உரிமையடையும் நாள் என்னாளோ?
உரிமையடையும் நாள் என்னாளோ?
வீடிழந்தோம்! குடியிருந்த ஊரிழந்தோம்!
நாடிழந்தோம்
நல்ல நண்பர்களை இழந்தோம்!
உறவிழந்தோம்
உற்றதுணைஇழந்தோம்!
பெற்ற மண்ணிழந்தோம்!
அகதிகளாம் நாங்கள்!
மாற்றாந்தாய் அரவணைப்பில்
மறந்திடுமா எங்கள் சோகங்கள்!
சொல்லிழந்தோம் மொழியிழந்தோம்
போராடி போராடி சுமையாகிப்போனோம்!
மொழியாலே ஒன்றிணைந்தாலும்
விழியாலே வேறுபட்டு பாழும்
அரசியலில் பகடையாய் அடிபட்டு
வேறிழந்து தவிக்கிறோம் நாங்கள்!
எத்தனைதான் வசதிகள் கொடுத்திடினும்
எங்கள் சோகம் தீர்ந்திடுமா?
என் நாடு கிடைக்குமா? என்ற ஏக்கம்தான்
தீர்ந்திடுமா? இழந்தவனுக்குத்தான் தெரியும்
இழப்பின் வலி! எங்கள் வலி கொஞ்சமல்ல!
வீதீயிலே விளையாடும் எங்கள் பிள்ளைகளுக்கு
எங்கள் நாடு மறந்து போகும் முன்னே
எங்கள் விதி மாறுமா?
எத்தனைதான் இழந்தாலும் இன்னும்
உணர்விழக்கவில்லை நாங்கள்! இதை
உணராமல் தமிழர்கள் எங்களை
தள்ளி வைப்பது ஏனோ? உணர்வாலே
ஒன்றுபட்டு உரிமையடையும் நாள்
என்னாளோ அன்னாளே எங்கள் பொன்னாள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகரலாமே!
அருமையான பதிவு
ReplyDeleteமே தின வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
we can get more traffic, exposure and hits for you
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்
நன்றி
தமிழ்.DailyLib
உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
ReplyDeleteஎனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
www.suncnn.blogspot.com