Posts

Showing posts from June, 2013

இந்திய தலைமை நீதிபதியாக தமிழகத்தின் சதாசிவம் நியமனம்

Image
சென்னை : இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக, தற்போது, அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா, ஓய்வு பெற்ற பின், கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள, நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார்.ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல்,

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 20

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 20 இந்த பகுதிக்காக இணையத்தில் பலவற்றை தேடிய போது  இணையத்தில் தமிழ் வளர்ப்போர் ஏராளம் என்று அறிய முடிந்தது. தமிழையே உயிராகவும் மூச்சாகவும் கொண்டிருப்போர் பலர் என்று உணரமுடிந்தது. நாம் அவர்களோடு ஒப்புநோக்குகையில் இராமருக்கு உதவிய அணிலிலும் சிறியதாகவே என் பணி எனக்குத் தோன்றுகிறது. எனக்கு பெரிதாய் தமிழ் அறிவு ஒன்றும் கிடையாது. தமிழ்படித்தவனும் கிடையாது. ஆயினும் சிறுவயது முதலே தமிழ் மீது கொண்ட ஆர்வம்தான் இப்பகுதியை தொடரத் தூண்டியது.      இதில் வரிசையாக இலக்கணமாக எல்லாம் இல்லாமல் நான் அறிந்த தெரிந்துகொண்ட பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற பகுதியில் கடவுளர்களின் பெயரை தமிழ்ப்படுத்துதலில் சில சந்தேகங்கள் இருப்பதாக திரு நண்டுநொரண்டு ராஜசேகர் சொல்லியிருந்தார். அதன் பின் யோசிக்கையில் எனக்கும் சில சந்தேகங்கள் தோன்றியது. அது என்னவென்றும் அதற்கான விடைகளையும் தேடிக் கொண்டு இருக்கிறேன். சந்தர்ப்பமும் விடையும் கிடைத்தால் பகிர்கிறேன்.   இன்று நாம் பார்க்க போவது சிற்றிலக்கியங்கள் பற்றி.     சிற்றிலக்கியம் என்றால் என்ன? பிரபந்தம் என்ற வடமொ

நல்ல வைத்தியன்! பாப்பா மலர்!

Image
நல்ல வைத்தியன்!  பாப்பா மலர்! சின்னம்பேடு என்ற கிராமத்தில் சீனிவாசன் என்ற வைத்தியர் ஒருவர் வசித்து வந்தார். எத்தகைய நோயாக இருந்தாலும் தீர்த்துவிடும் ஆற்றல் அவருக்கு உண்டு. பல்வேறு வைத்திய நூல்களை கற்று எல்லாவிதமான மூலிகை மருத்துவங்களையும் படித்து இருந்தார். அதனால் அவ்வூரில் மட்டும் அல்ல பல சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும் அவரிடம் வைத்தியம் பார்க்க குவிந்தனர். அதனால் அவரது செல்வாக்கு கூடியது. அவருக்கு தலைக்கனமும் உண்டாகியது.     அவரை சந்திக்க வைத்தியம் செய்து கொள்ள முன்கூட்டி அனுமதி பெற்று வரவேண்டும் என்ற சூழலும் உருவாகியது. இருப்பினும் அவரிடம் வைத்தியம் செய்து கொள்ள நிறைய பேர் விரும்பியதால் வருமானம் செழித்து வந்தது. வைத்தியம் பார்ப்பது மட்டும் இல்லாமல் வைத்தியம் கற்றுக்கொடுக்கவும் செய்தார் அவர். அவரிடம் பல சீடர்கள் மருத்துவம் கற்றுக்கொண்டு உதவி செய்து வந்தனர். அதில் ஒருவன் நல்ல முத்து. நல்ல அறிவாளி திறமை சாலியும் கூட. நல்ல முத்து நோய்நாடி நோய் முதல் நாடி என்பது போல நோய் எதனால் வந்தது என்பதை நோயாளியின் பேச்சில் இருந்தே அறிந்து கொண்டு அதற்கேற்ப வைத்தியம் செய்யும் ஆற்றல்

அமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 3 ஆவியுடன் பேசினேன்!

