தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எது நல்ல நேரம்?

சென்னை: நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை காலை எந்த நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்பது குறித்து ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி என்றதும் பட்டாசு, இனிப்பு, புத்தாடைதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் மிக முக்கியமானது. தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்வதற்கும் கூட நல்ல நேரம் பார்ப்பது அவசியம்.

வழக்கமாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நிறைய பார்க்க வேண்டும் என்பார்கள். இரவு நேரங்களில் குளிக்கக் கூடாது. சூரிய அஸ்தமனம், உதய காலங்கள், பிறப்பு நேரம், மரண நேரம் உள்ளிட்டவற்றிலும் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொள்ளக் கூடாது. சனி, புதன், திங்கள் ஆகிய கிழமைகளில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என பல சம்பிரதாயங்கள் உள்ளன.

இருப்பினும் தீபாவளிக்கு இதிலிருந்து விதி விலக்கு உண்டு. காரணம், அன்றைய தினம் நாம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது கங்கையில் குளிப்பதற்குச் சமம் என்பார்கள். அதனால்தான் இதற்கு கங்காஸ்னானம் என்று பெயர்.

இப்படிப்பட்ட தீபாவளிக் குளியலுக்கு நல்ல நேரம் பார்ப்பது அவசியம் இல்லையா. இந்த ஆண்டு அதாவது நாளை அதிகாலை 3 மணி முதல் 4.53 மணிக்குள் குளிப்பது நல்லது என்கிறார்கள். அந்த நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டில் தீபமேற்றி பூஜை செய்வது உகந்தது.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. அப்படிப்பட்ட அருமையான புதன்கிழமையன்று இந்த ஆண்டு தீபாவளி வருவது கூடுதல் சிறப்பாகும். அதை விட மகா சிறப்பான விஷயம் என்னவென்றால், விஷ்ணுவுக்கு உகந்த இந்த நாளில், இந்திரனின் நட்சத்திரமான சித்திரையும் கூடி வருவதுதான். எனவே இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பான நேரத்தில் வருகிறது.

இப்படிப்பட்ட தீபாவளிப் பண்டிகையை உரிய குளியல் நேரத்தில் தலைக்குக் குளித்து தீபமேற்றி கடவுள்களை வணங்கி, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் சகிதம் இனிய முறையில் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

  1. ////அதிகாலை 3 மணி முதல் 4.53 மணிக்குள் குளிப்பது நல்லது என்கிறார்கள். அந்த நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டில் தீபமேற்றி பூஜை செய்வது உகந்தது./////

    இந்த நேரத்தில்தான் நாங்க நெட்ல இருந்திட்டு படுக்கபோவம் உடனே எழும்பனுமா அவ்...

    தகவலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  2. அருமையான தகவல் !....மிக்க நன்றி பகிர்வுக்கு .மீண்டும் மீண்டும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கம் உங்கள் உறவினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  3. வருகை தந்து வாழ்த்திய ராஜ்,மற்றும் அம்பாளடியாளுக்கு நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!