Posts

Showing posts from May, 2014

பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்!

Image
பலே கிழவியும் முட்டாள் திருடர்களும்! பாப்பாமலர்!    வெகு காலத்திற்கு முன்னே கீரனூர் என்ற ஊரிலே ஒரு ஏமாற்றுக்காரன் வசித்து வந்தான். பிறரை ஏமாற்றிப்பிழைப்பதே அவனுக்கு வேலை. அந்த ஊரின் பக்கத்திலே மோகனூர் என்ற ஊர் இருந்தது. அங்கேயும் ஒரு ஏமாற்றுக்காரன் இருந்தான் அவனுக்கும் பிறரை ஏமாற்றுவதே குறிக்கோள் லட்சியம். இந்த இருவரும் ஏமாற்றுவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சி விட்டார்கள்.   ஒரு நாள் கீரனூர் காரன் குப்பன் யாரை ஏமாற்றலாம் என்று சிந்தனை செய்து கொண்டு ஒரு தூக்குச்சட்டியில் அடியில்  சாணத்தை நிரப்பி மேலாக சாதம் சிறிதளவு பரப்பி அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அதே சமயம் மோகனூர்காரன் சுப்பனும்  ஒரு தூக்குப்பாத்திரத்தில் அடியில் மணல் நிரப்பி மேலாக சிறிது அரிசி பரப்பி எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.    இந்த இருவரும் வழியில் ஒரு சத்திரத்தில் சந்தித்தனர். குப்பனுக்கு சுப்பனை பற்றி நன்கு தெரியும். அதே போல சுப்பனுக்கும் குப்பனைப் பற்றித்தெரியும்  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டு அமர்ந்தனர்.  அப்போது குப்பன், சுப்பனை பார்த்து, ”அண்ணே! உங்களை பார்த்ததில் மகிழ்

அட்சராப்பியாசம் அளிக்கும் இன்னம்பூர் எழுத்தறிநாதர்!

Image
அட்சராப்பியாசம் அளிக்கும் இன்னம்பூர் எழுத்தறிநாதர்! இன்னும் ஒரே வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து நன்கு படிக்க வேண்டும் என்று ஆயத்தப்படுத்தாத பெற்றோர்களே இல்லை. கேரளாவில் கோவில்களில் விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் என்னும் நெல்லில் எழுத்து எழுதவைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது உண்டு. இந்த மாதிரி வழக்கம் தமிழக கோயில்களில் இப்போது நடைபெறுவதாகத் தெரியவில்லை.       இந்த அட்சராப்பியாசம் நிகழ்ச்சி கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் வருடம் தோறும் நடைபெறுகிறது. புதிதாக பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் இந்த கோவிலுக்கு வந்து எழுத்தறிநாதரை அர்ச்சனை செய்து வணங்கி நெல்லில் எழுதி பழகுகின்றனர். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்திப் பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது.     பேச்சுத்திறமை இல்லாதவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறுவார்கள் என்ற நம்பிக்கை இந்தப்பகுதியில் காணப்படுகிறது.    தல வரலாறு:  சோழமன்னரிடம் கணக்கராக பணியாற்றிவர் சுதன

