தளிர் அண்ணா கவிதைகள்!


தளிர் அண்ணா கவிதைகள்

     குழந்தை

கோடி வீட்டு கோமளா கண் வைப்பதும்
பக்கத்து வீட்டு பாபுவிடம் பார்த்து பழகவும்
திருட்டு பாலாஜி வந்தால் பொருட்களை மறைக்கவும்
அடுத்த ஊரு மாமிக்கு அளப்பு ஜாஸ்தி என்பதும்
தள்ளி வைப்பதும் குற்றம் காண்பதும்
ஒளிவு மறைவு எதுவும் குழந்தைக்கு கிடையாது.
அதனுலகில் அதற்கு எல்லோரும் “பட்டுத்தாத்தா,பட்டுபாட்டி பட்டு அண்ணா,பட்டு அத்தை”மட்டும் தான்.







அப்பாவின் கட்டில்.

முற்றத்தில் நடு நாயகமாய்
வீற்றிருக்கும் அப்பாவின் கயிற்று கட்டில்.
பர்மா தேக்குல செஞ்சதுடா என்று அவர்
சொல்வதே தனி அழகு.
யாரையும் அதில் அமர விட மாட்டார்
என்னைத் தவிர
வெயில் காலத்தில் வேப்ப மரத்தடி நிழலுக்கும்
அறுவடைக்காலத்தில் களத்து மேட்டிற்கும்
சென்றாலும் அப்பா அதை பராமரித்த விதமே தனி
தளர்ந்த கயிறுகளை இறுக்கும் வித்தையை
பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்.
பின்னோர் நாளில் நீ படுத்துக்கோடா என்று
அப்பா சொன்ன போது என் மகிழ்சிக்கு அளவே இல்லை
காலத்தின் சுழற்சியில் கல்யாணமாகி
மரக்கட்டில் பஞ்சு மெத்தை என மாறிப்போனது படுக்கை.இன்று அப்பாவை போல
மூலையில் கிடக்கிறது அப்பாவின் கட்டில்.                                                           டிஸ்கி: வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதிய கவிதை! அப்பொது பலரின் பார்வையில் படவில்லை! அதனால் மீள்பதிவு செய்திருக்கிறேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி1  


Comments

  1. கவிதை சூப்பருங்க. என்றுமே குழந்தையாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.படங்களும் நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  2. இரண்டு கவிதையுமே அருமை . மீள்பதிவில் தவறில்லை எனக் காட்டியது. முக நூலில் முதல் கவிதையை பகிர்ந்தேன் கவலைப் படாதீர்கள் உங்கள் பெயரைப் போட்டுவிட்டேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!