நான் ரசித்தப் பூக்கள்

 சமீபத்தில் படித்து ரசித்த குட்டிக் கதைகள்!

மரியாதை!


பெல்ஜியம் நாட்டு ஆசிரியர் மேட்டர்லிக் என்பவருக்கு தான் எழுதிக்கொண்டிருக்கும் போது யாராவது குறுக்கே பேசினால் பொல்லாத கோபம் வரும்.
   ஒருமுறை அவர் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டிற்கு திரும்பிய அவர் மனைவி சந்தடி செய்யாமல் தன் அறைக்குச் சென்றாள். அங்கே அதிர்ச்சி அடைந்த அவள் ஓடி வந்து கணவரிடம் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது யாரோ ஓசைப்போடாமல் என் நகைகளை திருடிக்கொண்டு போய் விட்டார்களே! என்று அலறினாள்.
    ஒரு திருடன் என் வேலைக்கு காட்டும் மரியாதையைக்கூட உனக்கு காட்டத்தெரியவில்லையே என்று பதிலுக்கு கத்தினார் மேட்டர்லிக்

    பறக்கும் குதிரை!


மரண தண்டணை விதிக்க பட்ட கைதி ஒருவன் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான் அரசே நான் உங்கள் குதிரைக்கு பறக்கும் வித்தையை கற்றுக்கொடுத்தால் என்னை விடுவிப்பீர்களா?.
ஆகா! சரி என்று அரசன் தலையாட்டினான்.
அதற்கு ஒரு வருசம் அவகாசம் தேவைப்படும் என்றான் கைதி
அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
பின்னர் கைதியிடம் யாரோ கேட்டார்கள் இது சாத்தியமா?
கைதி சொன்னான் ஒரு வருசம் உள்ளது அதற்குள் அரசன் சாகலாம், நான் சாகலாம், இல்லை இந்த குதிரை சாகலாம்,ஏன் ஒரு வருசத்தில் அந்த குதிரை பறந்தாலும் பறக்கலாம் யார் கண்டது?.

Comments

  1. நல்ல குட்டி கதை அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!