ஆவி அழைக்கிறது ! 3

ஆவி அழைக்கிறது!


தொடர்கதை. எழுதுபவர் “பிசாசு”
பகுதி 3

மு.க.சு ஆழ்வார் குறிச்சியில் உள்ள பங்களாவை புதுப்பிக்க நினைக்கும் தனவேல் முதலியாருக்கு முதல் நாளே அதிர்ச்சி காத்திருந்தது. வேலையாள் முனியன் இறந்து போகவே திட்டத்தை கைவிட நினைக்கிறார். ஆனால் மகள் நிதிலா பங்களாவை புதுப்பித்தே ஆகவேண்டும் என்று கூறுகிறாள்.
இனி!
    தனவேல் முதலியாருக்கு ஆத்திரமாய் வந்தது. ஏன் தான் இவ்விஷயத்தில் ஈடுபட்டோமோ? வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்கிறதே.மகள் நிதிலாவுக்கு என்ன ஆயிற்று? முதலில் பங்களாவைக் கண்டு முகம் சுளித்தவள் இப்போது புதுப்பிக்கவேண்டும் என்று எனக்கே புத்தி சொல்கிறாளே! என்று கோபமாக அறைக்குள் உலாவிக்கொண்டிருந்தார்.
   அப்போது அங்கு நல்லமுத்து வந்து சேர்ந்தார். என்ன தனவேலு குட்டிபோட்ட பூனையாட்டம் இங்கேயும் அங்கேயும் சுத்திசுத்தி வரே என்னாச்சு உனக்கு? என்றார். ‘என்நிலமை அந்தமாதிரி ஆகிப்போச்சு முத்து.’என் போறாத காலம் இந்த பங்களாவை புதுப்பிக்கணுமுன்னு வந்து நிப்பனா? இப்ப வேண்டாமுன்னாலும் உடும்புப் பிடியா பிடிச்சுகிட்டு விடுவேனான்னு என்ன வம்புக்கு வலிக்குது என்றார் தனவேல்.
      விடமாட்டேங்குதா! ஏன்?
நிதிலா இந்த பங்களாவை புதுப்பிச்சே ஆகணுமுன்னு ஒத்தகால்ல நிக்கறா! பேயாவது பூதமாவது நீங்க வேணா விலகிக்கோங்க நான் இருந்து இந்த பங்களாவை கட்டி முடிச்சிட்டு வரேன்னு ஒரே அடம் பிடிக்குறா! நான் என்னத்த செய்வேன் நீரே சொல்லும்?
    மகளைவிட்டு பிரிய மனமில்லையாக்கும்!சரி அப்படி ஏன் பயந்து சாகிற? அந்த பங்களாவில அப்படி என்னதான் இருக்கு? முனியன் செத்ததுக்கு காரணம் ஹார்ட் அட்டாக்னு தெளிவா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்தான் சொல்லுதே! அப்புறமென்ன? ஆரம்பிச்ச வேலையை ஆரப்போடலாமா? என்றார் நல்லமுத்து.
‘யோவ் நீயும் என் பொண்ணு பக்கம்தானா?எவன்யா இந்த பங்களா வேலைக்கு வரேன்னு காத்துட்டு கிடக்கான்! துண்டக்கானோம் துணிய காணோமுன்னு அன்னிக்கு ஒடினவனுங்கதான் எல்லோரும் நீ வேனா ஆளுங்கள ஏற்பாடு பண்ணீத்தறயா?
    பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போச்சு நாளைக்கே நாலைந்து ஆட்களோடு வரேன்.
ஆனால் ஆள் கிடைப்பது அவ்வளவு சுலபமாகிவிடவில்லை நல்லமுத்து முதலிக்கு. அது ஆவி பங்களா அங்க வெலை செஞ்சு பொணமாவறதுக்கு நாங்க என்ன முனியன் போல முட்டாளா என்ன? என்று வேலைக்கு வர மறுத்தனர் ஆட்கள். நல்லமுத்து எவ்வளவோ கெஞ்சியும் ஒருவர் கூட வேலைக்கு வர முன் வர வில்லை.அவர் மிகவும் சோர்வுடன் களைத்துப்போய் தன் வீட்டு வாசலில் அமர்ந்தபோது ஐயா ஏதாவது வேலை கிடைக்குமா? என்று குரல் ஒன்று கேட்டது.
     ‘யாருப்பா நீ என்றார் தனவேல்.
ஐயா என்பேரு மணிமாறங்க நம்முளுது வெளியூருங்க பொழப்பு தேடி வந்தேணுங்க என்று தலயை சொறிந்தான் அவன்.
முதலியார் அவனை ஏற இறங்க பார்த்தார். கருமை நிறம் கொண்ட கட்டுமஸ்தான உடல் உழைத்து உரமேறிய கைகள் தலையில் தலைபாகைக் கட்டியிருந்தான் அவன் கண்கள் அங்உமிங்உம் அலைபாய்ந்தது.சரி என் கூடவா என்று அவனைஅழைத்துக்கொண்டு தனவேல் இல்லம் நோக்கி நடந்தார் நல்லமுத்து.
  தனவேலு தனவேலு வேளைக்கு ஆள் கிடைச்சாச்சு வா பங்களாவுக்குப் போவோம் வேலைக்கு ஆள் கிடைச்சிருச்சு என்று வாசலில் நின்று அழைத்தார் நல்லமுத்து.வெளியே வந்த தனவேல் மணிமாறனை பார்த்து பிரமித்து நின்றார். ஆஜானுபாகுவான மணிமாறணின் தோற்றம் அவருக்கு சற்று நிம்மதி அளித்தது.
   நிதிலா பங்களா வேலைக்கு ஆள் வந்தாச்சு வாம்மா
நால்வரும் அந்த பாழடைந்த பங்களாவுக்குள் அடியெடுத்து வைத்தனர். கரு நாகம் ஒன்று நிதிலாவின் அருகே விழுந்து ஓட ‘ஆ’ வென அலறினாள் நிதிலா, என்னம்மா என்னாச்சு என்று ஓடிவந்த தனவேலைப் பார்த்து சீறி நின்றது அந்நாகம். ‘ஐயோ’ என்று அலறியபடியே பின் வாங்கினார் தனவேல்.
அட என்னய்யா இது இந்த குட்டிபாம்புக்கா இப்படி பயப்படறீங்க இப்பபாருங்க வேடிக்கைய என்று மணிமாறன் அந்தபாம்பை அடிக்க குச்சி ஒன்றை ஒடித்தபடி வந்தான்.
  வேண்டாம்பா இது நல்ல பாம்பு!
ஆனா அதுக்கு இப்ப கெட்ட நேரம் வந்தாச்சு என்றபடியே குச்சியை ஒங்கினான் மணிமாறன். அதற்குள் அப்பாம்பு கொபமெடுத்து சீறி அவன் மேல் பாய்ந்து கொத்தியது.
அவன் ஐய்யோ என்று சுருண்டுவிழ வாயில் நுரைத் தள்ளியது.
    நிதிலா அங்கேயே மயங்கி சாய்ந்தாள் கருநாகம் அவளை நோக்கி நகர்ந்தது.
                            அழைக்கும்(3) 

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2