Posts

Showing posts from April, 2017

இந்த வார விகடனில் எனது ஜோக்!

Image
இந்த வார விகடனில் எனது ஜோக்! இரண்டு மாதங்களுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததோடு இணைய இணைப்பும் சரிவர இல்லை. போன் மூலம் இணையம் இணைப்பது  சரிவர இல்லை! அதனால் வலைப்பூ பக்கம் வர முடியவில்லை! ஓய்வெடுக்கும் சமயத்தில் பத்திரிக்கைகளுக்கு படைப்புக்கள் அனுப்புவது உண்டு.   தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தில் இருப்பதால் நண்பர்களின் படைப்புக்கள் வெளிவருகையில் வாழ்த்துவதும் அவர்கள் நம்மை எழுதத் தூண்டுவதும் சகஜமாகிவிட்டது. மிக அருமையான வாட்சப் குருப் அது. நண்பர் புது வண்டி ரவீந்திரன் அவர்கள் அறிமுகம் செய்து இணைத்து விட்டார்.   அந்த குருப்பில் இணைந்தபிறகுதான் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலே தோன்றியது. நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனைகள் திருத்தங்கள் கூறி சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறார்கள் என்றால் அது பெருமையான விஷயம். பொறாமைப்படாமல் அவனுடையது வருகிறது எனது வரவில்லையே என்று யாரும் வேதனைப்படுவது கிடையாது. நிறைய பேரை ஊக்குவித்து மீண்டும் எழுதத் தூண்டியுள்ள அருமையான குருப் தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமம்.   இந்த குழுவில் நண்பர் கிருஷ்ண குமார் ஒரு முறை அலை பேசி உரையாடலில் விகடனுக்

தினமணி கவிதை மணியில் என் கவிதை

இன்றைய தினமணி கவிதைமணியில் என்னுடைய கவிதைகள் இரண்டு பிரசுரம் ஆகியுள்ளது அதில் ஒன்று என் மகள் பெயரில் எழுதியது  உடல் நலக்குறைவால் இத்தனை நாள் தளிர் மலரவில்லை இனி தொடர்ந்து மலரும். விசாரித்த நண்பர்களுக்கு நன்றி பச்சை நிலம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி  |   Published on : 03rd April 2017 03:46 PM  |   அ+அ அ-   | கண்ணுக்கு குளுமை தரும் பச்சை நிலம்! காண்போரை இச்சை கொள்ளச்செய்யும் பச்சை நிலம்! வயலெல்லாம் நாற்றுக்களாய் வளைந்தாடி வளர்ந்து நின்று உழவனை ஊக்குவிக்கும் பச்சை நிலம்! தீயாய் சுட்டெரிக்கும் கத்திரி தணலினிலே தென்றலாய் உடல்வருடும் ஓங்கி வளரும் பச்சை நிலம்! வற்றாத நதிகள் எப்போதும் பாய்ந்தோட வளர்ந்து அசைந்தாலும் புவியெங்கும் பச்சை நிலம்! குன்றாத மழை தப்பாமல் பொழிந்திட்டால் நன்றாக செழித்து வளர்ந்திடும் தரணியெங்கும் பச்சைநிலம்! பசுமை போர்த்தி அழகு சேர்க்கும் சாலையோர மரங்கள் குன்றின் மீது போர்வையாக வளர்ந்து அழகூட்டும் மரங்கள்! வீடு தோறும் வீதி தோறும் மரங்கள் வளர்த்திட கண்கள் காணும் காட்சியெல்லாம் பச்சை நிலம்! இயற்கை வண்ணம் பூசி செயற்கை சிறிதும் இன்றி பிறக்கும்