Posts

Showing posts from May, 2016

லவ் டிராஜடி!

Image
லவ் டிராஜடி! வழக்கம் போல இந்த கோடை விடுமுறைக்கும் சொந்த ஊர் போகவேண்டும் என்று சொன்ன போது உமா முறைத்தாள்.” அது என்ன ஊர்? சுத்த பட்டிக்காடு! இன்னிக்கு உலகம் முழுக்க எத்தனையோ வசதிகள் வந்துருச்சு! ஏன் உங்க பட்டிக்காட்டை சுத்தி இருக்கிற ஊரெல்லாம் எவ்வளோ முன்னேறிடுச்சு! ஆனா உங்க ஊர் மட்டும்?  அதிகம் எதுவும் வேணாம்? ஒரு ட்ரான்ஸ்போர்ட் வசதியிருக்கா? ஒரு நெட் வொர்க் கவரேஜ் இருக்கா? என்னால அந்த ஊரிலெ ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுப்பா!” என்று மூச்சுவிடாமல் பாடி முடித்தாள்.    ”சரிசரி!  நீ வேணா சென்னையிலே உங்க மாமா வீட்டுல பசங்களோட தங்கிக்க அங்கே இருந்து ஒரு அம்பது கிலோ மீட்டர்தானே எங்க ஊர் நான் போய் ஒரு ரெண்டுநாள் இருந்துட்டு வந்துடறேன்!” என்று சொன்ன போது பெங்களூர் குளிரிலும் அவள் முறைத்தது சுட்டது.     “போனவருஷமே இதான் லாஸ்ட்னு சொன்னேன்! சரி சரின்னு தலையாட்டிட்டு இப்ப திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதே…!”    “என்னதான் இருந்தாலும் ஊர்ப்பாசம் விட்டுப் போவுதா? நீ உங்க அம்மா வீட்டுக்கு போறதை நான் அப்ஜெக்ட் பண்ணியிருக்கேனா?”    “ அதுவும் இதையும் கம்பேரே பண்ணாதீங்க!” சுத்த பட்ட

தளிர் ஹைக்கு கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கு கவிதைகள்! குடியிருப்பு அகற்றம் வேதனையில் எறும்பு! விரிசலில் பூச்சு! பற்றிய கால்கள் விட மறுத்தது ஈரநிலம்! தேடிக் கொண்டே இருக்கின்றன! தொலைக்காதவாழ்க்கையை! எறும்புகள்! கூடி சமைத்து உண்டும் பசியோடு வருகின்றன குழந்தைகள்! மண்சோறு! எழவு வீட்டில் அன்னியமாக சிரித்துக்கொண்டிருந்தது தலைவரின் படம்! மரிக்கையில் மணந்து கொண்டிருந்தது ஊதுபத்தி! சேரும் இடத்தின் சிறப்பை தனதாக்கிக் கொண்டது! தண்ணீர்! வீசப்படும் எச்சில் இலை! காத்திருக்கும் நாய்கள்! தட்டிப்பறிக்கிறது காற்று! பலமுறை படித்து முடிக்கையில் காணாமல் போய்விடுகிறது! புத்தகத்தின் புது வாசனை! பூட்டி வைப்பினும் சேர்த்துவிடுகின்றது அறையினுள் காற்று! தூசு! காற்று சேர்ந்தவுடன் ஆர்பரிக்கின்றன! கடல் அலைகள்! நெல்கொத்தவரும் குருவிகள்! சிறகடித்து அழுதன! நொடித்து போன வயல்கள்!  இருண்ட வீடு! விளக்கேற்றின மின்மினிகள்! மரங்கள்! சுட்டெரிக்கும் சூரியன்! மீட்டெடுக்கவில்லை  தாகம்! கானல் நீர்! எழுதப்படாத பக்கங்கள்! நிரப்பிக்கொண்டே

நான்கு உபதேசங்கள்! பீர்பால் கதை! பாப்பாமலர்!

Image
நான்கு உபதேசங்கள்! பீர்பால் கதை! பாப்பாமலர்! அக்பரின் அரசவையில் திறமையான அறிஞராகவும் மதியூகியாகவும் இருந்தவர் பீர்பால். ஒரு சமயம் அவர் மன்னர் அக்பரை விட்டு பிரிந்து  டில்லியை விட்டு வெகுதொலைவு கிளம்பினார். டில்லிக்கு கிழக்கே இருந்த அந்த ஊரில்  அவர் வசித்து வருகையில் ஒரு நாள் அங்கே ஒருவன் வந்தான். ‘உபதேசம் வேணுமா உபதேசம்! ஒரு உபதேசம் நூறு வெள்ளிக் காசுகள்!’ என்று அவன் கூவிக்கொண்டு இருந்தான். பீர்பாலுக்கு அவன் செய்கை வித்தியாசமாக இருந்தது. இதென்ன உபதேசத்தை விலைக்கு விற்கிறான். அப்படி அவன் என்னதான் சொல்லுகிறான் பார்ப்போம்! என்று அவனிடம் சென்று உபதேசத்தைப் பற்றி வினவினார் பீர்பால்.   அந்த மனிதன், “ என்னிடம் நான்கு அருமையான உபதேசங்கள் உள்ளன! ஒரு உபதேசம் நூறு வெள்ளிக் காசுகள் நான்கும் வேண்டுமானால் நானூறு வெள்ளிக் காசுகள்” என்றான்.   அவன் அப்படி என்னத்தான் உபதேசிக்கிறான் என்று பார்ப்போமே என்று பீர்பால்  தன்னிடமிருந்து ஒரு நூறு வெள்ளிக் காசுகளை கொடுத்து ஒரு உபதேசத்தை சொல்! என்றார்.   “ஒரு விஷயம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதனை சிறியது என்று எண்ணிவிடக் கூடாது!”

