அறிஞர்களின் பொன்மொழிகள்!

அறிஞர்களின் பொன்மொழிகள்!

நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
                                          நெப்போலியன்.

வீரன் தோல்வியைக் கண்டு ஓட மாட்டான்.
                                                    நெப்போலியன்.

தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி!
                                              பெர்னாட்ஷா.

கற்றவரும் அறிஞரும் வீரர்களும் ஒரு நாளும் பணத்தை வாழ்வின் லட்சியமாக கொள்ள மாட்டார்கள்.
                                                               ரஸ்கின்.

உழைக்காமல் வாழ்பவன் தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவன்.
                                                             ரஸ்கின்.

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்.
                                                                             கன்பூஷியஸ்.
நன்மைக்கு நன்மை செய்! தீமைக்கு நீதி வழங்கு!
                                                                          இங்கர்சால்.

நுண்ணறிவுடன் அன்பும் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவுமே உலகில் இல்லை!
                                                                                கதே

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன் என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்.
                                                                                 கதே.

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
                                                                                                 கார்லைல்.

தான் பயந்தவன், பிறரையும் பயப்பட செய்கிறான்.
                                                                                                 மகாவீர்.

வாழ்வென்னும் ஆடையில் இன்பம் துன்பம் என்னும் இரு நூல்களும் இருக்கவே செய்யும்.
                                                                                                    ஷேக்ஸ்பியர்.

அரசியல்வாதி கடவுளையும் ஏமாற்றக் கூடியவன்.

                                                                                                        ஷேக்ஸ்பியர்.

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்.
                                                                                 விவேகானந்தர்.

வீணான விரயம் வேதனை தரும் வெறுமைக்கு வழி வகுக்கும்.
                                                                                     புல்லர்.
அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.
                                                                              பெர்னாட்ஷா..

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
                                                                                    நெப்போலியன்.

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும்.
                                                                           கண்ண தாசன்.

எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களிடம் விழிப்பாய் பழக வேண்டும்.
                                                                                                         கண்ணதாசன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
                                                                                         

Comments

  1. நல்ல தொகுப்பு.....தொடருங்கள்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

      Delete
  2. ஆஹா சூப்பர்ய்யா சூப்பர்ப்...!

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை

    ReplyDelete
  4. உன்னத வரிகளை Bookmark செய்து கொண்டேன்.
    நன்றி...

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  5. பொன்மொழிகள் எனக்கு எப்போதுமே பூஸ்ட் பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!