என் இனிய பொன் நிலாவே!பகுதி 5

என் இனிய பொன் நிலாவே!
                       பகுதி 5
                                    “ப்ரியம்வதா”
முன்கதை சுருக்கம்}  மதுமிதா இக்கால இளைஞி.  இண்டர்வியு அட்டெண்ட் பண்ண அவளுக்கு உடனே வேலை வழங்கி ஆச்சர்யம் கொடுத்த அபிஷேக் அவளை விரும்புவதாக கூறுகிறான். அதை மறுத்து பஸ் ஏறிய மதுமிதா பர்ஸை தொலைத்துவிட கண்டக்டர் கீழே இறக்கிவிட்டார்.
இனி}
       கையில் பர்ஸுடன் புன் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த அபிஷேக்கை பார்த்ததும் ஆத்திரமாக வந்தது மதுவிற்கு இது இவன் வேலைதானோ? ஆளைப் பார்த்தால் டீசண்டாய் இருந்துகொண்டு இந்த வேலையா செய்கிறான்? என்று நினைத்தவள் மறுகணம் நாக்கை கடித்துக் கொண்டாள். ஒரு மல்டி லெவல் நிறுவனத்தை நடத்தும் அவன் இந்த கேவலமான் வேலை செய்ய மாட்டான் என்று நினைத்துக் கொண்டு ஆனாலும் அவன் மனதை நோகடிக்க வேண்டுமென்றே கேட்டாள்.
    இந்த வேலை எத்தனை நாளாய் நடக்கிறது! கம்பெனி நிலவரம் சரியில்லையோ? என்றாள் நக்கலாக.
   ஒரு கணம் அப்படியே இறுகிப் போன அபிஷேக் சட்டென இயல்புக்கு வந்து உனக்கு எல்லாவற்றையும் தவறாக நினைப்பதே வேலையாகிவிட்டது மது என்றான்.
   நான் அப்படி என்ன தவறாக நினைத்து விட்டேனாம்?
  இப்போ நீ என்னை பார்த்து கேட்டது சரியான கேள்வியா?
 பின்னே என்னுடைய தொலைந்து போன பர்ஸ் உங்களிடம் இருந்தால் பின் எப்படிக் கேட்பதாம்? என்றாள் மது.
பெண்புத்தி பின் புத்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது! எந்த திருடனாவது திருடிய பொருளை திருட்டுக் கொடுத்தவரின் முகத்தின் எதிரில் காட்டுவானா? என்று மடக்கினான் அபிஷேக்.
  அ. அ..அது வந்து..
  என்ன வந்து போயி ! இப்போதாவது ஒரு சாரி கேட்டால் என்ன உன் அக்கவுண்டில் பணமா குறைந்து போய்விடும் என்றான் அபிஷேக்.
   எதற்கு நான் சாரி கேட்க வேண்டும்?
என்னை தவறாக எண்ணியதற்கு!
 நீங்கள் தவறு செய்ய வில்லை என்று என்ன ஆதாரம்?
அம்மணி போட்டு வறுத்து எடுக்காதே நீ சாரி கேட்காவிட்டால் போகிறது நடந்தது இதுதான்.நீ என்னிடம் கோபமாக பேசிவிட்டு உன் கைப்பையை எடுக்கும்போது அதனுடன் வெளியே வைத்திருந்த பர்ஸ் நழுவி உள் பக்கமாக விழுந்துவிட்டது.
  கடைசிப்பந்தி கவனித்து எடுத்துக் கொடுத்தான். உங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்களே ஒர் பெண் அதான் சார் உங்கள் சினேகிதியாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஜெய்ஹோ கேட்டார்களே அவர்களுடைய பர்ஸ் அவசரத்தில் விட்டுப் போய்விட்டார்கள் நீங்கள் கொடுத்துவிடமுடியுமா என்று கேட்டான்.
   அவனே உன்னை என் சினேகிதி என்று சொல்லிவிட்டான் மறுத்தால் நன்றாக இராது நீ என்னுடைய சினேகிதியாக இல்லாவிட்டாலும் ஸ்டாப் உன்னுடைய பொருளை உன்னிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதல்லவா? என்றான் அபிஷேக்.
   என்னது நான் உங்கள் சினேகிதி என்றா சொன்னான்?
 ஐயோ தெரியாமல் சொல்லிவிட்டான் விடேன். நீ என் சினேகிதி இல்லாமல் வேறு எவளோ ஒருத்தியாக கூட இருந்து தொலையேன்! இந்தா முதலில் இந்த பர்ஸை பிடிக்கிறாயா? என்று பர்ஸை நீட்டினான் அபிஷேக்.
பர்ஸை வாங்கிக் கொண்ட மது பிரித்து உள்ளே செக் செய்ய நான் அனாவசியமாக யாருடைய பொருளையும் உரிமை கொண்டாடுவது இல்லை என்றான் அபிஷேக்.
 இருக்கட்டுமே! ஆனால் நான் என்னுடைய பொருளை சரிபார்த்து வாங்கும் பழக்கம் கொண்டவள் இதில் அனாவசியமாக யாருடைய பொருளாவது இருந்துவிட்டால்? என்றாள் மது.
