Posts

Showing posts from February, 2013

மதுவிற்கு எதிராக ஓர் அறப்போர்! காந்தியவாதி சசிபெருமாள்!

Image
காந்தியவாதி சசிபெருமாளை உங்களுக்குத்தெரியுமா? அவர் நடத்தி வரும் மதுவிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிவீர்களா?    நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! எனக்கே இன்று முகநூலில் கார்டூனிஸ்ட் பாலாவின் பக்கத்தை பார்த்தபோது சசிபெருமாளையும் அவர் நடத்தி வரும் போராட்டத்தை பற்றியும் தெரியும். தமிழகத்தில் ஒரு காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து அரசு மாய்ந்து மாய்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடித்து சிறையில் தள்ளியது.   மது குடிக்க பெர்மிட் என்று ஒன்று கொடுத்து அதை வைத்திருப்பவர்கள்தான் குடிக்கலாம் என்று ஒரு சட்டம் இருந்தது. அந்த பெர்மிட்டை பெற பிரபலங்கள் கூட மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று மது ஆறாக  பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் ஓட வேண்டிய ஆறுகளும் குளங்களும் வற்றி வரண்டு கிடக்க மது ஆறு மட்டும் வெள்ளப்பெருக்கில் இருக்கிறது.    சின்னஞ்சிறு குழந்தைகள் கூட டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு அலம்பல் பண்ணும் அதிசயக் காட்சிகளை காண்கிறோம். பல இடங்களில் பள்ளி மாணவர்கள் சரக்கடித்துவிட்டு பள்ளிக்கு வர

ஓல்டு ஜோக்ஸ் 8

Image
ஓல்டு ஜோக்ஸ் 8 ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துகடை ஏறி இறங்கறீயே,ஞாயமா? ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க மட்டும் முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!                               வெ. சீதாராமன். என்ன சார்! நீங்க கூட பொம்பளை மாதிரி சீரியல் பார்த்து அழுவுறீங்க!  நல்லாப்பாருங்க! இது சீரியல் இல்லை! என் கல்யாண சி.டி ஓடுது!                                     எஸ். எஸ். பூங்கதிர். உங்க கடை இட்லி மல்லிப் பூ மாதிரி இருக்கு!  அவ்ளோ  மெத்துன்னு இருக்கா? சைஸை சொன்னேன்!.. கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்க!                                    கே. அனந்தன். அன்பே நீ ஸ்டார் மாதிரி இருக்கே! அது இருக்கட்டும்! என் வயித்துல “ஸ்டார் ப்ளஸ் வளருதே அதுக்கு ஒரு வழிச் சொல்லுங்க!                                           க. கலைவாணன். அடடா! என் வீட்டுக்காரர் கிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்து வரச்சொல்ல மறந்துட்டேன்!   கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!                                  கமுதி எஸ். சேதுராமன். கடவுள் உனக்கு காட்சி தந்த

சுஜாதா நினைவு நாள்! அஞ்சலி!

Image
                                         இன்று போல இருக்கிறது சுஜாதா மறைந்து! அது 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்று நினைக்கிறேன். இதே பிப்ரவரி மாதத்தில் முதல் முறையாக நண்பருடன்   திருமீயச்சூர் செல்ல வேனில் அமர்ந்திருக்கிறேன்!   நேரம் இரவு 7.30 இருக்கும். தங்கையிடம் இருந்து அழைப்பு வருகிறது. அண்ணா! சுஜாதா செத்துட்டாராம்!    என்னது? அதிர்ச்சியில் கேட்க! அண்ணா எழுத்தாளர் சுஜாதா செத்து விட்டாராம்!   ஒரு நிமிடம் உறைந்து போனேன்.   பின்னர் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தேன். திருமீயச்சூர் லலிதாம்பிகை தரிசனத்தின் போதும் அவருக்காக வேண்டினேன்.    எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகமானது என்னுடைய பதிமூன்று வயதில் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனந்தவிகடனில் என் இனிய இயந்திரா தொடராக வந்தபோது அதில் வரும் நாய்க்குட்டி பாத்திரம் பிடித்து படிக்க ஆரம்பித்தேன். மற்றவை புரியாது. அதில் இறுதியில் நாய் இறக்கும் போது அழுகையாக வரும்.  அப்புறம் நான் வளர்கையில் அவரது பல நாவல்களை படித்து வியந்து இருக்கிறென். கற்றதும் பெற்றதும் அவர் விகடனில் எழுதியபோது மிகவும் விரும்பி வாசிப்பேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர

பனிக்காலம் நன்று!

Image
பனிக்காலம் நன்று! மார்கழி மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் தான் தமிழகத்தில் குளிர் வாட்டி எடுக்கும். மூடு பனி போர்த்திக் கொண்டு சாலைகள் தெரியாது. வாகனங்கள் முகப்புவிளக்கு ஒளிரவிட்டுச் செல்லும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மாசி மாத நிறைவில் சிவராத்திரியுடன் பனிக்காலம் நிறைவு பெறும்.   பெரியவர்கள் சிவராத்திரியோடு குளிர் “சிவசிவா”ன்னு போயிடும் என்று சொல்லக் கேட்டுள்ளேன். அதே மாதிரி நிலை சிலவருடங்கள் முன் வரை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வானிலை மாறி வருகிறது.  மார்கழி மாதத்தில் பனி அவ்வளவாக தெரியவில்லை! மார்கழி மாத இறுதியில் கொஞ்சம் கடுமையான பனி இருந்தது. பின்னர் பனி விலகி வெயில் கொளுத்த ஆரம்பித்தது.     மாசி மாதம் தொடங்கியவுடன் வெயில் கோடை வெயில் போல கொளுத்த ஆரம்பித்தது. ஆனால் திடீரென இரண்டு மூன்று நாட்களாக அதிகாலையில் கடும் பனி பொழிந்து வருகிறது. எதிரே வருவது தெரியாத அளவிற்கு பனிப்புகை மண்டியுள்ளது. மனிதன் மாற மாற காலநிலையும் மாறி வருவது வேதனைக்குரியது. இயற்கை வளங்களை சுரண்ட சுரண்ட இயற்கை நம்மை கடுமையாக தண்டித்து வருகிறது. மழை சரிவர பெய்யவில்லை! வெயிலின் அதிக தாக்க

