ராஜ்யசபா தேர்தலும் அம்மாவின் கணக்கும்!

ராஜ்ய சபா தேர்தலை ஓட்டி தமிழக அரசியல் களை கட்டியுள்ளது. இந்த முறை ஆறு எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சூழலில் அதிக எம். எல். ஏக்களை உடைய அதிமுகவிற்கே அதிக வாய்ப்பாக நான்கு எம். பிக்கள் கிடைக்க வாய்ப்பு இருந்தது.
    ஐந்தாவது நபர் கூட்டணிக் கட்சிக்கு தோழமை அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தா. பாண்டியன் களத்தில் குதித்தார். சாதரணமாகவே ஆட்சியில் கூட்டணியில் இருப்பவருக்கு துதிபாடும் இனத்தை சேர்ந்தவரான தா. பா. அம்மா எப்படியும் தம்மை எம். பி ஆக்கி விடுவார் என்று எம்பி எம்பி குதித்து கொண்டிருந்தார்.
     ஆறாவது இடத்திற்கு திமுக மற்றும் தேமுதிக இடையே போட்டி இருந்தது. தேமுதிக முதல் முறையாக ராஜ்யசபாவில் இடம்பிடித்து சுதிஷை அங்கே அலங்கரிக்க முடிவு செய்து திமுகவுடன் பேரம் நடத்தியது. தன் பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை கொண்ட மு.க. வோ இப்பொது பழம் கனிக்கே! அடுத்தமுறை கனிந்தால் பார்க்கலாம் என்ற ரீதியில் பேச தேமுதிக சுதாரித்துக் கொண்டது. அது தனித்து நின்றாலும் பிரயோசனம் இல்லை! திமுகவுக்கு ஆதரவு அளித்தால் ஊழலுக்கு துணை போன கனிமொழியை ஆதரித்ததாக சச்சரவு வரும் என்று இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறது தன்னுடைய எம். எல் ஏக்களில் ஏழு பேரை அதிமுகவிற்கு தாரை வார்த்த அது இன்னும் எத்தனை பேர் காலை வாருவார்கள் என்று தெரியாமல் உள்ளது.
   ஒரு எம்பிக்கு 34 எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் அதிமுக எளிதாக நான்கு எம்பிக்களை வென்றுவிடும். ஐந்தாவது நபருக்கே அடுத்தவர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் அந்த இடத்தை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்காமல் போட்டியிட வேட்பாளர் அறிவித்து கூட்டணியினரின் காலை வாரினார் ஜெ.
     தன்னிடம் உள்ள 151 உறுப்பினர்கள் தவிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏக்களை இழுத்து ஐந்தாவது நபரை வெற்றி பெற வைக்கலாம் என்பது ஜெயின் கனவாக இருந்தது. ஆனால் தேமுதிகவில் இருந்து போதிய எம்.எல்.ஏக்களை இழுக்க முடியவில்லை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் அதிமுக ஆதரவு நிலையில் இருந்து விலகி இந்திய கம்யூனீஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தது. இரண்டு கம்யூனிஸ்ட்களும் இணைந்து கொண்டதால் அனாவசியமாக ஒரு நட்பு கட்சியை பகைத்துக் கொண்ட நிலையே அதிமுகவிற்கு ஏற்பட்டது.
 
   இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் ராஜா நேற்று முதல்வரை சந்தித்து பேசிவிட்டு மனுதாக்கல் செய்தார். இதையடுத்து திடீரென ஜெ ஓர் அதிரடி அறிவிப்பு செய்தார். இந்தியகம்யூனிஸ்ட்டிற்கு ஆதரவு தருவதாகவும் ஒரு வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்து மற்ற கட்சிகளுக்கு கலக்கம் தந்துள்ளார். இதில் பாவம் பாதிக்கப்பட்டது தங்கமுத்துதான். மூன்று முறை லோக்சபாவிற்கு போட்டியிட்டு தோற்ற அவருக்கு ராஜ்யசபா சீட் கிடைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. ஆனால் இதெல்லாம் அம்மாவின் கட்சியில் சர்வ சகஜம். அம்மாவின் இந்த விளையாடல் இப்போது கலக்கத்தை தந்திருப்பது திமுகவிற்கு மட்டுமே தேமுதிகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் கனிமொழிக்கு இப்போது காங்கிரஸின் ஆதரவு கட்டாயம் தேவை. ஆனால் காங்கிரஸ் ஆதரவை தேமுதிக முன் கூட்டியே கேட்டுவிட்டது. இதனால் இப்போது திமுகவா தேமுதிகவா என்ற சிக்கலில் காங்கிரஸ் உள்ளது.
      தேமுதிக போட்டியிடாவிட்டால் திமுகவின் கனிமொழி எளிதாக எம். பி ஆகிவிடுவார். இப்போது தேமுதிக களத்தில் இருப்பதால் அந்த கட்சி மற்ற கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.  .
  தேமுதிகவின் இளங்கோவன் களத்தில் உள்ளார். அவருக்கு நேரடிப்போட்டியாக கனிமொழி உள்ளார். இந்த மோதலில் கனிமொழிக்கு ஆதரவு தந்து தேமுதிக விலகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாதபட்சத்தில் தேமுதிக மொத்த எம்.எல்.ஏக்களில் ஏழுபேர் அதிமுக ஆதரவு ஆறுபேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளதால் 13 பேர் ஓட்டளிக்க வாய்ப்பு இல்லை! 34 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில் வெறும் 16 பேர் போட்டியிடுவது திமுகவிற்கு பின்னடைவை தரும். 151 எம்.எல்.ஏக்களை உடைய அதிமுக 4 இடங்களில் வென்றுவிடும் அதிமுக ஆதரவுடம் இந்தியகம்யூனிஸ்ட் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
   திமுகவிற்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர் இன்னும் 11 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில்  கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தந்து அந்த  உறுப்பினர்களின் ஆதரவை திமுக பக்கம் செல்லாதவாறு தடுத்து உள்ளார் ஜெ. அதே சமயம் தேமுதிகவின் வாய்ப்பையும் பறித்து உள்ளார். மார்க்சிஸ்ட் தேமுதிகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்ததாக தகவல்கள் கசிந்தன. ஜெவின் இந்த முடிவு அதை நிறுத்திவைக்கும்.
   தேமுதிக தன் ராஜ்ய சபா கனவை ஒத்திவைக்கவேண்டிய சூழலுக்கு இதனால் தள்ளப்பட்டுள்ளது.  திமுகவும் காங்கிரஸ் மற்றும் உதிரிக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. ஆனால் எளிதாக ஐந்து இடங்களை கைப்பற்றப் போகிறது அதிமுக கூட்டணி. மீண்டும் திமுக காங்கிரஸ் பால் சென்றால் அதன் செல்வாக்கும் குறையும் இப்படி இரட்டை அடி கொடுத்து உள்ளார் ஜெயலலிதா. ஒரு காலத்தில் பலமான கட்சியாக பல மந்திரிகளுடன் வலம் வந்த திமுக இன்று ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு கையேந்த வேண்டிய சூழல் காலத்தின் கோலமே!  தன் முதல் தந்திரம் பலிக்கா விட்டாலும் இந்திய கம்யூனிஸ்டிற்கு ஆதரவு தந்து தேமுதிகவின் வாய்ப்பை கெடுத்து ஒரு போட்டியை உருவாக்கிவிட்டார் ஜெ. இந்த தந்திரம் பலிக்குமா?பொறுத்திருந்து பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.

Comments

  1. நல்ல அலசல்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!