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 66

Image
 கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 66 1.    தலைவரே மக்கள் நம்பளை ஏமாத்திட்டாங்க! என்னய்யா சொல்றே? எல்லா தொகுதியிலும் டெபாசிட் வாங்கிட்டோம் தலைவரே! 2.    தலைவர் எனக்கு முதல்வர் பதவி மேல ஆசை இல்லைன்னு அறிக்கை விட்டது ரொம்ப தப்பாய் போயிருச்சு!   ஏன்? இந்த தடவையும் எதிர்கட்சி தலைவரா உக்கார வைச்சிட்டாங்களே! 3.    ஒவ்வொரு ரவுண்ட் முடிவு வரும்போதும் தலைவர் பண்ணுன அட்டகாசம் தாங்க முடியலை…!   என்ன பண்ணார்? இவர் ஒரு ரவுண்ட் ஏத்திக்கிட்டே இருந்தார்! 4.    மக்களுக்காக நான்…! மக்களாகிய நான்!...!   டயலாக் எல்லாம் நல்லா பேசுங்க! ஆனா ஆளும்போது கோட்டை விட்டுடுங்க…! 5.    தலைவரே நாம மூணாவது இடம் பிடிச்சிருக்கோம்…!   ஆரம்பிக்கும் போதே நாம அங்கத்தானடா இருந்தோம்! 6.    மக்கழே! என்னை வைத்து எத்தனை மீம்ஸ் போட்டு கலாய்த்து சந்தோஷப்பட்டீர்கள்! உங்களை சந்தோஷமாக வைத்த எனக்கு ஓட்டுப் போட்டு சந்தோஷப்பட வைக்காமல் விட்டுவிட்டீர்களே மக்கழே! இது நியாயமா மக்கழே! 7.    தலைவர் எதுக்கு தன்னோட முதுகு காட்டிகிட்டு இருக்கிற பேனரை தொகுதி பூரா ஒட்டி வைக்க சொல்றாரு…! ஜெயிச்சது

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 7

Image
விளம்பரம்!  ச்சீ ச்சீ! அசிங்கமப்பா!  திறந்த வெளியில் மலம் கழிக்காதீர்கள்! என்று விளம்பரம் எழுதியவன் எழுந்தான். அவசர அவசரமாக சென்று மரத்தடியில் ஒதுங்கினான். கரண்ட் அஃபேர்ஸ்!    ச்சே! பாழாப் போன மழை! ரெண்டு நாளா கரண்ட்டே இல்லை! ஆளறவங்களுக்கு ரெஸ்பான்ஸே இல்லை! என்றவள் கரண்ட் வந்ததும் போனை சார்ஜரில் சொருகி பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தாள் கரண்ட் வந்துருச்சி! ரிசல்ட்!    நாளைக்கு ரிசல்ட்! மதிவாணன் பரபரப்பாக இருந்தார். முடிவு என்ன ஆகுமோ? வெற்றியா? தோல்வியா? நினைத்ததற்கு மாறாய்ப் போனால்… அப்புறம் என்ன ஆகும்? முடிவு வந்தது நினைத்தபடி அவர் கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. யாருக்கோ போன் செய்து தலைவரே ப்ளான் சக்ஸஸ்! என்றார் சந்தோஷமாக. சிறப்புதரிசனம்!    250 ரூபாய் சிறப்பு தரிசனம்! க்யு குறைவாக இருந்தது. பொது தரிசனம் நீண்டு இருந்தது. காசிருந்தா நாமும் சீக்கிரம் கடவுளை பார்க்கலாம்! ராமு சொல்ல,  சும்மா இருடா! காசில்லாவிட்டாலும் கடவுளோட சன்னிதானத்திலே நாமல்லாம் கொஞ்ச நேரம்  நிக்கிறோம்! காசை கொடுத்தும் அவங்க சீக்கிரமா இல்லே துரத்திவிட்டுடாறாங்க! என்றான் சோமு. டிப்ஸ

