Posts

Showing posts from August, 2014

தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 8

Image
தளிர் சென்ரியு கவிதைகள்! வெட்டும் முன்னே உயிரை விட்டது! தமிழக மின்சாரம்! வளர்ந்தன சாலைகள்! அழிந்தன கிராமங்கள்! பிடிப்பதாக சொல்லி விடுகிறார்கள் புகை! பகையாளி ஆனாலும் பலரோடு உறவாடுகிறது பாக்கும் சிகரெட்டும்! மழைவிட்டும் சலசலப்பு அடங்கவில்லை! தெலுங்கானா! பிறந்தநாளுக்கு பிறப்பெடுக்கின்றன விதவிதமான விநாயகர்கள்! முதலிடம் பிடித்தனர் குடிமகன்கள்! டாஸ்மாக்! வீங்கிப்போன பொருளாதாரம் உடைபட்டான் இந்தியன்! நவீன பயிரிடல்! நச்சுக்கள் ஆகின்றது நல்லுணவு! பீட்ஸாவும் பர்கரும் டாடா காண்பித்தன கடலைமிட்டாய்க்கு! களம் புகுந்த அரசியல்! கண்ணாமூச்சி ஆடியது! விளையாட்டு! விலை போகும் விருதுகள்! வீழ்ச்சியில் திறமை! எழுச்சியில் ஊழல்!  வலுவுள்ளவன் கையில்  வதைபடுகின்றன  வளங்கள்! வளர்ச்சிக்கு விதை ஊன்றினார்கள்! அழிவு ஆரம்பமானது! பன்னாட்டு நிறுவனங்கள்! கொதித்து அடங்கிப்போனது! கூடன் குளம்! கோடிகளை இரைத்து கொள்ளிவைத்துக் கொண்டார்கள் கூடன்குளம் அணு உலை! எல்லையில்லா மீன்கள்! எல்லை

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 70

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 70 அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்! சென்ற வாரம் ஒப்புமைப்படுத்தல் குறித்து படித்தோம். வாரா வாரம் ஓரளவுக்கு தமிழ் மொழியின் இலக்கணத்தை சிறிதாவது அறிந்து வருகிறோம். இலக்கண கடலில் சிறிது தூரமே நாம் நீந்தி வந்துள்ளோம். நம் நோக்கம் பாடம் சொல்லிக் கொடுப்பது அல்ல! தமிழை ஓரளவு தெரிந்து கொள்ள வைப்பது மட்டுமே! அதனால்தான் இலக்கணங்கள் வரிசையாக வராமல் மாறி மாறி வந்திருக்கும். இந்த எழுபதாவது பகுதியோடு இந்த தொடர் நிறைவு பெறுகிறது. இலக்கணம் முழுமையும் சொல்லவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்! அன்றாட வாழ்வுக்கு எழுதவும், பேசவும், தேர்வுகளுக்கு உபயோகமான இலக்கணங்களை அறிந்து கொண்டுவிட்டோம். இன்னும் ஆழ்ந்து சொல்லித்தர நான் இலக்கண ஆசிரியனோ தமிழாசிரியனோ அல்லன். நான் படித்ததை, நான் கற்றதை ஓரளவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே! இன்று நாம் பார்க்கப் போவது உரைநடை பற்றி.       தமிழ்ப்பாடம் என்றாலே செய்யுளும் உரைநடையும் என்று இருக்கும். கடவுள் வாழ்த்து ஆரம்பித்து பக்தி இலக்கியங்கள் வரை செய்யுள் வடிவில் படிப்போம். உரைநடை வடிவில் கட்டுரைகள், கதைகளை படிப்போம். செய்யு

புலி மாப்பிள்ளையும்! நரி மாமாவும்! பாப்பா மலர்!

