Posts

Showing posts from March, 2018

யுத்தபூமி!

Image
  யுத்த பூமி! காலையில் கண்விழிக்கும் போதே சின்னவனுக்கு  காய்ச்சல் நெருப்பாய் சுட்டது. பெரியவன் உடலெல்லாம் அரிப்பதாக கூறினான். அந்த சின்ன சிமெண்ட் ஷீட் போட்டு தடுக்கப்பட்ட அந்த வீட்டில் வெக்கை அனலாய் வீட்ட சுழன்று கொண்டிருந்த மின்விசிறி வெக்கையை அதிகப்படுத்திக்கொண்டு இருந்தது.    வேலைக்குச்சென்ற புருஷன் இன்னும் திரும்பவில்லை. தேன்மொழிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! காலை மணி 7 ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்குள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி தானும் அந்த கார்மெண்ட் கம்பெனிக்கு சென்றுவிட வேண்டும். சின்னவனுக்கு ஜுரமாக இருப்பதால் ஸ்கூலுக்கு லீவ் போட்டு ஆஸ்பத்திரி கூட்டிச்செல்ல வேண்டும்.     தூரத்து உருக்காலையில் இருந்து வெளிப்பட்ட புகை மண்டலம் நாசியைத் துளைத்து இருமலை வரவழைத்தது. அப்படி என்னத்தை போட்டுக் கொளுத்துவானுங்களோ! ஒரே புகை! நாத்தம்! என்னிக்கு இந்த கம்பெனி ஊருக்குள்ளே வந்ததோ அன்னிக்கே ஊருக்கு கிரகம் பிடிச்சுப் போச்சு! புலம்பிக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள் தேன்மொழி.      அரைமணி நேரத்தில் பம்பரமாய் சுழன்று குளித்து டிபன் செய்து பெரிய பையனை எழுப்ப

தினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு!

தினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள்! இன்று வெளியான  கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீழே! தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், தினமணி குழுமம், வலைப்பதிவு குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்! இரை தேடும் பறவை: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   26th March 2018 04:12 PM   |     அ+ அ  அ-     |   விடியல் பொழுதில் இரை தேடிப்பறக்கின்றன பறவைகள்! நீண்ட நெடுந்தொலைவுப்பயணம் அது! ஒய்வே இல்லாத சிறகசைப்புக்களுக்குப் பின் ஒரு வயல்வெளியை காண்கையில் பசி எடுகின்றது பறவைகளுக்கு! சில நெல்மணிகளை கொத்துகையில் சீறி எழுகின்றது தாகம்! ஆழ்துளையிலிருந்து பீச்சியடிக்கும் குழாயின் முனையில் மூக்கை நனைக்கையில் தணிகின்றது தாகம்!  கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு சிலமணிகள் சேகரித்து மீண்டும் நீண்ட பயணம்! நகர மயமாதலில்  நலிந்துபோன பறவையினங்கள் கூடுகட்டின மின்கம்பங்களில் குடியிருந்த குஞ்சுகளுக்கு இரையூட்டுகையில் சிறகடித்து சத்தம் எழுப்பின குஞ்சுகள்! வயல்வெளிகள் வான்முட்டும் மரங்கள்! பச்சைப்புல்வெளிகள் எல்லாம் மறைந்து விண

இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது பஞ்ச்!

Image
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் மூன்று மாதங்களுக்கு பிறகு எனது பஞ்ச் வெளியாகி ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது. தொடர்ந்து அனுப்பியும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது இன்று வெளிவந்ததில் ஓரு புத்துணர்ச்சியைத் தந்தது. தமிழக எழுத்தாளர் வாட்சப் குழு நண்பர் திரு சிவகுமார் நடராஜன் குழுவில் பஞ்ச் பதிவிட்டு வாழ்த்து நல்க குழு உறுப்பினர்களின் பாராட்டு மழையில் நனைந்தேன். அலைபேசியில் பிரத்யேகமாக தொடர்பு கொண்ட பஞ்ச் குரு திருமாளம் பழனிவேல் சார் வாழ்த்துகள் நல்கினார். அவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குழு உறுப்பினர்கள் வலைப்பூ வாசக அன்பர்கள் இந்து குழுமம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை பகிர்ந்து கொள்கிறேன்! டிஸ்கி:  பஸ் கட்டண உயர்வின் போது ஜனவரி 22ம் தேதி நாளிதழில் எனது கார்டுன் ஒன்று வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது. அப்போது பகிர்ந்து கொள்ள தவறிவிட்டது. அதுவும் உங்கள் பார்வைக்காக. தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இந்து மாயாபஜார் பகுதியில் வெளியான எனது சிறுவர் கதை!

