Posts

Showing posts from March, 2013

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12 அன்பான வாசக பெருமக்களே! ஏதோ விளையாட்டாக இந்த பகுதியை தொடங்கினேன். தமிழ் சொற்களையும் பொருட்களையும் இலக்கியங்களையும் படித்து அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்பது உண்மை! இன்றைய பகுதிக்கு எதை எழுதலாம் என்று யோசித்து தமிழ் நூல்களை புரட்டியதில் சுவாரஸ்யமான பகுதி ஒன்று கிடைத்தது. அதை கீழே தந்துள்ளேன். படித்து கருத்திடுங்கள்! திசைச்சொற்கள்:     திசைச்சொற்கள் என்றால் என்ன என்று தெரியுமா? படிக்கிற காலத்தில் படித்து இருப்போம்! இப்போது மறந்து போயிருக்கும். சரி அதை அப்புறம் பார்ப்போம். இப்போது கீழே உள்ள பத்தியை படியுங்கள்.       நம்பி குல்லா வாங்க ரிக்சாவில் ஏறி பஜாருக்குச் சென்றான். கடைக்குள் நுழைந்தவுடன் அலமாரியில் எக்கச்சக்க குல்லா இருப்பதை பார்த்தான். விற்கும் நபரிடம் “குல்லா என்ன விலை?” என்று கேட்டான். விலை இருபத்தைந்து ரூபாய். ஒரு குல்லா வாங்கினால் ஒரு பேனா இனாம் என்றான் கடைக்காரன். விலை ஜாஸ்தியாக உள்ளது என்று கூறிக்கொண்டே துட்டை எண்ணிக் கொடுத்தான் நம்பி. பீரோவில் இருந்து குல்லாவை எடுத்து கடுதாசியில் கட்ட

நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்!

Image
நான்கு திருடர்கள் கதை 4 பாப்பாமலர்! முழுத்திருடன் கதை! தன்னுடைய தம்பிகள் மூவரும் தங்களுடைய சாமர்த்தியமான திருட்டினால் தந்தையிடம் பேர் வாங்கிவிட்ட நிலையில் தன்னுடைய பெயரை நிலை நாட்ட முழுத்திருடன் குந்தள நகரம் வந்தான். அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்களை அணுகினான். அடேய்! தம்பிகளா! இந்த ஊரில் என்னடா விசேஷம்? என்று வினவவும் செய்தான்.    மாடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும், அண்ணே! இந்த ஊரில் மூன்று நாட்களாக திருடன் ஒருவன் புகுந்து செட்டியாரையும் தலையாரியையும் மந்திரியையும் ஏமாற்றி பொருட்களை கொள்ளையடித்து போய் விட்டான். எனவே இன்று மன்னரே அந்த திருடனை பிடிப்பதாக் சபதம் செய்து இருக்கிறார். என்று விவரம் சொன்னார்கள்.    இதைக்கேட்ட முழுத்திருடன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். குந்தள நகரம் சென்று பாக்கு புகையிலை உப்பு இனிப்பு போன்ற சாமான்களை வாங்கி ஒரு பெரிய கோணிப்பையில் வைத்து மூட்டையாக கட்டிக்கொண்டு சிறிய கூண்டு விளக்கு ஒன்றும் கொஞ்சம் விளக்கெண்ணையும் ஓலைப்பாய்கள் இரண்டும் வாங்கிக் கொண்டு வியாபாரி போல மாறுவேடமணிந்து தலைநகரின் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறமானபாத

ஓசிச்சோறு! பேஸ்புக்கில் பிடித்தவை!

Image
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர் , அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார் . ' ஐந்து பழங்கள் பத்து ரூபாய் !' என்று கூவி , பழங்களை விற்க முயன்றார் . எவரும் பழம் வாங்க முன்வரவில்லை . சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும் , இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான் . ' ஆறு பழங்கள் பத்து ரூபாய் !' என்று கூவினான் . அவனுக்கு நல்ல விற்பனை ! மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும் , ' ஐந்து பழங்கள் பத்து ரூபாய் !' என்று விற்க முயன்றார் . பலன் இல்லாமல் போகவே , கீழே இறங்கி விட்டார் . அடுத்து , ' ஆறு பழங்கள் பத்து ரூபாய் ' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன் , ஏகத்துக்கு விற்பனை செய்தான் ! மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார் . முதியவரை அருகில் அழைத்தவர் , " அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே ! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்