Image
புலி மாப்பிள்ளையும்! நரி மாமாவும்! பாப்பா மலர்! வெகு காலத்திற்கு முன்னால் காட்டில் ஒரு நரி வசித்துவந்தது. அது மிகவும் தந்திரம் மிக்கது. புத்திசாலியான அது இக்கட்டான தருணங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதில் வல்லமை மிக்கது. அந்த காட்டில் ராஜா ஒருவரின் செம்மரி ஆட்டு பட்டி ஒன்று இருந்தது.    ராஜாவுடைய பட்டி என்பதால் அதற்கு நல்ல கவனிப்பு. அந்த ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல்! அது மட்டுமல்லாமல் நல்ல தீனியும் வேளாவேளைக்கு கிடைக்க அந்த ஆடுகள் நன்கு கொழுத்து இருந்தது. நரிக்கு அந்த ஆடுகளை பார்க்கும் போதெல்லாம் நாக்கில் நீர் ஊரும். இந்த ஆடுகளை அடித்துத் தின்றால் நன்றாக இருக்குமே! என்றாவது ஒருநாள் இவைகளை சுவைபார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.     ஆனால் அதனால் அந்த பட்டியை நெருங்கக் கூட முடியவில்லை! எந்த நேரமும் அங்கு ஆடுகளை காவல் காத்துக் கொண்டிருந்தனர் மேய்ப்பவர்கள். நரியினால் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அது பூமியைத் தோண்டியபடியே பட்டியை அடைந்தது. ஆனால அதன் பொல்லாத நேரம் அதனால் ஆடுகளை தின்ன முடியவில்லை. காவல்காரர்களிடம் சிக்கிக் கொண்டது.    ஆடு மேய்ப்பவர்கள் நரிய

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 14

Image
ஜோக்ஸ்! 21  1.       அவர் போலி டாக்டரா இருப்பார்னு எப்படி சந்தேகப் படறீங்க? அவர் கிளினிக்ல மருந்துக்கு கூட கூட்டம் இல்லையே! 2.       டெஸ்ட் போட்டிக்கும் டி 20க்கும் என்ன வித்தியாசம்?   அடிச்சு அவுட் ஆறது டி 20 ஆடாமலேயே அவுட் ஆகறது டெஸ்ட் போட்டி! 3.       தலைவர் எதையுமே வித்தியாசமா பண்ணுவார்? அப்படி என்ன பண்ணினார்? தன்னோட எதிரிகளை அழவைக்கணும்னு அஞ்ஞான் சி.டியை பார்சல் பண்ணி அனுப்பி இருக்கார்! 4.       தலைவருக்கு கட்சிக்குள்ளேயே எதிரிகள் பெருகிட்டாங்க? எப்படிச் சொல்றே? அஞ்ஞான் படம் பார்க்க கூட்டிட்டு போயிருக்காங்களே! 5.       மூணு டெஸ்ட் ஆடுறதுக்கு  ஒரே வாரத்துக்கு டூர் அரேஞ்ச் பண்ணியிருக்கீங்களே எப்படி சாத்தியம்! டூருக்கு வரப்போறது இந்தியன் டெஸ்ட் டீம் ஆச்சே! இதுவே அதிகம்! 6.       என் மனைவிகிட்ட தினமும் என் கைதான் நீளும் ஒரு நாள்தான் அவ கை நீளும்! எப்படி சொல்றே? முப்பதாம் தேதி சம்பளத்தை வாங்க மட்டும் அவ கை நீளும் ஒண்ணாம் தேதியிலிருந்து தினமும் பாக்கெட் மணிக்கு என் கை நீளும்! 7.       கேடி கபாலிக்கிட்ட இருந்து போன் வந்திருக்கு சார்!

செத்துப்போன டெஸ்ட் அணி! கதம்ப சோறு பகுதி 49

Image
  கதம்ப சோறு பகுதி 49 திட்டக்குழுவைக் கலைக்கலாமா?    சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசியதில் முக்கியமான ஒன்று திட்டக்குழுவினை கலைத்தல். அவர் சொன்னதின் சாராம்சம் என்ன வென்றால் இந்த குழுவினால் இப்போது எந்த உபயோகமும் இல்லை. சுதந்திரம் பெற்ற புதிதில் இந்த குழுவின் செயல்பாடுகள் தேவைப்பட்டது. செம்மையாகவும் இருந்தது. இப்போது சரியில்லை. இதை சரிப்படுத்தவும் முடியாது. எனவே நாட்டுக்குத் தேவையான வகையில் திட்டக் கமிசனை கலைத்து புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை இது சரியென்றே தோன்றுகிறது. எந்த ஒரு பொருளுக்கு ஓர் ஆயுட்காலம் இருக்கிறது. அது முடிந்தவுடன் அதை தூக்கிவீசிவிடுகிறோம். திட்டக்கமிசனும் அப்படித்தான். சுதந்திரம் பெற்ற புதிதில் நாட்டை வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல ஐந்தாண்டுதிட்டங்கள் வகுக்க இது அமைக்கப்பட்டது. இந்த கமிசன் அப்போது சிறப்பாக செயல்பட்டது. இப்போது சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னும் பழைய முறையில் செயல்பாடுகள் சட்டத்திட்டங்கள் என்பது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமையும். எனவே இப்போதுள்ள சூழலுக்குத் தகுந்தவாறு திட்டக்