Image
இந்து தமிழ் நாளிதழில் புதன் கிழமைதோறும் மாயாபஜார் சிறுவர்பகுதி வெளியாகின்றது. அதில் எனது சிறுவர் கதை சிங்கம் கொடுத்த பரிசு  இந்தவாரம் வெளியானது. இந்து குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் ஊக்கமளிக்கும் வலைப்பூ வாசக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி!  கதை கீழே! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 96

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 96 1.    தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே! ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டாராம்! 2.    அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?   சாப்பிடற எதுவுமே உடம்புலே ஒட்ட மாட்டேங்குதுன்னு சொன்னா கொஞ்சம் பெவிகால் தடவிட்டு சாப்பிட்டுப்பாருங்களேன்னு சொல்றாரே! 3.    நர்ஸா வேலைப்பார்க்கிற பொண்ணை உன் பையன் கட்டிக்க மாட்டேன்னு சொல்றானா ஏன்? “சிஸ்டரை” கட்டிக்க முடியாதாம்! 4.    இது நம்ம தலைவர் சிலை மாதிரியே தெரியலையே! முகமே வேற மாதிரி இருக்கே!    வருங்காலத்துலே சிலை உடைக்கிறவங்க கொஞ்சம் குழம்பிப்போவட்டும்தான் இந்த மாதிரி அமைச்சிருக்கோம்! 5.    பொண்ணுகிட்டே நிறைய பேரு “பல்லைக் காட்டிகிட்டே” இருப்பாங்களா? என்ன சொல்றீங்க தரகரே?   ஆமாங்க! பொண்ணு “டெண்ட்டிஸ்ட்டா” இருக்குது! 6.     தலைவர் சிலையை சுத்தி இவ்வளோ இரும்பு வேலி அமைக்கலாம்னா ஏன் வேணாங்கிறார்?   சிலையும் ஜெயில்ல” இருக்கிறமாதிரி ஒரு ஃபீலிங் வந்துருமாம்! 7.    ரோந்து பணியில் இருப்பவர்கள் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளது மன்னா!     என்ன புகார்! குதிரைய

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 32

Image
நொடிக்கதைகள்! பகுதி 32 உதவி! பொண்ணு காலேஜ் ஃபைனல் இயர் படிக்குது! முடிச்சதுமே கல்யாணம் முடிச்சிறலாம்னு இருக்கோம்! தரகரிடம் சொல்லுகையில்  படிப்புக்கு எந்த பையனும் உதவி பண்ணலையே? என்று கேட்டார் தரகர். சர்க்கரை!    சர்க்கர இல்லாம ஒரு டீ போடுப்பா! என்று டீக்கடையில் ஆர்டர் செய்தார் கரும்பு ஆலை அதிபர். வாடை!    பாய் வந்து  கடை முழுதும் சாம்பிராணி போட்டதும் கருவாட்டு கடைக்காரர், “இன்னா பாய் இப்படி பண்ணிட்டே உள்ளே உட்கார முடியலை?”  என்றவாரே எழுந்து வெளியே சென்றார். பசி:     உபவாசம் இருந்தவனின் பசியைக் கிளறிவிட்டது பக்கத்து வீட்டு சமையல் வாசனை . உறக்கம்!    விடிய விடிய வாட்சப் சேட்டிங் செய்தவனின் அலைபேசி உறங்கியது பேட்டரி சார்ஜ் தீர்ந்தமையால்! நாடகம்!     நடிகர்கள் எல்லோரும் அரசியலுக்கு வந்ததும் அரசியல் வாதிகளின் நடிப்பு அடிபட்டுப்போனது. விற்ற தரிசனம்!     50, 100, 200 என தொகை வாரியாக விதவிதமான டிக்கெட்டுக்களில் விற்கப்பட்டது கடவுளின் தரிசனம். ப்ரேக்கிங் நியுஸ்!     ”ரெண்டு நாளா ஒரு ப்ரேக்கிங் நியுஸுமே போடலை!”  சேனல் சுத்த போர் அடிக்குத