Image
அமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 3 என் வாழ்க்கையில் நடந்த சில அமானுஷ்ய நிகழ்வுகளை கடந்த இரு பகுதிகளில் பகிர்ந்து கொண்டேன். கடவுள், பேய், பிசாசு, ஆவி, பூதம் போன்றவைகளை அனுபவத்தால் உணரமுடியுமே தவிர சொன்னால் விளங்காது. புரட்சி பேசுவோர் பேய் இல்லை! கடவுள் இல்லை என்று வாதிடலாம். அவர்களோடு வாதிட முடியாது. அவர்கள் இல்லை என்று நம்புகிறார்கள். நான் இருக்கிறது என்று நம்புகிறேன். நம்பிக்கையில் தான் இருக்கிறது வாழ்க்கை.       என் தந்தை ஒரு உபாசகர் என்று கூறி இருந்தேன். அவரிடம் சில தெய்வங்கள் பேசும். சில சக்திகள் இருந்தும் ஏழையை பணக்காரன் ஆக்குதல் போன்று சினிமாவில் வரும் ஜாலங்கள் ஏதும் செய்தது இல்லை. நோய் என்று வருவபருக்கு மந்திரித்து திருநீறு தருவார். சிலசமயம் கயிறு மந்திரித்து தருவார். உடல் நிலை சுமாராகிவிட்டதாக கூறி அவரிடம் நிறைய பேர் இன்றும் திருநீறு கேட்டு வருவர். அதற்காக கட்டணம் ஏதும் வசூலிப்பது இல்லை. இவரிடம் சில சக்திகள் இருப்பதால் எங்கள் குடும்பம் சில இன்னல்களை முன்னரே அறிந்து தவிர்த்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் விதி வலியது என்பது உண்மை. இதனால்தான் அவரால் தன்னுடைய முதல் மனைவியை

புகைப்பட ஹைக்கூ 36

Image
புகைப்பட ஹைக்கூ  ஓடி வந்து  நனைத்தது  அருவி! வீழ்ச்சியை கண்டதும் எழுந்தது மகிழ்ச்சி! அருவி! மலையைப் பிளந்தது மலைக்கவைத்தது அருவி! மழைமகளை தழுவிய மலைமகள்! அருவி! இரைச்சல் போட்டாலும் இன்பம்தான் அருவி! குளிர்வித்து குதூகலித்தது அருவி! பள்ளத்தில் விழுந்தாலும் உள்ளத்தில் நிறைந்தது அருவி! பள்ளம் நோக்கி பயணம் இல்லைஇதற்கு நிதானம் அருவி! மூலிகைகளை நனைத்து முகட்டில் குதித்தது அருவி! நுரைத்து வந்தாலும் புளிக்கவில்லை அருவி! மலையிலே தவழ்ந்து மண்ணிலே வீழ்ந்து மனதிலே இடம்பிடித்தது அருவி! ஆரவாரத்துடன் ஆடிவந்தது அருவி! பெறுக்கெடுத்த மழையால் உயிர்பெற்றது அருவி! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

"கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!

Image
     "கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!    ராஜ்யசபா சஸ்பென்ஸ் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது! எல்லோரும் நினைத்தது போல திமுகவிற்குத்தான் தன்னுடைய ஆதரவு என்று காங்கிரஸ் என்று கூறிவிட்டது. பாமக எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று சொன்னாலும் கூட்டணி பேரம் படியாததுதான் காரணம் என்று தகவல்கள் கசிகின்றன. கடைசி நேரத்தில் திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. புதியதமிழகம், மமக போன்ற உதிரிக் கட்சிகள் ஆதரவுடன் ராஜ்யசபாவில் கனிமொழி அமரப் போவது உறுதியாகிவிட்டது.      இப்போது பாவம் தேமுதிகவின் நிலை! கேப்டன் எதை நம்பி களத்தில் குதித்தார் என்றே தெரியவில்லை! சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழுபேர் அம்மா விசுவாசிகளாக மாறியபின் மார்க்சிஸ்ட்கள் ஆதரவு இல்லை என்றான பின் எப்படி ஜெயிப்போம் என்று நினைத்தார் என்று புரியவில்லை! காங்கிரஸ் ஒருவேளை ஆதரித்து இருந்தாலும் இவரது நிலைமை கவலைக் குறியாகத்தான் இருந்தது. அதனால்தான் என்னமோ சுதிஷை களம் இறக்காமல் இளங்கோவனை இறக்கிவிட்டார்.        இப்போது காங்கிரஸும் காலை வாரிவிட நட்டாற்றில் நிற்கிறார் கேப்டன். எப்போது எம்.எல்.ஏக்கள்

தளிர் கல்விநிலையமும் தளிர் அண்ணா ஆன கதையும்!

