ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7


ஓல்டு ஜோக்ஸ் பகுதி 7

1.இவனோட அப்பா நம்ம நாட்டுக்காக உயிரையே கொடுத்தவரு..
  பெரிய தியாகியா?
 உஹூம் பெரிய ரவுடி போலீஸே சுட்டுக் கொன்னுட்டாங்க!
                                           நிதின்.
2.டேய்! உனக்கு நம்ம மானேஜர் கிட்ட இருந்து போன் வந்திருக்கு!
 ஏன் போன் அவருக்கு வேணாமாமா?
                               பாஸ்கி.
3.உங்களுக்கு வாரண்ட் வந்திருக்கண்ணே!
 ஐயையோ!  ஊழலை கண்டு பிடிச்சிட்டாங்களா?
 அட இது இண்ட்ரஸ்ட் வாரண்ட் அண்ணே!
                                 பாஸ்கி
4.மாமியாருக்கு சர்க்கரை வியாதின்னு  டாக்டர் சொன்னதும் உடனே நான் ஸ்வீட் சாப்பிடறதையே விட்டுட்டேன்!
பரவாயில்லையே உன் மாமியார் மேல அவ்வளவு பாசமா?
 நீ வேற! அந்த நியுஸே எனக்கு ஜென்மத்துக்கும் ஸ்வீட் சாப்பிட்டமாதிரி ஆயிருச்சு!
                            வி.சாரதிடேச்சு
5.அந்த ஆள் ஏன் கோபப்பட்டார்?
அவர் பேத்தியோட இருக்கார் என்ற அர்த்தத்தில் பேத்திகிட்டே இருக்காருன்னு சொல்லிட்டேன் அதான்.
                     சாயம் வெ.ராஜாராமன்.
6.ஆபிஸ் வேலைக்கு போறவங்களை மட்டும் மையமா வச்சி ஒரு படம் எடுக்கப் போறேன்!
அப்ப நிறைய கனவு சீன் இருக்கும்னு சொல்லுங்க!
                         சென்னிமலை சி.பி.செந்தில்குமார்.
7.நான் நாட்டுலே சிறந்த தலைமையை உருவாக்குவேன்!
  நீ என்ன கிங் மேக்கரா?
இல்லை ஹேர் டை தயாரிக்கிறேன்!
                               தஞ்சை தாமு.
8.என்ன நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு பாத்திரம் வாங்கி சேர்க்கப்போறேன்னு சொல்லிட்டு நீ தினமும் ஒரு புடவை வாங்கிட்டு இருக்கே?
 இந்த புடவையெல்லாம் பழசான பாத்திரக்காரன் கிட்ட போட்டு பாத்திரம் வாங்குவேன்!
                                  வி.சாரதிடேச்சு.
9.நம் மன்னர் ஏன் தினமும் பிச்சைக்காரன் வேஷத்துலேயே இரவு நகர்வலம் போகிறார்?
 கொஞ்சம் வருமானமும் கிடைக்கும்ல!
                                கோவி. கோவன்.
10.பாங்க்ல மாடு வாங்க லோன் வாங்கினீங்களே ஏன் கட்டலை?
   கயிறு வாங்க லோன் கொடுக்கலையே!
                                     வி.சாரதிடேச்சு
11.உங்க படம் ஆனாலும் ஸ்லோவா போகுது!
    நிஜமாவா?
  ஆமாம்!பக்கத்து தியேட்டர்ல நைட்ஷொ படம் முடியும்போதுதான் உங்க படம் ஈவினிங் ஷோவே முடியுதுன்னா பாருங்களேன்!
                                      வி.சாரதிடேச்சு
12.தலைவர் எங்கேயாவது அடிவாங்கப் போறாருன்னு எப்படி சொல்றே?
 எவ்வளவு காலத்துக்குத்தான் பாட்டியையே கட்டிப்பிடிச்சிகிட்டு போஸ் கொடுக்கிறது ஒரு மாறுதலுக்கு வைப்பாட்டியை  கட்டிப்பிடிச்சிட்டு போஸ் தரட்டுமான்னு கேக்கறாரு!
                                      அசூர்.ஆர். பார்த்திபன்.
13.தலைவர் ரொம்ப அடிமட்டத்துலேயிருந்து வந்தவருன்னு எப்படி சொல்றே?
பின்னே தேர்தல்ல தனக்கு டிக்கெட் கொடுக்கலைன்னு தெரிஞ்சவுடனே எதாவது ப்ளாக்ல கிடைக்குமான்னு பார்க்க சொல்றாரே!
                                  க.ராஜசேகர்.
14.தம்பி இங்கே பங்க்சர் எந்த இடத்திலே போடுவாங்க தெரியுமா?
   ட்யுபிலே எந்த இடத்திலே பொத்தல் விழுந்திருக்கோ அந்த இடத்திலேதான்!
                                           பாஸ்கி
15.ஆனாலும் நம்ம லதாவுக்கு பணத்திமிர் அதிகம்!
  எப்படி சொல்றே?
எல்லோரும் புடவைக்கு கஞ்சிதான் போடுவாங்க! அவ மட்டும் காம்ப்ளான் போடுவா!
                          வி.சாரதிடேச்சு.
16.இட்லி மல்லிப்பூ மாதிரி இருக்குமுன்னு சொன்னா போதாதா! இப்படி நார்ல கட்டிக்கொண்டு வைக்கணுமா?
                              தஞ்சை இரா.ஆதி.
17 என்ன ஆச்சர்யம் ஆபிஸ் ஸ்டாஃப் எல்லாம் தூங்காம சுறுசுறுப்பா இருக்காங்க!
இன்னிக்கு ஸ்டிரைக் பண்றாங்கய்யா!
                                 எம் பூங்கோதை
18என்னங்க நம்ம தலைவரு எல்லா மீட்டிங்கிலேயும் ஒரே மேட்டரையே பேசறாரு?
     இல்லாட்டி “பேச்சு மாறிட்டாருன்னு எதிர்கட்சிகாருங்க தாஙக்குவாங்கலாம்!
                                   ப்ராசீஷ்.
19.அவர் போலி பல் டாக்டர் போல இருக்கு!
  ஏன்?
வாய் துர்நாற்றத்துக்கு பல் இடுக்கிலே ஊதுவத்தியை கொளுத்தி சொருகிக்க சொல்றாரே!
                                      எம். பூங்கோதை
20என்னங்க கட்சியிலே தொண்டர்கள் எல்லாம் ஓடறாங்க?
 பின்னே என்னங்க! தலைவர் ரயில் மறியல் மாதிரி கப்பல் மறியல் பண்ணலாம் எல்லோரும் கப்பலுக்கு முன்னே கடல்ல போய் படுங்கன்னு சொன்னா?
                                             பாஸ்கி.
நன்றி: ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Comments

  1. ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

    http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!