தித்திக்கும் தமிழ்! பகுதி 30

Image
தித்திக்கும் தமிழ்!  பகுதி 30 கோரைக்கால் ஆழ்வான் கொடை! புலவர்களை போற்றி தகுந்த பொன் அளித்து போற்றும் புரவலர்களும் இருக்கிறார்கள். இன்று வா! நாளை வா! சென்றுவா என்று அலைகழிக்கும் கருமிகளும் உலகத்தில் உண்டு.    இன்றைக்கு மட்டுமல்ல! அன்றைக்கும் புலவர்கள் வறுமையில் வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்தார்கள். இப்படி இழுத்தடிக்கும்  செல்வந்தர்களிடமோ மன்னர்களிடமோ யாரும் செல்வதில்லை! சென்று அவமானப்பட நேர்கையில் அவர்களை போற்றுவதற்கு பதில் தூற்றிப் பாடி விடுவார்கள்.      ஒளவையாரும் இதில் விதிவிலக்கல்ல!  அந்த நாளில் கோரைக்கால் என்ற ஊரில் ஒரு பெரும் செல்வந்தன் இருந்தான். செல்வம் ஏகமாய் குவிந்திருந்தும் ஈயாக் கருமி. இது அறியாத ஒளவையார் அந்த செல்வந்தனை புகழ்ந்து பாடி பரிசில் பெற நினைத்து அவனிடத்துச் சென்றார்.   ஆழ்வானும் ஒளவையாரை வரவேற்று அவர் புகழ்ந்த பாடல்களை கேட்டு ரசித்தான். உங்கள் பாடல்கள் என் உள்ளத்தை கொள்ளையடித்துவிட்டது. நாளை வாருங்கள் உங்களுக்கு ஒரு யானை தருகிறேன் என்று சொல்லி அனுப்பினான்.   ஒளவையாரும் யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்! அதைத்தருவதாக

தினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை!

தற்கொலை செய்யும் கனவுகள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   11th March 2018 12:30 PM   |     அ+ அ  அ-     |   ஆழ்மனதின் விருப்பமே அகல திரைவிரிக்கும் கனவுகள்! உள்ளத்தில் ஒளிந்திருக்கும் ஆசைகள் ஒளிப்படமாய் வீழ்கிறது கனவுகளாய்! ஒவ்வொருவருக்கு ஓர் கனவு உண்டு! உன்னதமான அக்கனவு பகல் கனவாய் பலருக்கு மாறுவதுண்டு! பாதியிலே முடிந்து போகும் கனாக்கள் பாவம் தற்கொலையில் உயிரிழக்கும் கனாக்கள்! வறுமையின் கோரம்! வளர்ந்து வரும் கனவை வாழ்விழக்க செய்து விடும்! பெற்றோரின் விருப்பம் பிள்ளையின் கனவை பிரித்து எறிந்து விடச்செய்யும்! சுற்றத்தின் கேலி கூட துளிர்த்தெழும் கனவுகளை கலைத்துவிடக் கூடும்! கடலளவு துயரங்கள் துரத்துகையில் கண்ணுக்கெட்டிய கனவுகள் கூட மெய்ப்படாமல் போய்விடலாம்! கனவுக்கு உரமூட்டி உயிர்பிக்கையில் உலகம் உன்னை நிமிர்ந்து நோக்கும்! உன் கனவை கலைத்து பிறருக்கு வழிகொடுக்கையில் உலகினில் நீ காணாமல் போய்விடுவாய்! தடுமாற்றம் ஆயிரம் வந்தாலும் பிடிவாதமோடு கனவுகளை தற்கொலை செய்யாதிருப்பின் விடிவெள்ளி உன் வாழ்வில் விளக்கொளியாய் பிரகாசிக்கும்! தங்களின் வர

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 95

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 95 1.    தலைவர் பன்முகத்திறமை கொண்டவர்னு சிலை செய்யற ஸ்தபதி கிட்டே சொன்னது தப்பா போயிருச்சு!     ஏன்? சிலையை ஒவ்வொரு பக்கம் பார்க்கும் போது ஒவ்வொரு உருவம் தெரியுதே! 2.    சிலையை செய்த ஸ்தபதியை தலைவர் பாராட்டினதும் அப்படியே மயக்கம் போட்டுட்டாராமே அப்படி என்ன சொல்லி பாராட்டினார்?    இது என் சிலைன்னு என்னாலேயே நம்பவே முடியலைன்னுதான்! 3.    நம்ம தலைவர் “பார்ட் டைம் அரசியல்வாதி”ன்னு சொல்றாரே மீதி நேரம் என்ன செய்யறார்?   “ஃபுல் டைம்” அரசியல்வாதி ஆகலாமா வேணாமான்னு யோசனை பண்ணிகிட்டே இருக்காராம்! 4.    கட்சிக்கு உறுப்பினர்களை ஏன் “ஆன் லைனில்” சேர்க்கறீங்க தலைவரே!   என் கட்சியில் சேர்வதற்கு  வரிசையில் காத்திருக்கிறார்கள்னு பெருமையா சொல்லிக்கலாம் இல்லையா? 5.    என்னங்க பையன் வயித்துல எட்டி உதைக்கிறான்!   வருங்காலத்துல பெரிய ‘டிராபிக் கான்ஸ்டபிளா” வர்றதுக்கு இப்பவே ப்ராக்டீஸ் பண்றானோ என்னவோ? 6.    எதிரி வாய்ஸ்  மெசேஜ் அனுப்பி இருக்கிறான் மன்னா!   இன்கமிங் கால் வருவதற்குள் மிஸ்டு கால் ஆகிவிடுவோமா மந்திரியாரே! 7.    என் ப