படம்

படம் 


“அந்த படத்தை இன்று எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தீர்மாணித்தேன்.ஆனால் மனசாட்சி பயமுறுத்தியது. வேண்டாம்டா யாராவது பார்த்துட்டா அசிங்கம். வெளியே நடமாட முடியாது” என்று பயமுறுத்தியது.
    ஆனால் சபலம் தட்டியது. அந்த படத்தில் வரும் காட்சிகளை பார்த்துவிட்டு நண்பர்கள் சொன்னபோது நாமூம் பார்க்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டியது மனசு. 
   டேய் சூப்பர்டா மாமு! அருமையா இருக்கு படம் கொடுத்த காசுக்கு குறைவே இல்லாம காட்டியிருக்காங்க! விட்டுறாத இன்னிக்குத் தான் கடைசி நாளாம். கண்டிப்பா போய் பார்த்துடு இதான் சான்ஸ் இல்லேன்னா டவுனுக்குத்தான் போய் பார்க்கணும் என்று ஆவலை வேறு தூண்டி விட்டனர்.
   சரி இன்று எப்படியாவது போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்து கிளம்பினேன். 
   வீட்டை விட்டு கிளம்பும் போதே எங்கேடா போறே? என்று அப்பாவின் குரல் என்னைத் தடுக்க தடுமாறினேன். இ.. கோயிலுக்கு! என்று திக்கி திணறி சொல்ல அதுக்கு எதுக்குடா வியர்த்து வழியறே? சரி போய்வா! என்று அவர் பாட்டுக்கு ஈஸிச் சேரில் சாய அப்பாடா என்று பெருமூச்சுடன் கிளம்பினேன்.
     தியேட்டருள் நுழைந்தேன். கூட்டம் அள்ளியது! இந்த படத்திற்கு இவ்வளவு கூட்டமா? இந்த படத்துக்குதாண்டா இப்ப மவுசு அதிகம் என்று மனது கூற கவுண்டரில் க்யுவில் நின்றேன். எல்லோரும் என்னையே வெறித்துப் பார்ப்பது போல ஓர் பிரமை.
  போஸ்டரில் அந்த காட்சி தெரிந்து எனது சபலத்தைத் தூண்டியது. போஸ்டரிலேயேஇப்படி அள்ளுதே திரையிலே எப்படி இருக்கும்? கற்பனை ஓடியது க்யுவில் நின்ற ஒரு சிறுவன் என்னை வெறித்துப் பார்த்தான். சின்ன பையன் தைரியமாக தனியாக வந்திருக்கிறான்.நாம் போய் நடுநடுங்குகிறோமே? துணிந்து கவுண்டரில்டிக்கெட் கொடுப்பவனும் மேலும் கீழும் பார்த்துவிட்டு டிக்கெட்டை கொடுத்தான்.
   தியேட்டர் உள்ளே சென்று அமர்ந்தேன். காட்சி ஆரம்பமாகியது. ஓர் சூனியக் கார கிழவி காலை அடுப்பில் விட்டு எரியச் செய்து சமையல் செய்ய விசில் சத்தம் காதைப் பிளந்தது .என்ன வாசகர்களே எதையோ எதிர்பார்த்து வந்தீங்களா?
   இது ஒரு மாயாஜாலப் படம் தான். எங்க வீட்டுல சினிமான்னாலே யாருக்கும் பிடிக்காது இந்தபடத்த பார்க்கத்தான் இப்படி கஷ்டப்பட்டு வந்தேன் உங்களையும் கஷ்டப் படுத்திட்டேன் ஐயையோ அடிக்க வராதீங்க பாஸ்!.


தங்கள் வருகைக்கு நன்றி! கருத்தினை இட்டு செல்லலாமே கீழுள்ள நிரலிகளில் வாக்களிக்கலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2