ஓல்டு ஜோக்ஸ் பகுதி 5


ஓல்டு ஜோக்ஸ் பகுதி 5



1.   ஏன் அவருக்கு லோன் சேங்க்ஷன் ஆகலை?
மொட்டை மாடியிலே கிணறு வெட்டப் போறாராம்!
                     எம் சிதம்பரம்.

2.    என்னை கைவிட மாட்டியே!
சேச்சே! மாட்டேன்.. ரவி!
அடிப்பாவி!  நான் முரளிடி!
                         எஸ்.குமாரவேல்

3.   கத்தியெடுத்தவன் கத்தியாலே சாவான்றது எப்படி உண்மையாயிருச்சு பார்த்தீங்களா?
நீங்க எதைச் சொல்றீங்க?
மூணு கொலை பண்ணிட்டு ஜெயில்ல இருக்கிற மாயாண்டிக்கு ஆபரேஷன் நடக்க போவுதாமே?
                        மணிரத்னம்.

4.   யோவ் ராப்பிச்சை! உன் மகன் இப்ப எங்க இருக்கான்?
அவன் மாமனார் வீட்டுல வீட்டோட பிச்சைகாரனா இருக்கான் சாமி!
                              வாணியம்பாடி ராஜ்குமார்.

5.   மீட்டருக்கு மேல எனக்கு காசு வேணாம்.. தப்பான மீட்டர் இல்லே இது.. சுத்திகிட்டு எல்லாம் போகமாட்டேன்.. லக்கேஜுக்கும் எக்ஸ்ட்ரா வேண்டாம்! இப்படியெல்லாம் சொல்றீயே .. நீ ரொம்ப நல்ல ஆட்டோக்காரந்தாம்பா!
அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்! முதல்ல சீக்கிரம் வண்டியிலே உக்காருங்க! ஆட்டோ சொந்தக்காரங்க வர்றதுக்குள்ளே கிளம்பிடனும்!
                              சேஷமணி.

6.   என்னங்க இது போயும் போயும் இந்த டாக்டர் கிட்டேயா நான் கண் செக் பண்ணிக்கணும்?
ஏன்? என்ன ஆச்சு?
பாருங்க அவருக்கே பார்வை நேரம் ஆறு டூ ஒன்பது  மூணு மணிநேரம்தான் போட்டிருக்கு!?
                              என். ஜெயலஷ்மி.

7.   இப்படி கள்ளச்சாராயம் காய்ச்சி மாட்டியிருக்கியே இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?
தெரியாது எசமான்!
மாசம் முன்னூறு ரூபா மாமூல் கட்டனும்!
                                      நிலா.

8.   எங்க தலைவர் யாரையும் கால்ல விழ விடமாட்டார்!
பரவாயில்லையே!
அவருக்கு தோப்புக்கரணம் போடறவங்களைத்தான் ரொம்ப பிடிக்கும்!
                                    வி.வைத்தியநாதன்.

9.   என்னதுங்க கோயில் பிரகாரத்துல ஏதோ அட்டையை போட்டு உருட்டிகிட்டு போறாங்க?
தலைவரோட கட் அவுட்டாம்! தலைவரால அங்க பிரதட்சணம் பண்ண வர முடியலையாம்!
                                 எம். பூங்கோதை.

10. இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!
இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!
வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?
                                  ஆ. ஹரிபிரசாத்.

     11. என்னங்க இது ஆஸ்பத்திரிக்குள்ள இத்தனை புரோகிதருங்க..?
   நான் தான் ஏற்கனவே சொன்னேனே! இந்த ஆஸ்பத்திரியிலே எல்லா வசதியும் இருக்கு.. ஆபரேஷன்ல ஆரம்பிச்சு அதற்கு அப்புறம் தேவைப்படற எல்லா வசதியும் உண்டு.
                                      ஆர். சிவகுமார்.

12. தொகுதி மக்கள் இப்படி கேட்பாங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கலை!
என்ன கேட்டாங்க?
இத்தனை வருஷம் எம்.எல்.ஏ வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை!எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்க போறீங்கன்னு கேக்கறாங்க!
                                எஸ். அருண்.

13. அது ஒரு மெகாத்தொடர்னு எப்படி சொல்றே?
டைட்டிலே நாலு வாரத்துக்கு மேலதான் முடியுமாம்!
                               உ.ரா. ஜெயக்காந்தன்.

    14. ஆபரேஷன் தியேட்டர்ல ஏதோ தப்பு நடந்து போச்சுன்னு எதை வைச்சு சொல்றே?
பேஷண்ட் ஃப்ரியா நடந்து வர்றார். டாக்டரை வார்டுக்கு தூக்கிட்டு போறாங்களே!
                                           கடலூர் சார்லி.

15.பேஷண்டோட பல்ஸையும் உங்க வாட்சையும் பாத்துகிட்டு குழம்பி போய் நிக்கறீங்களே என்ன டாக்டர்?
இரண்டுல எதோ ஒண்ணு நின்னுடுச்சு.. அதான்!
                                         கடலூர் சார்லி.

16.எங்க ஆபீஸ்ல சரியா வேலை செய்யலைன்னா தரைலதான் உட்காரனும்.
ஏன்?
சரியா வேலை செய்யலைன்னா எங்க மானேஜர் சீட்டை கிழிச்சிருவாரு! அதான்!
                          வி. சாரதி டேச்சு.

17.உங்க பையன் ஸ்கூல்ல தன்னை விட புத்திசாலியான பையன் ஒருத்தனை கூடவே வச்சிருக்கான். ஆனா அவனை முன்னேறவே விட மாட்டேங்கிறான்!
  அவன் பிற்காலத்துல பெரிய அரசியல் வாதியா வருவான்னு சொல்லு!
                                                    வே. சீதாராமன்.

18.கடைசி ஸீன்ல ஹீரோ வில்லியான தன் அத்தையை திருத்திடறாரு!
ஓஹோ ஆண்டிக் கிளைமேக்ஸா! பேஷ்!
                                        வெ. சீதாராமன்.

19.பல்வலியால உங்க மனைவி வாயை திறக்கமுடியாம நாலு நாலா அவஸ்தை பட்டிகிட்டு இருந்திருக்காங்க! நீங்க என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க?
  மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுகிட்டு இருந்தேன்!
                         வெ.சீதாராமன்.

20.என்ன சார் இது கல்யாண மண்டபத்துல வந்து பத்து சாப்பாடு பார்சல்னு ஆர்டர் பண்ணிகிட்டு இருக்கீங்க?
 சார் எங்க ஆபிஸ்ல எல்லோரும் என்னை எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறீங்கன்னு நச்சரிச்சிட்டு இருக்காங்க அதான்!
                          சென்னிமலை சி.பி. செந்தில்குமார்.


நன்றி} ஆனந்தவிகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!