Posts

Showing posts from October, 2015

பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்!

Image
பாட்டி சுட்ட ரொட்டி! பாப்பாமலர்! ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வங்காள கிராமத்துல பாட்டி ஒருத்தங்க வசிச்சு வந்தாங்க. அவங்க ரொம்ப ஏழை! ஏதோ தன்னால முடிஞ்ச வேலைகளை செஞ்சு அதுல வருகிற வருமானத்துல  பிழைச்சு வந்தாங்க.   ஒரு நாளு அந்த பாட்டி வேலை செஞ்சதுக்கு கூலியா கொஞ்சம் கோதுமை மாவு கிடைச்சுது. பாட்டி அதை பிசைஞ்சு ஒரு ரொட்டி செஞ்சாங்க. அதை ஒரு தட்டில் வைச்சுட்டு ஏதோ வேலையா  திரும்பினாங்க. அப்ப ஒரு காக்கா உள்ளே நுழைஞ்சு அந்த ரொட்டியை தூக்கிக்கிட்டு பறந்துருச்சு! பறந்து போய் பக்கத்தில இருந்த மரத்தில இருந்த கூட்டுல வைச்சுருச்சு.     ரொட்டியைக் காக்கா தூக்கிப் போனதை பாட்டி பார்த்துட்டாங்க! ”காக்கா! காக்கா! என்னோட ரொட்டியைத் திருப்பிக் கொடுத்திடு!” அப்படின்னு பாட்டி கேட்டாங்க.      “ தரமுடியாது! நான் சாப்பிடப்போறேன்!” அப்படின்னு சொல்லிருச்சு காக்கா.   பாட்டி பாவம், பசியோட இருந்தாங்க, திரும்பவும் வேற ரொட்டி செய்ய மாவும் இல்லை! நேரமும் இல்லை. அதனால் காக்கா உக்காந்திருந்த மரத்துக்கிட்டே  “மரமே! மரமே! நான் ரொம்ப பசியாய் இருக்கேன்! காக்கா என்னோட ரொட்டியை தூக்கி வந்து கூட்டுல வைச

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 52

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 52 1.    ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிக்கிட்டது தப்பா போச்சா ஏன்? “ எது நடந்தாலும் ‘விட்’டு தள்ளுன்னு சொல்லிட்டு போயிடறாரே! 2.    அந்த கட்சியில சேர்ந்த நடிகை ஏன் கோபமா இருக்காங்க? உங்களை சேர்த்ததுக்கு அப்புறம் கட்சியோட எடை கூடிப்போயிருக்குன்னு தலைவர் சொன்னாராம்! 3.    கல்யாண வீட்டுல ஒருத்தரை மட்டும் தடபுடலா கவனிக்கறாங்களே என்ன விஷயம்? சும்மாவா அஞ்சு கிலோ பருப்பை மொய் எழுதி இருக்கிறாராம்! 4.    மன்னருக்கு தொலைநோக்கு பார்வை அதிகம்!   எப்படி சொல்கிறாய்? எதிரி எந்த பக்கம் வந்து தாக்குவான் என்று சிந்தித்து தப்பிக்க நிறைய சுரங்க வழிகள் அமைத்திருக்கிறாரே! 5.    தலைவர் ஏன் லிப்டை எப்பவும் உபயோகிக்க மாட்டேங்கிறார்?   படிப்படியா முன்னேறுவதுதான் அவருக்கு பிடிக்குமாம்! 6.    மன்னா! இளவரசர் இலக்கின்றி சுற்றி திரிகின்றார்…!   அதனாலென்ன…! எதிரி மன்னர்களின் இலக்கினை எட்டிவிடுவார்கள் போலிருக்கிறதே மன்னா! 7.    டாக்டர் நீங்க ஆபரேசன் பண்ணதும் நான் பிழைச்சிருப்பேனா?   அது எனக்குத் தெரியாது ஆனா உங்க பேங்க் பேலன்ஸ் பிழைச்சி

அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!

Image
அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்! தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒருவனுக்கு எத்தனைக் கோடி பொன்கொடுத்தாலும் அவன் மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டு இன்னும் கிடைக்காதா என்று ஏங்கும். அதே சமயம் அன்னத்தை தானமாக அளிக்கையில் வயிறுடன் மனதும் நிறைந்து திருப்தி அடையும். போதும் என்று மகிழ்வாக உரைப்பான். ஆதாலால்தான் அன்னதானம் சிறப்பாக சொல்லப்படுகின்றது.    உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிராய் செயல்படுவது அன்னம். அத்தகைய அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்விப்பது அன்னாபிஷேகம் என்று சிறப்பாக சொல்லப்படுகின்றது. எத்தனையோ பொருட்கள் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்விப்பது ஏன்? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்படுகின்றது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது. அன்னத்தால் இறைவனை அபிஷேகிப்பது மிகவும் விஷேசமானது ஆகும்.     ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதம் அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினம் அன்னாபிஷேகத் திருநாள் ஆகும். சந்திரன் அன்றுதான் தனது பதினாறு கலைகளும் ஒளிவீச பூரணச் சந்திரனாக பரிமளிப்பான். அன்றைய தினம் சிவனுக்கு