தளிர் ஹைக்கூ கவிதைகள்! 7

சங்கீதத்தில்
சங்கேதம் பேசுகின்றன
இரவு பறவைகள்!

ஓசை சத்தத்தில்
உறங்கவில்லை இரவு
புல்லினங்கள்!

சலனப்பட்டு
வாழ்க்கை இழக்கிறது
நீர்!

மரங்களின் பின்னால்
மறைந்திருக்கின்றன
ஊர்கள்!

ஓசை எழுப்பினாலும்
சுகம்தான்!
காற்று!

காற்றில் காதல்தூது!
பூத்தன
மரங்கள்!


இச்சை கொண்டன
கண்கள்
பச்சையான பூமி!

மின்னியது
கூசவில்லை!
மின்மினி!

வெட்டியதும்
பாராட்டினார்கள்!
குளம்!

துரத்திக்கொண்டே இருக்கிறது
தெரியவில்லை!
காலம்!

 

வெள்ளை தேவதை விஜயம்
பெருமூச்சுவிட்டது பூமி
நிலா

கட்டிவைத்தார்கள்
மணத்தது!
கூந்தலில் பூ!

தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!