உறுத்தல்


உறுத்தல்


     சிறுகதை

‘அய்யா” அழைத்தது குரல். வராண்டாவில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த நான் தலைநிமிர்ந்தேன். “என்ன?” என்றேன் பார்வையால் வணக்கமுங்கய்யா என் பேரு முனுசாமி ஜாதிச்சான்றிதழ் வேணுமுங்கய்யா அதான் ஐயாவண்ட வந்தேனுங்கய்யா கையில் வைத்திருந்த விண்ணப்பத்தை நீட்டினான்.
     உயரமாய் ஒடிசலாய் கைக்கட்டி நிற்கும் அவனைப்பார்த்து எதுக்குய்யா கம்யூனிட்டிசர்டிபிகேட் என்றேன். . “கடை ஒண்ணு போடனுங்க” “என்ன கடைப்பா”
தலையை சொறிந்துகொண்ட அவன் செருப்பு பை எல்லாம் தெச்சி விக்கிறதுக்கு சாமி” என்றான்.
     “அப்படியா நான் கையெழுத்துப் போடனுமுன்னா 100ரூபா வேணுமே”
   “ சாமி இல்லாதவன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா”
  “இதுல பாரபட்சமே கிடையாதுப்பா லஞ்சம் எல்லோருக்கும் பொதுவுடைமை ஆகிப்போச்சு 100ரூபா ரெடி பண்ணிட்டுவா கையெழுத்து வாங்கிட்டுப்போ”
“சரிங்கய்யா” அவன் அகன்றான்.
நான் அந்தப்பகுதி வி.ஏ.ஓ.எந்த ஒரு வேலைக்கும் என்னிடம் தான் வரவேண்டும் அந்த இறுமாப்பில் தான் திருப்பி அனுப்பினேன்.மாலை ஆபீசில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன்.தீடிரென செருப்பின் வார் அறுந்துவிட்டது. “ச்சே” எரிச்சலாய் வந்தது.யாராவது செருப்பு தைப்பவர்கள் கிடைப்பார்களா என்று தேடினேன்.அதோ ஒருவன். சென்று வார் அறுந்துடுச்சு தெக்கனும் என்றேன்.
நிமிர்ந்த அவன் அடையாளம் கண்டுகொண்டு சார் நீங்களா? என்றான்.
காலையில் கையெழுத்திற்காக வந்தவன். ஐந்து நிமிடத்தில் தைத்து முடித்தவன் சார் பத்து ரூபா என்றான்.
     அஞ்சு நிமிஷவேலைக்கு பத்துரூபாயா அநியாமா இருக்கே என்றேன்.அஞ்சுரூபாதான் தருவேன். என்று ஒரு அஞ்சு ரூபாத்தாளை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.சிறிது தூரம் நடந்திருப்பேன் சார்!சார்! அவன் பின்னாலேயே குரல் கொடுத்தபடியே ஓடிவந்தான்.
    நின்று என்னப்பா கையெழுத்தா ? 100ரூபா ரெடி பண்ணிட்டியா? என்றேன்.
இல்லசார்!.. “பின்ன என்ன?” “சார் நீங்க 5ரூபா கொடுப்பேன்னு சொன்னீங்க.”
“அதான் கொடுத்திட்டேனே”. இல்ல சார் நீங்க 10ரூபா கொடுத்திட்டீங்க நீங்க கொடுத்த 5ரூபாத் தாளில் ரெண்டுத்தாள் ஒட்டிண்டிருந்தது சார்.இந்தாங்க 5ரூபா என்று 5ரூபாயை திருப்பி தந்தான்.
    செய்யும் வேலைக்கு சம்பளம் கிடைத்தும் உபரியாய் லஞ்சம் வாங்கிய நான் அவன் முன் கடுகாய் சிறுத்துப்போனேன். அவனது செயல் என்னை உறுத்த நாளைக்கு வாப்பா கையெழுத்துப்போட்டுத்தரேன் என்றேன் தவறுக்குப் பிராயச்சித்தமாய்                                             {மீள்பதிவு.}                                                     டிஸ்கி} வலைப்பூ தொடங்கிய புதிதில் பதிவிட்ட சிறுகதை நிறைய பேர் படித்திருக்க வாய்ப்பில்லை! எனக்கு பிடித்த கதை அதனால் மீண்டும் பதிவிட்டுள்ளேன்!                                  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

Comments

  1. வறுமையிலும் நேர்மை .

    ReplyDelete
  2. அருமையான கதை
    மீண்டும் பதிவிட்டு அறியச் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பான சிறுகதை....வாழ்த்துக்கள் நண்பா...!

    ReplyDelete
  4. கதை அருமை சுரேஷ். அந்த நேர்மை வாழ் நாளெல்லாம் அவனை மாற்றினால் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. என்ன ஒரு நேர்மை! உறுத்தல் அசத்தல், சுரேஷ்.
    பாராட்டுகள்!

    ReplyDelete
  6. ஊதுற சங்கை ஊதி இருக்கீங்க ,இந்த கதைப் படிக்கும் லஞ்சவாதிகளுக்கு உறுத்தினால் நல்லது !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!