களவாணிப் பயலுவ!



களவாணிப் பயலுவ!

  இந்தியா ஒரு பழம்பெருமைநாடு!பல்வேறு இயற்கைச் செல்வங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நாடு.பல்வேறு இயற்கை வளங்கள் தன்னிச்சையாக பெருகிக் கிடந்த நாடு. நம் நாட்டு தாவரங்கள் பல மூலிகைகளாக பல்வேறு நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்பட்டு வருகிறது.இதுதான் மேற்கத்திய நாடுகளின் கண்ணைக் குத்துகிறது போலும்.நமது இயற்கைச் செல்வங்கள் பலவற்றிற்கு காப்புரிமை என்ற பெயரில் உரிமை கொண்டாடி கொள்ளையடித்து வருகின்றன.
      மத்திய அரசோ கைகட்டி வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டுவருகிறது. ஆர்வலர்கள் பலர் ஒன்று கூடி அரசுக்கு விழிப்பு ஏற்படுத்திய பிறகுதான் அரசு முழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு சென்றது போல நமது,மஞ்சள்,வேம்பு, பாசுமதி அரிசி, போன்றவற்றிர்க்கு அமெரிக்கா சத்தமில்லாமல் காப்புரிமை வாங்கிவிட தாமதமாக விழித்துக் கொண்ட அரசுஅவர்களிடம் போராடி காப்புரிமையை திரும்ப பெற வேண்டியாதாகிவிட்டது.
      அடுத்தவன் பொருளை களவாடும் களவானிப் பயல்களிடம் நாம் உஷாராக இருக்க வேண்டும். நம்முடைய பொருள்களுக்கு காப்புரிமை நாம் பெற்றாக வேண்டும் இல்லையெனில் நம்சொந்த வீட்டுக்கு வாடகை கொடுக்கும் நிலை நமக்கு ஏற்பட்டுவிடும். லேட்டஸ்டாக, ஒங்கோல் காளைக்கும் வெளி நாட்டினர் காப்புரிமை கொண்டாடி வருவதாக விகடன் தலையங்கம் வெளியிட்டுள்ளது. நம்மில் பலருக்கு காப்புரிமை பற்றி விழிப்புணர்வு இல்லை.
     எனவே இந்த விஷயத்தில் நாடு தழுவிய விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது பாரம்பரிய பொருட்களை அன்னிய சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். இல்லையேல் ஒருநாள் இந்தியாவிற்கே அன்னியர்கள் காப்புரிமை வாங்கினாலும் வாங்கிவிடுவார்கள்.
    விகடன் தலையங்கம்.


காளைக் களவானிகள்!


    இயற்கைச் செல்வங்களும் பாரம்பரியச் செழுமைகளும் குவிந்து கிடக்கும் இந்திய தேசத்தில் இருந்து, ‘கோஹினூர்’ வைரம் உட்பட அன்னியர் கொள்ளை கொண்ட பொக்கிஷங்கள் எத்தனையோ அந்த வரிசையில் சமீப காலமாக ‘காப்புரிமை’ என்ற பெயரில் தொடரும் கொள்ளை - கொடுமையிலும் கொடுமை!
     மேற்கத்திய கலாச்சார மயக்கத்தில் நம்மவர்கள் ஆழ்ந்துகிடக்க ... வெளிநாட்டுக்காரர்கள் விழிப்போடு வேலை பார்க்கிறார்கள். வேம்பு,மஞ்சள், பாசுமதிஅரிசி, போன்றவற்றிற்கு அமெரிக்கா சத்தமில்லாமல் ‘காப்புரிமை’ வாங்கிவிட தாமதமாக விழித்துக்கொண்டு அடித்து பிடித்து போராடி, அதை திரும்ப பெற்றொம் கீழாநெல்லி,நித்தியகல்யாணி போன்ற் மூலிகை உரிமைகளையும் அன்னிய சக்திகள் தங்கள் ஏக போக வியாபாரத்துக்கு உள்ளாக்கப் பார்த்தன. நல்ல வேளையாக முன்கூட்டியே மோப்பம் பிடித்து காப்புரிமையை காப்பாற்றிக் கொண்டோம். இப்போது வந்திருப்பது இன்னொரு இடி!
   ‘இந்தியா ஒரு விவசாய நாடு’ என்று பாட புத்தகங்களில் படித்துக் கொண்டு,மெள்ள விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கும் நாம் கம்பீரம் மிகுந்த ஓங்கோல் மாடுகளுக்கும் காப்புரிமையைக் கோட்டை விடும் நிலையில் இருக்கிறோம்!
     இந்த அரிய கால்நடைச் செல்வத்தின் உயிர் அணுக்களை கடத்திச் சென்று புதிய கலப்பின மாடுகளை உருவாக்கி, அந்த மாடுகளை கோடிக்கணக்கான டாலருக்கு வெளிநாடுகளில் விற்கிறார்கள் என்ற செய்தி அதிர வைக்கிறது!பலமான நோய் எதிர்ப்பு சக்தியும்,கடுமையான உடல் உழைப்பும் கொண்ட ஓங்கோல் இனம்தான் தென்னிந்திய கோயில்களில் திமில் நிமிர்த்திக் காட்சி தரும் ‘நந்தி’’யின் மூல வடிவங்கள்.இந்த கம்பீரக் காளை இனத்தின் மதிப்பு இதுவரை நம் அரசுக்கு புரியாமல் போனது ஏன்?
  இனியும் அன்னியர் உரிமை கொண்டாட முடியாதபடி சட்டப்பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டிய அரிய பொக்கிஷங்களை பற்றி முழுமையான தகவல் சேகரிப்பில் எப்போது நாம் இறங்க போகிறோம்? கடல் கடந்து போன கறுப்பு பணத்தை மீட்டு வரத்தான் துப்பு இல்லை. நம் பாரம்பரிய சொத்துக்களையும் பறிகொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்த்தால் மன்னிப்பே கிடையாது!

   அரசாங்கம் இனியாவது இவ்விஷயத்தில் தலையிட்டு நம் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்று என் ஆசை ! ஆனால் சர்தார்ஜி தாத்தாவுக்குதான் வெளிநாட்டிற்கு செல்லவும் சோனியாவுக்கு தாளம் போடவுமே நேரம் சரியாக இருக்கிறதே!
இப்படியே போனால் நாடு விளங்கிடும்!

தங்கள் வருகைக்கு நன்றி! இந்த பதிவு பிடித்திருந்தால் கருத்திடலாமே! நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2