பத்ம விருதுகள் அறிவிப்பு! விருதை நிராகரித்த பின்னணி பாடகி ஜானகி!

பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கலை, சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பிரிவுகளில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர், பெயர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 108 பேர், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், நான்கு பேர், பத்ம விபூஷன் விருதுக்கும், 24 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், 80 பேர், பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு தேர்வானவர்களில், 24 பேர் பெண்கள்.ஒடிசாவை சேர்ந்த ரகுநாத் மெகாபத்ரா, டில்லியை சேர்ந்த ஹெய்தர் ரஸா, உ.பி.,யைச் சேர்ந்த பேராசிரியர் யாஷ்பால், கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் ரோத்தம் நரசிம்மா ஆகியோர் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த, திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, ராமமூர்த்தி தியாகராஜன் மற்றும் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், நடிகை சர்மிளா தாகூர், மறைந்த இந்தி திரைப்பட நடிகர் ராஜேஷ் கன்னா உட்பட, 24 பேர், பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த, தற்போது மும்பையில் வசிக்கும் நடிகை ஸ்ரீதேவி, ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், லட்சுமி நாராயண சத்திய ராஜூ, ராஜ் ஸ்ரீபதி, டாக்டர்.டி.வி.தேவராஜன் மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற, துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உட்பட, 80 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.அதேநேரத்தில், மிகப்பெரிய விருதான, "பாரத் ரத்னா விருதுக்கு, இந்த ஆண்டு யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு முன், 2008ம் ஆண்டில், மறைந்த, பீம்சென் ஜோஷிக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த விருதுகள் எல்லாம், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் வழங்கப்படும். 
2013ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிரபல பின்னணி  பாடகி எஸ்.ஜானகி பத்மபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அந்த விருதை அவர் புறக்கணித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் மழலை குரலுக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்றவர் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தனது 19வயதில் பாட தொடங்கிய ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். இதுவரை 4முறை தேசிய விருது, 31முறை பல்வேறு மாநில அரசுகளின் விருது, பிலிம்பேர் ‌விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

இந்நிலையில் நேற்று மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுக்கு எஸ்.ஜானகியும் தேர்வாகியுள்ளார். ஜானகிக்கு பத்மபூசன் விருது வழங்கப்பட இருக்கிறது. தனது 74வயதில் இந்த விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார். ஆனால் இந்த விருதை நிராகரிப்பதாக ஜானகி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. பத்மவிருதுக்கு தேர்வு செய்யப்படுவர்கள் பெரும்பாலும் வடஇந்தியர்களாகவே இருக்கின்றனர். தென்னிந்தியர்கள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகின்றனர். இது மிகவும் வருத்தமளிக்கிறது.  எனவே எனக்கு கொடுக்கப்பட இருக்கும் பத்மபூசன் விருதை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.                                                                                             நன்றி : தினமலர்

Comments

  1. டிவியில் அவர் சொன்னதைப் பார்த்தேன்.தாமதமாகக் கொடுத்ததால் மறுத்தது நியாம்தான். ஆனால் பாரத ரத்னா கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் என்று சொன்னார். அது கொஞ்சம் டூ மச் சாகத் தெரிகிறது.

    ReplyDelete
  2. ஜானகி அம்மாவின் குரல் வளம் எனக்கு மிக மிகப்
    பிடிக்கும் .இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு எனது
    மிக்க நன்றி சகோதரரே .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!