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 5

Image
ஜோக்ஸ்! 1.       மூணு வருசமா டிமிக்கி கொடுத்திட்டு இருந்த ஒரு திருடனை மடக்கி பிடிச்சிட்டீங்களாமே அப்புறம்? அப்புறம் என்ன? மூணு வருஷ மாமூலெல்லாம் வாங்கிட்டப்புறம்தான் விட்டோம்! 2.       அந்த டாக்டர்கிட்ட போனா டெஸ்ட் பண்ணி பார்க்கமா மருந்தே கொடுக்க மாட்டாரு!      நல்ல விசயம்தானே!    அட! நீவேற  அவர் டெஸ்ட் பண்றது பேஷண்டோட பர்ஸை! 3.       மன்னர் எதற்கு திடீரென மொட்டைப் போட்டுக் கொள்கிறார்? எதிரி மன்னன் அவரது முடியை இறக்கிவிடுகிறேன் என்று சவால்விட்டானாம். 4.       தலைவர் எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போறார்? வாக்கு வங்கி தொலைஞ்சி போச்சுன்னு கம்ப்ளைண்ட் பண்ணப்போறாராம்! 5.       எங்க வீட்டுல நான்    கண் அசைச்சா போதும் சாப்பாடு ரெடியாயிடும்! எங்க வீட்டுல நான் மாவாரைச்சா போதும் சாப்பாடு ரெடியாயிரும்! 6.       தலைவர் ஏன் பதவி ஏற்பு விழாவை புறக்கணிக்கிறதா அறிக்கை விடறார்? அவருக்கு அழைப்பே வரலைங்கிறதை சமாளிக்கத்தான்! 7.       தலைவர் எதுக்கு இப்ப கூட்டணி தர்மம் பற்றி பேசறார்? ஒரு மினிஸ்டர் போஸ்டாவாது தர்மமா கிடைக்காதாங்கிற நினைப்புலதான்! 8.       அந்

மோடி தர்பார்! கதம்பசோறு பகுதி 37

Image
கதம்பசோறு பகுதி 37 மோடியின் பதவியேற்பு:     நாட்டின் பதினைந்தாவது பிரதமராக திங்களன்று பொறுப்பேற்றுக்கொண்டார் நரேந்திர தாமோதர் மோடி. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து பிரதமரான அவருக்கு முதலில் வாழ்த்துக்கள். பத்தாண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் நாட்டை சீர்குலைத்ததை சீர்படுத்த சில மாதங்கள் அவருக்கு பிடிக்கலாம். அதுவரை குறை சொல்வதை தவிர்த்து அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்குவதே விமர்சகர்கள் மாற்றுக்கட்சியினரின் கடமை. மோடி பதவியேற்கும் முன்னரே சர்ச்சை ஆரம்பித்துவிட்டது. சார்க் நாடுகளின் தலைவர்களை குறிப்பாக ராஜபக்‌ஷேவையும் நவாஸ் ஷெரிப்பையும் அழைத்தமைக்கு  கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்புக்கள். இவை எதையும் மோடி காதில் வாங்கிக் கொள்ளவில்லை! தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சில சுயலாபங்களுக்காகத்தான் இவர்களை வரவழைத்தார் என்று இணையத்தில் தகவல்கள் பரவுகின்றன. அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. எப்படியோ இந்த இரு நாட்டு தலைவர்களை அழைத்ததில் அந்த நாட்டு சிறையில் இருந்த மீனவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் பிடிக்கவில்லை என்றால் அவர்ம

துப்பாக்கி!

Image
துப்பாக்கி! அப்போது எனக்கு ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயது இருக்கும்.ஒரு சிறிய பிராமணக்குடும்பத்தின் மூத்தமகன் நான். என் தந்தையார் ஒரு ராலே சைக்கிள் அப்போதுதான் வாங்கியிருந்தார். அதை எப்பொழுதாவது அவர் ஓட்டக்கொடுப்பாரா? என்று ஏக்கம் எங்கள் அனைவருக்கும் உண்டு. எங்கள் என்றால் என் தம்பிகளைத்தான் சொல்லுகிறேன்.    அந்த வயதில் எனக்கு குருவிக்காரன் என்று அழைக்கப்படும் நரிக்குறவர்களைக் கண்டால் பெரும் பயம்! அதற்கு காரணம் அவர்கள் தோளில் எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும் துப்பாக்கிதான். அந்த துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்கள் பல பறவைகளின் உயிரை சட்டெனக் குடிப்பதை பார்த்ததில் இருந்து அவர்களைக் கண்டாலே ஒரு மிரட்சி. எங்கே அவர்கள் நம்மையும் சுட்டுக் கொன்று விடுவார்களோ என்று ஒரு பயம். அதைக்கொண்டு விலங்குகளையும் பறவைகளையும் சுடமுடியுமே தவிர மனிதர்களை சுடமுடியாது என்ற அறிவெல்லாம் வளராத பருவமாக அந்த பருவம் அமைந்திருந்தது. இன்றையிலிருந்து எடுத்துக்கொண்டால் சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கிய காலத்தில் நடந்த கதை இது. இன்றைக்கிருப்பது போல பல வசதிகள் இல்லாத காலம் அது.