புகைப்பட ஹைக்கூ 16

Image
புகைப்பட ஹைக்கூ 16 பூவோடு பூவாக பூத்து நிற்கிறது வண்ணத்துப்பூச்சி! மயங்கியது மலர் மட்டுமல்ல மனசும்தான்! தேன் சிந்தியதும் தலைகவிழ்ந்தது பூ மலருக்கு மஞ்சள் பூசியது வண்ணத்துப்பூச்சி! பூவில் பூத்தது உயிருள்ள பூ வண்ணத்துப்பூச்சி! இயற்கை அழகில் மூழ்கியது மலர் வண்ணத்துப்பூச்சி! திருடு போனது மகரந்தம் மட்டுமல்ல மனசும்! வண்ணம் சிதறினாலும் எண்ணம் சிதறவில்லை வண்ணத்துப்பூச்சி! பூக்களின் சிரிப்பில் பூத்தது வண்ணத்துபூச்சி! சிறகில் சித்திரம் படைத்தது வண்ணத்துப்பூச்சி! மலர்க்கணையில் மயங்கியது வண்ணத்துப்பூச்சி! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

வேலூர் விஜயம்! 4

Image
வேலூர் விஜயம்! 4 வேலூர் சென்று வந்த கதை என்ற பெயரில் என் மாமாவின் பழைய நினைவுகளை மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறேன்! வாசகர்கள் பொறுத்தருள்க.       யூத் சர்வீஸீசில்  திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்த மாமாவிற்கு ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. யூத் சர்வீஸில் இருப்பவர்கள் அனைவரும் திமுக காரர்கள் என்று வேலையை விட்டு நீக்கி விட்டிருக்கிறார்கள். அடுத்த பி.டி.ஒ என்ற கனவில் இருந்தவர்கள் ஒரே நாளில் வேலையை இழந்து தவித்து இருக்கிறார்கள். அன்றும் பலர் இதனால் தற்கொலை வரை சென்று இருக்கின்றனர்.    ஆனாலும் மாமா மனம் தளரவில்லை! மீண்டும் கிராமத்திற்கு விவசாய வேலைக்கு வந்துவிட்டார். இதனிடையே வேலைஇழந்தவர்கள் வழக்குத் தொடுக்க ஒரு தேர்வு வைத்து தகுதியானவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. தேர்வு எழுதினார் மாமா. தேர்வுமுடிவுகள் வந்தன. மாமா தேர்ச்சி பெற்று விட்டார். என்ன இன்னும் ஒரு மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று இருந்தால் நேரடியாக செகரட்டரியேட் பணியிடம் கிடைத்திருக்கும். சரி கஷ்டப்பட்டதற்கு ஏதோ கவர்மெண்ட் வேலை கிடைத்து விட்டது என  மகிழ்ந்தபோது அவருக்கு பணிய

அம்மான்னா சும்மா இல்லேடா! கதம்ப சோறு!

Image
அம்மான்னா சும்மா இல்லேடா! நேற்று காவிரி தந்த கலைச்செல்வியின் 65வது பிறந்த நாள். இன்று நட்சத்திரப்படி பிறந்த நாள். நேற்றுதான் அம்மாவின் விஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் பிறந்த நாள் தினம் தோறும் இருக்கக் கூடாதா என்ற அளவிற்கு பேராசையும் எழுந்தது. அதில் தவறொன்றும் இருப்பதாகவும் நான் கருதவில்லை! ஆமாங்க! தீபாவளி, பொங்கல், வருசபிறப்பு அன்னிக்கு கூட ஒருமணி நேரமாவது கரண்ட் கட் பண்ணாங்க! ஆனா நேத்து காலையில ஆறுமணியில இருந்து ராத்திரி பத்து மணி வரை கரண்ட் கட்டே ஆகலைங்க! அம்மாவின் பிறந்தநாளுக்கு இந்த மாதிரி ஒரு பரிசை நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க! ஆனா என்ன பிரயோசனம்? நேத்து டீவிக்களிலே மொக்கை படங்களா போட்டு அறுத்து எடுத்துட்டாங்க! அதுவும் ஜெயா மூவிலே கூட அம்மா படம் போடாம டாக்டரு விஜய் படம் மதுர போட்டு கொலை பண்ணிட்டாங்க! அந்த படம் கொஞ்ச நேரம் பார்த்த பாதிப்புல பாதி இரவு தூங்காம ஒரே அஜீரண கோளாறா போயிருச்சுங்க!   இப்படியே தினம் பிறந்த நாள் கொண்டாடி கரண்ட விடுவாங்கன்னு எதிர்பார்த்தா இன்னிக்கு காலங்கார்த்தாலேயே மீண்டும் கட் ஆயிருச்சு மின்சாரம்! தொடரும் ஆசி