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6

Image
நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 6 தாய்ப்பால்!   குழந்தைக்கு தாய்ப்பால் தாம்மா நல்லது. அதை நிறுத்தாதே! அப்பதான் குழந்தை வளப்பமா நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கும். அழகு குறைஞ்சிரும்னு தாய்ப்பால் தராம ஒதுக்கி வச்சுடாதே கண்ணு. என்று தன் பெண்ணுக்கு அட்வைஸ் செய்த மீனாட்சி தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கன்றை பிடித்து இழுத்து தள்ளிக் கட்டினாள். நோட்டா!   மறக்காம ஓட்டுப் போடுங்க! அது ஜனநாயக உரிமை! யாரையும் பிடிக்கலைன்னா கூட நோட்டாவுல ஓட்டு போடுங்க! ஆனா வாக்கு போடாம மட்டும் இருந்திராதீங்க. உங்க ஒரு ஓட்டு கூட ஓர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று புரட்சி வசனம் பேசிய நடிகர் மறந்துவிட்டார் ஓட்டு போட! பிடிப்பு:  வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு வேணுங்க! எது மேலேயும் பற்று இல்லேன்னா அது சன்னியாசி வாழ்க்கை! ஒரு குடும்பஸ்தனுக்கு இது கூடாதுங்க! புள்ளைங்க மேல பாசத்தை வைங்க! இல்லை பொண்டாட்டி மேல அன்பு காட்டுங்க அப்பதான் வாழ்க்கை இனிக்கும். இப்படி பேசிய சொற்பொழிவாளரின் கார் அதிவேகத்தில் செல்ல ஏம்ப்பா! என்ன ஆச்சு? பிடிப்பே இல்லைங்க!  என்னது?  ப்ரேக் பிடிக்கலைங்க என்றார் ஓ

மறக்காமல் போடுங்க ஓட்டு!

Image
மறக்காமல் போடுங்க ஓட்டு! கரை போட்ட வேட்டி கட்டி கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் என கேட்டு வருகின்றார் ஓட்டு! ஐந்தாண்டுக்கு ஓர் முறை ஆட்சியில் ஓர் மாற்றம் அதுதானே ஜனநாயகத்தின் தோற்றம்! ஓர் நபரே அரசாண்டால் அது முடியாட்சி ஊர் முழுக்க கூடி தேர் இழுத்தால் குடியாட்சி! மாற்றங்கள் என்று சொல்லி கேப்பாரு ஓட்டு! தோற்றங்களை உருவாக்கி ஆளுகின்ற நாடு! இலவசங்கள் என்றே சொல்லி எல்லோரையும் பின்னோக்கி பல வருசங்கள் தள்ளினது யாரு? கோடிகளை சேர்த்துக் கொள்ள கொடுக்கிறாங்க சில நூறுகள்! கேள்விகளை கேக்க முடியுமா யோசித்து பாரு! உன் ஓட்டு உன்னுரிமை அதை விற்று நோட்டுக்கு கொடுக்கலாமா முன்னுரிமை? நோட்டாவுக்கு போட்டாலும் போடு! நோட்டுக்கு போடாதே ஓட்டு! நலத்திட்டங்கள் நற்பணிகள் செய்வதிங்கே யாரு? நல்லாவே நீ யோசிச்சு பாரு! உன் விரலில் கறை பட்டாலும் கறைபடாத நபர்களையே நீ  தேடு! உன் ஒரு  வாக்கும்  உருவாக்கும் ஓர் மாற்றம்! உன் மனதில் இதை நீ ஏற்று! வாக்கினை பதிவாக்கி உன் செல்வாக்கினை நீ உயர்த்து! நம் நாட்டை வழிநடத்த நல்லதொரு தலைவனை நீ அடையாளம் காட்டு. அதற்க

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! சுழற்சி நின்றதும் தோன்றியது புழுக்கம்! மின் விசிறி! பிரித்து வைத்தாலும் சேர்ந்து கொள்கிறது குழந்தைகளிடம் மண்! தலைகவிழ்ந்ததும் நிமிர்ந்தான் விவசாயி! பயிர்கள்! காலச்சக்கரமில்லை கடந்தன நாட்கள் காற்றில் படபடத்தது நாட்காட்டி! உயர்ந்த இடம்! உயர்கிறது மதிப்பு! இளநீர்! நெடிய கட்டிடங்கள் தடுத்து நிறுத்தியது காற்றின் பயணம்! அடையாளத்தை கொன்று அகலமாகின சாலைகள்! மரங்கள்! விருட்சங்கள் வெட்டுபடுகையில் விரைகிறது   குளிர்சாதனப் பேரூந்து! மிச்சமிருக்கும் வயல்களில் எச்சங்களை தேடிக்கொண்டிருக்கிறது வண்ணத்துப் பூச்சி! கீறினாலும் இரத்தம் பீறிடவில்லை! சுடு சொற்கள்! குப்பையை கிளறி இரை தேடுகின்றது கோழி! கைப்பிடித்து நடத்திச்செல்கையில் கனவு தேசத்தை காண்பிக்கிறது குழந்தை! சிதறும் சிரிப்புக்களால் சேர்த்து வைக்கிறது குடும்பத்தை குழந்தை! குறும்புகள் ரசிக்கப்படுகையில் கோலோச்சுகிறது குழந்தை! சுடும் வெயில் ஊடுறுவ விடவில்லை! மரத்தின் நிழல்! தங்கள் வருகைக்கு நன்றி! ப