புகைப்பட ஹைக்கூ 74

Image
புகைப்பட ஹைக்கூ 74 பாடச்சுமையை விட பெரிதானது! பாசச்சுமை! படிப்பவர்களை பார்க்கையில் பாரமாகிறது மனசு! கலைந்த கனவை தேடுகிறாள் சாலையில்! வாழ்க்கையை ஓட்ட இழுக்கிறாள் வண்டி! தள்ளிப்போனது கல்வி! எட்டிப்பார்த்தது வறுமை! பாதை ஒன்றுதான் பயணம் எதிரெதிர்பாதைகளில்! ஏங்கும் பிள்ளைகள்! இறங்கிவராத கல்வி! பார்வைகள் ஒன்று! ஏக்கம் மட்டும் இரண்டு! வறுமையை துரத்த விரட்டப்பட்டது கல்வி! மிதிபட்டதால் தள்ளப்படுகிறது கல்வி! வண்டி ஓட்டுகையில் வாழ்க்கையும் சேர்த்து ஓட்டுகிறாள்! தடம் மாறிய பயணம் தடுமாறுகிறது ஒரு கணம்! ஏழ்மை சுகமானதால் சுமையாகிப்போனது ஏடு! அனைவருக்கும் கல்வி! இயக்கங்களின் தோல்வி! இளிக்குதுங்கே  சொல்லி! எட்டாக்கனியினை ஏக்கமுடன் பார்க்கும் பிஞ்சுகள்! சிலருக்கு நினைவாகிறது பலருக்கு வெறும் கனவாகிறது கல்வி! கரை சேரப்பயணிக்கின்றன கலங்கள்! களங்கள் மாறி! மிதிபட்டது வண்டி வலிபட்டது மனசு! எல்லோருக்கும் கல்வி! எள்ளி நகையாடுது துள்ளி! என்று திறக்குமோ இவர்

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57 வணக்கம் அன்பர்களே! சென்ற வாரம் படித்த ஒரு ஓர் குழப்பம் பகுதியை நிறைய பேர் பாராட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி! அந்த பகுதியை நினைவுகூற இங்கு: ஒரு ஓர் குழப்பம்    இந்த வாரம் நாம் படிக்க இருப்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அது உரிச்சொல்.    அது என்ன உரிச்சொல்? கடிநகர்,  தவசீலர், என்ற சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு உரிச்சொல்தொடர் என்று படிக்கையில் எழுதியிருப்பீர்கள். உங்கள் தமிழாசிரியரும் சால, உறு, தவ, நனி, கூர், கடி, கழி என்று  சொற்களின் முன் வந்தால் உரிச்சொல்தொடர் என்று எழுதுங்கள் என்று சொல்லிக்கொடுத்திருப்பார். நீங்களும் எழுதி இருப்பீர்கள். நம்முடைய கல்வி முறை அவ்வளவுதான். மதிப்பெண்களுக்காக படிக்கிறோம்! அதை மீறி எதையும் கற்றுக்கொள்வது இல்லை. கற்றுக்கொள்ள நாமும் ஆசைப்படுவதில்லை. சரி காலம் கடந்தாயினும் இப்போது கற்றுக் கொள்வோமே!    உரிச்சொல் ஆங்கிலத்தில் (Attribute) என்று வழங்கப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட பண்புகளை கொண்டதாய், ஒருசொல் பல பொருளும், பல சொல் ஒரு பொருளும் உணர்த்துவதாய் பெயர்ச்சொல், வினைச்சொல், ஆகிய சொற்களை விட்ட