சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!
சகல சௌபாக்கியம் தரும்
வரலஷ்மி விரதம்!
சிராவண மாதம் (ஆடி
அல்லது ஆவணி) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள்
அனுஷ்டிக்கும் விரதம் வரலஷ்மி விரதம் ஆகும்.



கலசத்தில் ஒன்பது வெத்தலை, ஒன்பது பாக்கு,
ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் இட வேண்டும்.நெய் பந்தம் ஆரத்தி செய்தல் வேண்டும்.
இந்த பூஜை முடித்தபின் மறுநாள் கலசத்தை எடுத்து பத்திரமாக வைத்திருந்து அதில் இட்ட
அரிசியில் மறு வெள்ளியன்று பொங்கல் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

லஷ்மி
ஸ்தோத்தரம், மற்றும் துதிகளை பாடி பூஜை செய்யலாம். வசதியுள்ளவர்கள் இதற்கென உள்ள
புரோகிதர்களை அழைத்தும் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் சுமங்கலிகளுக்கு
தாம்பூலம் கொடுத்து சிறப்பிக்க வேண்டும்.

விரதம் முடிந்தபின். பிராமணன், சன்யாசி,
தெய்வம்,பிரம்மச்சாரி, சுவாசினி, என ஐந்து நபர்களுக்கு நைவேத்தியம் செய்த
பட்சணங்களை வாயன தானம் செய்ய வேண்டும். அதன் பின்னரே தன் உபவாசம் முடிக்க
வேண்டும்.
விரதக் கதை!

பின்னர் சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம்
தருமாறு பார்வதியிடம் கேட்க பார்வதியும் எப்பொழுதுஅழகிய தடாக தீரத்தில்
தேவகன்னிகைகள் புண்ணியமான விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்பொழுது உன் சாபம் நீங்கும்
என்று கூறினாள்.அதன் பிறகு சித்ர நேமி ஒரு தடாக கரையில் குஷ்ட ரோகியாக வசித்து
வந்தான்.

அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு
குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றான். பார்வதி தேவியும் இந்த விரதத்தை
அனுஷ்டித்து ஷண்முகரை பெற்றாள்.விக்ரமாதித்தன் இவ்விரதம் அணுஷ்டித்து
நந்தனிடமிருந்து ராஜ்யம் பெற்றான். நந்தனின் மனைவி அனுஷ்டித்து பிள்ளைப்பேறு
பெற்றாள். குண்டினம் என்ற நகரத்தில்
வசித்த சாருமதி என்ற பெண் இவ்விரதமிருந்து சகல சௌபாக்கியமும் பெற்றாள்.
லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும்
பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள்.
எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள்
முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும்
இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும்
வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக வாழ்வார்கள்!
சகலவரும் வரலஷ்மியை வணங்குவோம்! வரம் பெற்று
இன்பமாக வாழ்வோம்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!
திரட்டிகளில் இணைத்து பிரபல படுத்துங்கள்!
படமும் பதிவும் அருமை...
ReplyDeleteநன்றி....
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteamman maathamaana aadi mathaththil nalla pathivu...
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் பின் தொடர்கைக்கும் நன்றி!
Deleteஎங்கள் வீட்டிலும் வரலக்ஷ்மி விரத பூஜை செய்யப் பட்டது.விளக்கமும் படங்களும் நன்று.இன்றைய தினத்திற்கு பொருத்தமான பதிவு
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு நன்றி!
Delete