிடட்டும் என்று சில நிமிடங்கள் தொழுகையை முஅஜ்ஜினும், இமாமும் தாமதம் செய்தனர். அவசரமாக வந்து தொழுகையில் கலந்துகொண்டார் சக்ரவர்த்தி ஔரங்க சீப். தொழுகை முடிந்ததும் அந்த முஅஜ்ஜினையும், இமாமையும் வேலை நீக்கம் செய்தார் ஔரங்கசீப். அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவரையும் வியக்க வைத்தது. ஒரு சிறு நிலப்பரப்பை சொற்பகாலம் ஆளப்போகும் அரசனுக்குப் பயந்து அண்ட சராசர நிலங்களையும் நிரந்தரமாக ஆளும் அந்த பேரரசனான கடவுளை வணங்க தாமதம் செய்தார்கள். இது குற்றம் அல்லவா? என்று கர்ஜித்தார் ஔரங்கசீப். இன்று! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி வெற்றியாண்டவர் கோயிலில் அமைச்சர் வருவதற்கு முன்பாகவே நடத்தியதற்காக சிவாச்சாரியார் கண்ணப்பன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ...