பாப்பா மலர்

குரங்கின் சின்ன புத்தி!

ராமசந்திரா புரம் என்ற சிற்றூரில் முத்து என்ற கழைக்கூத்தாடி ஒருவன் வசித்துவந்தான். அவனிடம் குரங்கு ஒன்று இருந்தது. முத்து அந்த குரங்கை வைத்து வித்தைகள் செய்துகாட்டி தன் வயிற்றைக் கழுவிக்கொள்வான்.
   முத்து குரங்கை தெரு மையத்தில் அழைத்துச் சென்று கொம்பைத் தாண்ட சொல்வான்.தீவளையத்தில் புகச்செய்வான். குட்டிகரணம் போடச்சொல்வான். இவ்வாறு பல வித்தைகள் செய்துகாட்டி மக்கள் தரும் பிச்சைகளைப் பெற்று சீவனம் நடத்திவந்தான்.குரங்கும் அவன் சொல்படி நடந்து மக்களின் கை தட்டல்களுடன் நிறைய பணத்தையும் பெற்றுத் தந்தது.
    இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க குரங்கு தனக்கு கிடைத்த் கைதட்டல்களால் கர்வம் கொண்டு தான் இல்லையேல் முத்து இல்லை என்று எண்ண ஆரம்பித்தது. தன் திறமையால் தான் முத்து பிழைக்கிறான் என்று நினைத்து நம் உழைப்பில் சாப்பிடும் இவனுக்கு நாளைமுதல் ஒத்துழைப்பு தருவது இல்லை என முடிவெடுத்தது.
      அன்று முதல் அக்குரங்கு முத்து சொல்லும் வித்தைகளை சரிவர செய்வது இல்லை விருப்பமிருந்தால் ஒன்றிரண்டு வித்தைகளை செய்யும். இல்லையேல் முரண்டுபிடிக்கும். குரங்கின் பிடிவாதமான இச்செயல் முத்துவுக்கு விளங்க வில்லை. குரங்கை அடித்து துன்புறுத்தவும் அவனுக்கு மனதில்லை. இதனால் முத்துவின் தொழில் பாதித்து வருமானம் குறைய ஆரம்பித்து விட்டது.
  நாட்கள் செல்ல செல்ல ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் போகவே குரங்கை அவிழ்த்து விட்டுவிட்டான் முத்து. குரங்கு அங்கிருந்து கிளம்பியது. இவன் இல்லா விட்டால் என்ன என் வித்தையை காட்டி நான் பிழைத்துக் கொள்வேன் என்றுகுரங்கு நினைத்துக் கொண்டது.
     அருகில் உள்ள் ஒரு கோயிலின் அருகில் வந்த குரங்கு வித்தை செய்வதாக நினைத்து ஒரு சிறுமியின் மேல் தாவியது அச்சிறுமி பயந்து அலற கூட்டம் விரட்டி அடித்தது. ஒடிக் களைத்த குரங்கு ஒரு பெட்டிக் கடையில் தொங்கி கொண்டிருந்த வாழைத் தாரில் கையை வைக்கப் போனது. கடைக்காரன் சுதாரித்து குச்சியை எடுத்து துரத்த திரும்பவும் ஓடியது.
   கூத்தாடி சொல்லி ஆடினால் மகிழும் மக்கள் இப்போது விரட்டி விரட்டி அடிக்கிறார்களே என்று நொந்து கொண்ட குரங்கு மீண்டும் முத்துவிடம் வந்து சேர்ந்தது. கூத்தாடியால் தான் தனக்கு மதிப்பு என்பதை உணர்ந்த அக்குரங்கு மறுநாள் முதல் ஒழுங்காக வித்தைகள் செய்ய ஆரம்பித்தது. இப்பொழுது முத்துவும் குரங்கும் பசியின்றி வாழ்கின்றனர்.
  நீதி : தற்புகழ்ச்சி கூடாது!

‘வெண்ணிலா’

வட்டவட்ட வெண்ணிலா
வானில் தவழும் வெண்ணிலா!

குலுமையான ஒளியினை தந்திடும்!
குழந்தைகள் கண்டு மகிழ்ந்திடும்!

குட்டி தட்டுப் போன்ற வெண்ணிலா
பட்டி தொட்டிஎங்குமே பளீச்சென்று ஒளிருமே!

பூமியைச் சுற்றும் வெண்ணிலா !
புலவர்கள் பாடும் வெண்ணிலா!

மலையின்  உயரத்தில் தோன்றியே
                        மனதை மயக்கும் வெண்ணிலா!

உங்களுக்குத் தெரியுமா?

உலகின் பதினேழு பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் தமிழ்நாட்டின் தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன்.

டங்க்ஸ்டன் உலோகம் பாஸ்டோ –ஜீவான் ஜோஸ் ஆகியோரால் 1783ல் கண்டுபிடிக்க பட்டது.


மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு தென் ஆப்பிரிக்கா. நிர்வாக தலைநகராக பிரிடோரியா, நீதிசம்பந்தமான தலைநகராக ஃபுலோயம்ஃபோண்டேன்,சட்டசபைசம்பந்தமான தலைநகராக கேப்டவுன் ஆகியன.

தக்காளியின் ஆரம்பகால பெயர் காதல் ஆப்பிள்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!