Image
தளிர் கல்விநிலையமும் தளிர் அண்ணா ஆன கதையும்!     சென்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் என்னுடைய அமானுஷ்ய அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இன்று நான் பகிரப் போவது தளிர் அண்ணா ஆன கதையை! இந்த தளிர் அண்ணா விஷயம் ஏற்கனவே விவாதத்திற்கு வந்த ஒன்று.  என்னுடைய  நினைவுகளை பகிர்கையில் ஒருசமயம் நான் டியுசன் எடுத்த கதையை கூறுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். இன்று என்ன பதிவு? என்று காலையில் யோசிக்கும் போது இதை பதிவிடலாமே என்று தோன்றியது. ஏனெனில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் டியுசன் எடுக்கப் போகிறேன். இந்த சமயத்தில் பழைய நினைவுகளை கொஞ்சம் அசை போடலாம் என்று நினைக்கிறேன். பதிவு நீளமானால் இரண்டு மூன்று பகுதிகளாக பிரிந்து வரும். பொறுத்துக் கொள்ளுங்கள்.         நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி நேரு நண்பர்கள் நலச்சங்கம் என்று ஒரு சங்கம் எங்கள் ஊரில் நடத்தி வந்தோம். அதனுடைய பத்தாவது ஆண்டுவிழாவில் கலை நிகழ்ச்சி செய்ய சிறுவர் சிறுமியரை தேடிய போது ஊரில் டியுசன் எடுத்துக் கொண்டிருந்த ஒரு கைம்பெண் உதவினார். அவருடைய டியுசனில் இருந்து சிலரை தேர்வு செய்து கொண்டோம். அவர் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே டிய

புகைப்பட ஹைக்கூ 35

Image
புகைப்பட ஹைக்கூ   ஏழ்மை பீடித்தாலும்   வீழவில்லை!   தாம்பத்யம்!  சுமையான துணை!  சுளிக்கவில்லை முகம்! படிக்கவேண்டும் படிப்பினை! வலிநிறைந்த வாழ்க்கை! சலிக்கவில்லை! வாழ்க்கைத்துணை! ஜடங்களுக்கு நடுவே நடமாடும் மனிதன்! முடமானது கால்கள்மட்டுமே திடமானது வாழ்க்கை! கைப்பிடித்த மனைவிக்கு நம்பிக்கை ஊட்டும் கணவன்! குடும்பத்தினை சுமந்தவளை கொஞ்ச நேரம் சுமக்கிறான் கணவன்!  கலியுகத்திலும் ஒரு  கல் ஆகாத  கணவன்!   தளர்ச்சி வந்தாலும்   வளர்ச்சி ஆனது   தாம்பத்யம்!   அன்பும் அறனும்   உடைத்தது   இல்வாழ்க்கை!   ஊன்று கோலாய் கணவன்   வென்று காட்டியது   தாம்பத்யம்!   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

புகைப்பட ஹைக்கூ 34

Image
புகைப்பட ஹைக்கூ கல் மெத்தையில் களைத்தவர்கள் உறக்கம்!   உழைக்கும் இந்தியரின் உறுதிமிக்க படுக்கை! ஓடிக் களைத்த ரயிலடியில் உழைத்து களைத்தவர்கள் படுக்கை! கூடாரமானது தொடர்வண்டி கூலித்தொழிலாளர்கள்! இருண்ட இந்தியா உறங்குகிறது தொடர்வண்டியடியில்! தலையணையான தண்டவாளம்! தலையெழுத்தை தொலைத்த தொழிலாளர்கள்! ரயிலடியில் இடம்பிடித்தது வறுமையின் பிடி! நிகழ்காலத்தை தொலைத்து எதிர்காலத்தை தேடுகிறார்கள் கூலித்தொழிலாளர்கள்! வறட்சி தந்த வீழ்ச்சி! ரயிலடியில் தொழிலாளர்கள்!  கல்லும் முள்ளும்  கனவுக்கு எல்லை!  கூலித்தொழிலாளர்கள்!    புலம் பெயர்ந்தவர்களுக்கு புகலிடமானது ரயிலடி! பொழுதெல்லாம் உழைத்தவர்கள் பழுதான ரயிலடியில்! கற்குவியலில் களைத்து உறங்குகிறார்கள் உழைத்தவர்கள்! கல்லாய் குத்தும் வாழ்க்கை களைத்து போட்டது படுக்கை!  களைத்துப் படுத்தாலும்  கவலையில் வரவில்லை!  உறக்கம்!  தண்டவாளமே தலையணை  கல்லே மெத்தை!  களைத்தவர்களை கலைக்கவில்லை உறக்கம்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த