இரட்டை அடி வாங்கிய ஜெ! பெங்களூரில் ஆஜராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்! நூலகமாற்றத்திற்கு தடை விதித்த ஹைக்கோர்ட்!

டெல்லி: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும். இதற்கு நாள் கணக்கெல்லாம் கிடையாது. நீதிமன்றம் அனைத்துக் கேள்விகளையும் கேட்டு முடிக்கும் வரை போயாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.

இதுதொடர்பாக விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்து, 66 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அக்.20 மற்றும் 21-ம் தேதிகளில் ஜெயலலிதா நேரில் ஆஜரானார். அவரிடம் மொத்தம் 1350 கேள்விகள் கேட்க நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவும், அரசு சிறப்பு வக்கீலும் திட்டமிட்டிருந்தனர். இதில் 2 நாள் விசாரணையின்போது 567 கேள்விகள் கேட்கப்பட்டன. பாக்கி உள்ள 783 கேள்விகளை கேட்பதற்காக நவம்பர் 8ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ஜெயலலிதா தாக்கல் செய்தார். அதில் ``நான் கோர்ட்டு உத்தரவுபடி 2 நாட்கள் ஆஜராகி விளக்கம் அளித்து இருக்கிறேன். மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்த கூடாது'' என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த மனுவை நீதிபதி தல்வீர் பண்டாரி, டி.எஸ்.தாகூர் உள்பட 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வியாழக்கிழமை விசாரித்தது.

விசாரணை ஒத்திவைப்பு

விசாரணையின் போது நீதிபதி டி.எஸ்.தாகூர், இந்த வழக்கின் பெஞ்ச் நீதிபதி பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக அறிவித்தார். தனது விலகலுக்கு எந்த காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து அவருக்கு பதிலாக நீதிபதி தீபக் மிஸ்ரா மூன்று நீதிபகள் குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 8-ம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அன்று வசதிப்படாவிட்டால் வேறு நாளில் ஆஜராவது குறித்து தெரிவிக்க பெங்களூரு நீதிபதியை அணுகவேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டதாவது:

விசாரணைக்கு நாள் வரம்பு எல்லாம் கிடையாது. மொத்த கேள்விகளையும் கேட்டு முடிக்கும் வரை விசாரணையை தொடரவேண்டும். ஒரேநாளில் விசாரணை முடியாவிட்டால் அடுத்தடுத்த நாள்களில் விசாரணை தொடரவேண்டும். வழக்கின் முக்கியத்துவம் கருதி பெங்களூரு நீதிமன்றம் விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும். வழக்கு விசாரணைக்காக வரும் ஜெயலலிதாவிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவேண்டும். என்றும் கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக்மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும். இருப்பினும் வேறு நாளில் ஆஜராக கோரிக்கை விடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பதால் நிச்சயம் வேறு ஒரு நாளைக்கு ஜெயலலிதா வாய்தா கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இடமாற்றத்திற்கான காரணத்தை 6 வாரகாலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி சென்னை கோட்டூர்புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கடந்த திமுக ஆட்சியில் பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. நவீன வசதிகள் கொண்ட இந்த நூலக கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும். கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்றும் செவ்வாய்கிழமை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழறிஞர்களும், நூலக வாசகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர்கள் புகழேந்தி, பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுருந்தனர். அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இடைக்காலத்தடை

மனுவை விசாரித்த நீதிபதிகள், நவீன வசதி கொண்ட நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன் என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். குழந்தைகள் மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்க வில்லையா? என்றும் அவர்கள் வழக்கறிஞரிடம் கேட்டனர். இதனையடுத்து நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அரசின் முடிவுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அந்த நோட்டீசிற்கு 6 வார காலத்திற்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் இந்த இடைக்கால தடை உத்தரவு செல்லும் என்றும் நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

  1. மூன்றாம் கோணம்
    பெருமையுடம்

    வழங்கும்
    இணைய தள
    எழுத்தாளர்கள்
    சந்திப்பு விழா
    தேதி : 06.11.11
    நேரம் : காலை 9:30

    இடம்:

    ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

    போஸ்டல் நகர்,

    க்ரோம்பேட்,

    சென்னை
    அனைவரும் வருக!
    நிகழ்ச்சி நிரல் :
    காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
    10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

    11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
    12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
    1 மணி : விருந்து

    எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
    ஆசிரியர் மூன்றாம் கோணம்

    ReplyDelete

Post a Comment