ஆவி அழைக்கிறது! 4

ஆவி அழைக்கிறது!
பகுதி 4
எழுதுபவர்  “பிசாசு”

மு.க.சு: ஆழ்வார் குறிச்சியிலுள்ள தனது பரம்பரை பங்களாவை சீர்படுத்த முயல்கிறார் தனவேல் முதலியார் ஆனால் அதிர்ச்சிமேல் அதிர்சியாக அங்கு வேலைக்கு வருபவர்கள் இறந்து போகின்றனர்.
இனி:
நிதிலாவை நோக்கி வேகமாக வந்த நாகம் அவளை கொத்தும் முன் நல்ல முத்து ஒரு பெரிய குச்சியால் தூக்கித் தள்ளினார். அத்துடன் சிறிது தண்ணிரை நிதிலா முகத்தில் தெளித்து எழுப்பினார். எழுந்த நிதிலாவுக்கு படபடப்பாக இருந்தது.அவள் இதயம் வழக்கத்தைவிட அதிகமாக துடித்துக் கொண்டிருந்தது.தனவேல் முகத்தில் ஈயாடவில்லை!. மூவரில் சற்று தைரியமாய் இருந்தவர் நல்ல முத்து ஒருவர்தான்.
  தங்கள் கண்முன்னாலேயெ இறந்து கிடக்கும் மணிமாறனின் சடலத்தை கண்டு மூவரும் திக் பிரமை பிடித்து நின்றனர். நிதிலா தான் முதலில் வாயைத் திறந்தாள். டாடி! டாடி! என்ன ஆச்சு உங்களுக்கு என்று தனவேலை பிடித்து உலுக்கினாள். இன்னும் என்னம்மா ஆகணும்?
இந்த பங்களா ரெண்டு உயிரை பலி வாங்கிடுச்சு அதுக்கு நான் காரணமா இருந்துட்டேன் இது போதாதா? இன்னுமென்ன நடக்கணும்? என்று புலம்பினார் தனவேல்.
    முதல்ல இந்த இடத்தை விட்டு வெளியே போய் பேசுவோம்.அந்த பாம்புதிரும்பவும் வந்தாலும் வரலாம் என்றார் நல்லமுத்து.மூவரும் வெளியேறினர். நல்ல முத்து முதல்ல போலிஸுக்குஇன்ஃபார்ம் பண்ணிடுப்பா! என்றார் தனவேல். அடுத்த அரை மணி நேரத்தில் போலிஸ் வந்து விசாரித்து மணிமாறனின் சடலத்தை எடுத்துச் சென்றது.
   அன்று மாலை தனவேல் முதலியார் நிதிலாவிடம் ஊரைவிட்டு கிளம்ப வேண்டும் என்று வாதாடிக் கொண்டிருந்தார். நிதிலா இனிமேலும் அந்த பங்களாவை சீர் பண்ணனுமா? அப்படி நினைச்சா அது சுத்த முட்டாள்தனம் ஊர்ஜனங்க ஆவி பேய்னு சொன்னப்ப நான் நம்பல ஆனா இப்ப நம்பறேன். அந்த ஆவி இரண்டு உயிரை அநியாயமாக பலி வாங்கிடுச்சு இனியும் பிடிவாதம் பிடிக்காம நான் சொல்லற பேச்ச கேளு! நாளைக்கே நாம ஊருக்கு கிளம்பறோம்.அடம்பிடிக்காம நல்லா யோசிச்சுப்பாரு என்றார்.
    அப்பா இந்த ஜனங்க தான் அறியாமையால ஆவி பிசாசுன்னு சொல்லிகிட்டுதிரியுதுங்க! அத நாமும் நம்பிடறதா? இங்க ரெண்டு பேர் இறந்தது தற்செயல். அதுக்கும் ஆவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.என்றாள் நிதிலா.
    பகுத்தறிவு,பழமைவாதம்னு சொல்லி பழைய நம்பிக்கைகளை முட்டாள்தனம்னு சொல்றது தப்பும்மா!முன்னோர்கள் சொன்ன சில விஷயங்கள் இப்பவும் நடக்குது. ஆவி இருக்குன்னு அமெரிக்காவில கூட நம்பறாங்க அதனால விதண்டாவாதம் பண்ணாம நான் சொல்ற பேச்ச கேளு!.
     சரிப்பா நான் உங்க வழிக்கே வரேன் அந்த பங்களாவில ஆவி இருக்குன்னே வச்சிக்கவும்.ஆனா அந்த ஆவிக்கு பயந்து நாம ஏன் ஓடணும்? அது நம்ம பங்களா ஆவியோடது இல்லையே அத விரட்டிட்டு நாம இருந்தா போச்சு!
     சரியா சொன்னேம்மா! என்று உள்ளே நுழைந்தார் நல்ல முத்து.
இவன் வேற அவளுக்கு ஒத்து பாடிக்கிட்டு! இப்ப அவ என்னத்த சரியா சொல்லிட்டா?
ஆவிய ஓட்டுவோமுன்னு பாப்பா சொல்லுச்சே என்றார் நல்லமுத்து.
எப்படிப்பா ஆவிய ஓட்டுவே?
    தனவேலு பக்கத்து டவுன்ல ஒரு பெரிய மந்திரவாதி இருக்கார். குழந்தைக்கு மந்திரிக்கிறது, காத்துக்கருப்பு விறட்டுறதுல அவர் ரொம்ப பிசி. அவரு ஆவி என்ன அதுக்கு தாத்தாவை கூட விரட்டிடுவாரு. நாளைக்கு அவர்கிட்ட போவோம் என்றார் நல்லமுத்து. இருவரும் தலையாட்டினர்.
    மறுநாள் அதிகாலைப் பொழுதில் டவுன் என்று சொல்லப்பட்ட அந்த பெரிய கிராமத்தில் மந்திரவாதியைக் காண மூவரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.சாக்கடை ஆறுகளுக்கு மத்தியில் ஒரு கீற்று கொட்டகை. அக்கொட்டகையின் முன்பு ஒரு போர்டு. மலையாள மாந்திரீக சித்தன் கேசவன் நம்பூதிரி. இவ்விடம் பில்லி,சூனியம், கழுப்பு எடுக்கப்படும் என்றுபறைசாற்றிக்கொண்டிருந்தது.
   அந்த கொட்ட்கையின் வாசலில் ஒரு நீண்ட க்யு காத்திருந்தது. காத்திருந்து மூவரும் உள்ளே சென்றார்கள். ஒட்டவெட்டப்பட்ட முடியுடன் சட்டியைக் கவிழ்த்தார் போல தலை முகத்தை மழித்து நெற்றியில் விபூதி தரித்து நடுவில் கருப்பு மை அதன் கீழ் எட்டணா சைசில் குங்குமப் பொட்டுடன் வறவேற்றார் கேசவன் நம்பூதிரி.
     அவர் வாய் பேசவில்லை! கண்கள் மூடி தியானித்தவர். தனவேலை கூர்ந்து நோக்கினார். பின் தனவேலிடம் உன் வீட்டில் வசிக்கும் ஆவி வலியது. ஆனாலும் அதை யான் விரட்டும் சம்கரிக்கும் என்றார் விளையப்போகும் விபரீதத்தை உணராமல்.
அழைக்கும்(4)

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2