பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 31
உங்கள் பிரிய “பிசாசு”
முன்கதைசுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் அழைத்து வரும் பெண் செல்வியின் உடலில் ப்ரவீணா என்ற பெண்ணின் ஆவி புகுந்து கொள்கிறது. குஹாத்ரி மலை சுவாமியிடம் அது வந்த சமயம் அங்கு ப்ரவீணாவை கொன்றவனை முன் நிறுத்துகிறார் சுவாமிஜி.
  முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:















http://thalirssb.blogspot.in/2013/01/30.html பகுதி 30                    
  தாயே என்னை மன்னித்து விடு என்று காலில் விழுந்தவனை ஆவேசத்துடன் பார்த்தாள் ப்ரவீணா.
அன்னிக்கு நானும் இப்படித்தானே கதறினேன்! என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னேனே கேட்டீர்களா? கதற கதற கற்பழித்து கொன்றீர்களே?
  தாயே! அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை! நான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டவன். என்னிடம் ஏமாற்றி விட்டார்கள். வீட்டை கொடுத்ததை தவிர வேறு எந்த பாவமும் அறியாதவன் நான்.
   செல்வி எகத்தாளமாய் சிரித்தாள்.
அதனால் தான் பாவமன்னிப்பு கேட்கிறாயா? போ! பிழைத்துப் போ! உன்னை கொல்வதால் எனக்கு எந்த லாபமும் வந்து விடப்போவதில்லை!
 அப்போ நீ ஏன் இப்படி இந்த பொண்ணை பிடிச்சிகிட்டு அலையற?
அதான் சொன்னேனே என் கணக்கு ஒன்று பாக்கி இருக்கிறது என்று!
அதுதான் யார்?
அதைச் சொன்னால் நீங்கள் தடுத்து விடுவீர்கள்! உங்களால் முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்! என்னை நாசப்படுத்தியவர்களில் அவன் தான் முதன்மையானவன்! அவனை தேடித்தான் இங்கு வந்தேன்!
அப்போது சுவாமிஜி! சுவாமிஜி! என்றவாறு ஒரு நாற்பது வயது நபர்  வந்து நிற்க
  என்ன என்றார் சுவாமிஜி கோபத்துடன்
அவர் ஏதோ சுவாமியின் காதில் கூற சுவாமி தலை அசைத்தார்.
 செல்வி ரவியை பார்த்தாள்.
அக்கா! அக்கா! என்றான் ரவி கண்ணீருடன் தம்பி! அழாதே! உனக்கு ஒன்றும் இல்லை! நான் வந்த காரியமும் இன்றோடு முடிந்து விடும் அப்புறம் இந்த பெண்ணிடம் இருந்து விடை பெற்று விடுவேன்.
  அக்கா நீ யாரை தேடி வந்திருக்கே!
அது ரகசியம் தம்பி!
என்னிடம் கூட சொல்ல மாட்டாயா?
காரியம் முடியும் வரை அதை சொல்வதற்கு இல்லை! முடிந்த பின் உங்களுக்கே தெரியும்.
உன் காரியம் எப்போதக்கா முடியும்?
அநேகமாக இன்றிரவுக்குள் முடிந்து விடும்!
சரி நீ போய் ஓய்வெடுத்துக் கொள்! இந்த சுவாமிஜி என்னை கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இங்கிருந்து நகர என்னால் முடியவில்லை!
  சுவாமிஜி அக்காவை விடுவித்து விடுங்கள்!
அது அவ்வளவு சுலபம் அல்ல!
ஏன்?
இவளை விடுவித்தால் மீண்டும் எப்படி சிறை பிடிப்பது? பொதுவாகவே சிறைபடுத்திய ஆவிகளை விடுவித்தால் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியது வரும்!
அப்போது இவளை விடுவிக்க மாட்டீர்களா?
அதை அந்த குகன் தான் முடிவு செய்ய வேண்டும்  மலையில் தண்டாயுதபாணியாக நின்ற முருகனை கை காட்டினார் சுவாமிஜி.
 பொழுது வேகமாக கரைந்து கொண்டிருந்தது.
சரி இவர்கள் இங்கேயே இருக்கட்டும்! எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது! போய் விட்டு வந்து விடுகிறேன்!
சித்தப்பா நானும் கூட வருகிறேனே! எனக்கு இங்கே இருக்கப் பயமாய் இருக்கிறது!
இங்கென்ன பயம்! இவர்கள் உன் நண்பர்கள்தானே!
ஆமாம்! ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் நிலையில் என்னை அவர்களோடு விட்டு விடாதீர்கள்!
 முகேஷ்! நீ வீணாக பயப்படாதே! இவள் என் அக்கா உன்னை ஒன்றும் செய்ய மாட்டாள் என்று ரவி சொல்ல செல்வியும் இது சுவாமிஜியின் எல்லை! இங்கு அவர் கட்டளைப்படிதான் நடப்பேன் என்றாள்.
  சுவாமிஜி புன்னகை புரிந்தவாறு இனி உனக்கு என்ன பயம்? பயப்படாதே நான் இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவேன்! வந்தவுடன் உங்களுக்கு விடுதலையும் தருவேன் என்று அர்த்தமுடன் கூறிச் சென்றார்.
  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க முகேஷ் இந்த கதையில எனக்கு ஒண்ணு புரியலை! என்று முணு முணுத்தான்.
  உன்னோட அக்காதான் ப்ரவீணா அவ செல்வியை பிடிச்சிகிட்டு இருக்கா ஓக்கே! தன்னை கொன்னவங்களை பழிவாங்க வந்திருக்கா! எல்லாம் சரி! இது நடந்து ஏறக்குறைய பத்து பன்னிரண்டு வருசம் ஆகியிருக்கும் போல! இதுக்கெல்லாம் மூல காரணம் அந்த பண்ணையார்!
அவரு பஞ்செட்டியிலும் இல்லை! நத்தத்துலயும் இல்லே! அப்ப அவரு எங்கே! கருவிகளை பழிவாங்கின ப்ரவீணா கர்த்தாவை என்ன செய்ய போறா?
    அப்போது செல்வியின் கண்கள் ஒளிர்ந்தன!
முகேஷ்! சரியா கண்டுபிடிச்சிட்டே! கர்த்தாவை தேடித்தான் இப்போ இங்க வந்திருக்கேன்!
 கர்த்தா இங்கதான் இருக்காரா?
இதே ஊரிலேதான் இருக்கார்! கிரானைட் பேக்டரி நடத்திகிட்டு இருக்கான்!
 அப்போது மணி சத்தம் கேட்டது!
அவனுக்கு சாவு மணி அடித்து விட்டது என்றாள் ப்ரவீணா!
                                            மிரட்டும்(31)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!