  நியாயம் தான் என்று ஒத்துக் கொண்டவன் மது நேரமாகிவிட்டது. உன்னுடைய வீட்டில் கொண்டு விடுகிறேன். யாரோ முன் பின் தெரியாதவன் அல்ல அழைப்பவன். உன்னுடைய வருங்கால.. இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்திய அபிஷேக் உன்னுடைய வருங்கால முதலாளி நான் அழைக்கிறேன். என்னுடன் காரில் வருகிறாயா? என்றான்
    அவன் அவனுடைய வேலைகளை பார்த்து செல்லலாம் ஆயிரத்தெட்டு வேலைகள் அவனுக்கு குவிந்து கிடக்கும் ஆனால் அதையெல்லாம் விட்டு இவள் பின்னால் சுற்றிக் கொண்டு இவள் விருப்பத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றானே ஒரு வேளை நிஜமாகத்தான் காதலிக்கின்றானோ! இல்லை இல்லை இது நமக்கு சரிபட்டு வராது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மது.
   என்ன மது யோசிக்கிறாய்? நான் வேறு யாரோ அல்ல  உன் முதலாளி! நாளை நீ என்னுடைய பர்சனல் அஸிஸ்டெண்டாய் பொறுப்பேற்றால் இதே போல் என்னுடன் பல இடங்களுக்கும் காரில் வர வேண்டியிருக்கும். மேலும் நீ தைரியசாலியான பெண்தானே நான் என்ன உன்னை கடித்தா தின்று விடப் போகிறேன் நான் ஒன்றும் அசைவப் பிராணிஅல்ல என்றான் அபிஷேக்.
   நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் இப்போது நான் உங்கள் காரிய தரிசி அல்லவே! திடீரென்று காரில் சென்று இறங்கினால் என்னுடைய தெருவே என்னை தப்பாக பேசும். அதனால் தயவு செய்து நீங்கள் கிளம்புகிறீர்களா என்றாள் மது.
   அப்புறம் உன் விருப்பம்! என்னுடன் வந்தால் ஜெய்ஹோவையும் கேட்ட மாதிரி இருக்கும் வீட்டிற்கும் நேரத்திற்கு சென்றமாதிரி இருக்கும் என்று சொல்லவந்தேன்.
  உங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி சார்! ஆனால் நான் பஸ்ஸில் போய் கொள்கிறேன் என்று அருகில் இருந்த பஸ் நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மதுமிதா.
   மது அட்லீஸ்ட் நான் உன்னை பஸ் ஸ்டாப்பிலாவது டிராப் பண்ணுகிறேனே என்றான் அபிஷேக்.
  இனியும் மறுத்தால் நாகரீகமாக இருக்காது என்று சரி விடமாட்டீர்கள் போலிருக்கிறதே என்று காரில் ஏறினாள் மதுமிதா.
   காரில் ஏசியின் காற்று மிதமாக இருக்க ஸ்டீரியோவைத் தட்டினான் அபிஷேக். ஜெய்ஹொ பாடல் ஒலிக்க அதில் மூழ்கினாள் மது. அதன்பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை! ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அவர்களை கட்டி போட்டிருந்தார்.
பஸ் நிறுத்தம் வர ஓரம் கட்டி நிறுத்தினான் அபிஷேக் . மது இறங்க கார் கதவை திறந்தாள். அச்சமயம் ஜீன்ஸும் தொப்புள் தெரிய ஸ்லிவ்லெஸ் டாப்ஸும் அணிந்த பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.
   அபி! அபிக் கண்ணா உன்னை எங்கேல்லாம் தேடறது உனக்காக நான் காத்துக் கிடக்க இந்த பிச்சைக்காரியை எங்கு பிடிச்சே! பணக்காரன் கிடைச்சா விடமாட்டாலுங்களே! ஏய் இன்னும் என்ன பார்த்துகிட்டு இறங்கி ஓடிப்போ! என்றவளை முறைத்தாள் மது.
    நிலவு வளரும்(5)

டிஸ்கி உடல் நலம் சரியில்லை மீண்டும் ஜுரம் வந்து விட்டது. அதனால் இன்று நிறைய பதிவிட முடியவில்லை! இந்த கதைக்கு பொருத்தமான படங்கள் இருந்தால் thalir.ssb@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவலாமே! நன்றி!
  தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. மிகவும் சுவாரஸ்யமாக போகின்றது...வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. K.s.s.Rajh said...

    மிகவும் சுவாரஸ்யமாக போகின்றது...வாழ்த்துக்கள் நண்பரே
    September 26, 2011 2:29 PM

    தொடர்ந்து வருகை தந்து வாழ்த்தும் அன்பு நண்பர் ராஜுக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!