தித்திக்கும் தமிழ்! பாகம்.2 பகுதி 2 “வெள்ளத்தி மரம்”

தித்திக்கும் தமிழ்! பாகம்.2 பகுதி 2 “வெள்ளத்தி மரம்” பண்டைக்காலத் தமிழ்ப் பாடல்களில் பொருள் நயத்தோடு சிலேடையும் சொற்சுவையும் கலந்திருக்கும். அத்துடன் சில வரலாற்று குறிப்புகளும் மருத்துவக் குறிப்புகளும் கூட கலந்திருக்கும். நற்றமிழ் அறிஞர்கள் இயற்றிய இந்த பாடல்களை படித்து நாம் வியந்தோதுவதில் வியப்பேதுமில்லை. ஐயம் இட்டு உண், ஈவது விலக்கேல் என்று சொன்ன தமிழ்தான் ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்லியிருக்கிறது. பிறருக்கு உதவி செய்யவேண்டும். சாப்பிடும் போது எவர் வரினும் அவருக்கும் உணவு அளித்து உண்ண வேண்டும் என்று ஈகையை சிறப்பிக்கையில் யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிவிடக் கூடாது என்று ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்லிக் கொடுக்கிறது. தானம் வாங்குவதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்கச் சொல்கிறது தமிழ். புகழ்ச்சிக்காக பெருமைக்காக தானம் செய்பவரிடம் யாசகம் பெறாமல் இருப்பதே சிறப்பு என்கிறது பண்டைய இலக்கியங்கள். இதோ தனிப்பாடல் திரட்டில் ஒரு பாடல் வள்ளற்கைத் தலமில்லா மானிடரைப் பாடியவர் வாசற் போந்து தள்ளத்தள் ளூணடைந்த நோவெல்லாம் புலவீர்காள் சாற்றக் கேளீர்! உள்ளத்தன் பாற்கண்ணீர