நான் ரசித்த சிரிப்புக்கள்! 5


நான் ரசித்த சிரிப்புக்கள்! 5

1.சுப்பு நாங்க புது நாய் வாங்கி இருக்கோம் வந்து விளையாடி பார்க்கிறாயா?
  கடிக்குமா?
 அதை தெரிஞ்சுக்கத்தானே உன்னை கூப்பிடறேன்!

2.இந்தாங்க மருந்து சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு ஸ்பூன் சாப்பிடனும்!
  எங்க வீட்டுல ரெண்டு ஸ்பூன் தான் இருக்கு டாக்டர்!
3.உன் சட்டையில ஓட்டை இருக்காடா?
 ஊஹூம் கிடையவே கிடையாது!
 அப்போ கழுத்து, கை எல்லாம் எப்படி நுழைக்கிறே?
4.அவன் மன்மதன் மாதிரி இருக்கான்னு சொன்னது தப்பா போச்சு!
 ஏன்?
 எப்போதும் கரும்பும் கையுமாவே அலைஞ்சுகிட்டு இருக்கான்!
5.எதுக்கு இடுப்பில் இரண்டு கையும்வச்சிகிட்டு தும்மறீங்க?
 நான் தான் சொன்னேனெ எனக்கு இடை விடாத தும்மல்னு!
                        நன்றி சாவி வார இதழ்!

6.தீபாவளி கொண்டாடினதுக்கா உங்களை ஜெயில்ல போட்டுட்டாங்க எப்படி?
  பட்டாசு கடைக்கு தீ வைச்சேன்!
                          -சோனா
7.அவரு போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சாங்க?
வயித்து வலிக்கு பாம்பு மாத்திரை கொடுத்தாராம்!
                       -கார்வண்ணன்

8.சுவர் கடிகாரம் மேலேயிருந்து விழுந்ததுங்க எங்கம்மா மயிரிழையிலே உயிர் தப்பிச்சாங்க!
   சனியன் அந்த கடிகாரம் எப்பவும் ஸ்லோ!
                            -சதானந்த்

9.அந்த அரசியல் வாதியை எதுக்கு கைது பண்றாங்க?
   சட்டத்துல இருக்கற ஓட்டையை அடைக்கிறேன்னு நூறு கோடி ரூபாய் வாங்கினாராம்!
10 அவரு பயங்கரமா ஜொள் விடுவாராமே?
 ஆமாம் அவர் விட்ட ஜொள்ளுல அவரே வழுக்கி விழுந்துட்டாருன்னா பார்த்துக்கங்க!
                             - சம்பத்
                        நன்றி குமுதம்
11.நான் ஊர்ல இல்லாதப்போ வேலைக்காரிக்கு அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்தீங்களா?
    சேச்சே எனக்கு எப்பவும் நீதான் ஒசத்தி! அவளுக்கு வெறும் கேசரியும் கனகாம்பரமும்தான் வாங்கிக் கொடுத்தேன்!
                  -சேளூர் எம்.ஏ சந்திரசேகரன்.
12. ஐயையோ! ஸ்கேன்ல உங்க குடலையே காணோமே...?
    நீங்க தானே டாக்டர் காலி வயித்துல ஸ்கேன் எடுக்க சொன்னீங்க...!
                              - வி. சாரதி டேச்சு.
13.பல் டாக்டரா இருக்க உங்க பையனுக்கும் உங்களுக்கும் என்ன தகறாறு?
     என் சொத்தையெல்லாம் பிடுங்கிட்டான்!
                               -வி.சாரதி டேச்சு.
14.நீ காதலிக்கிற பையனே உனக்கு கணவனா அமைவான்!
    குறிப்பா யாருன்னு சொல்லாம இப்படி பொதுவாச் சொன்னா எப்படிங்க?!
                           -கே. தண்டபாணி
15.நம்ம தலைவர் எதுக்கு தன்னோட பையனை ஈ.என்.டி ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போறாரு?
    அவனுக்கு படிப்பு வாசனையே இல்லையாம்!
                             -வி.சாரதி டேச்சு.
                       நன்றி விகடன்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!