கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 43

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 43


1.   அந்த திருடனுக்கு ஆனாலும் ரொம்ப கொழுப்பு!
  எப்படி சொல்றே?
நகையை அறுத்ததோட இல்லாம ஏம்மா இன்னும் ஓல்டு மாடல் நகையே போட்டுகிட்டு இருக்கீங்க! புதுமாடல் போட மாட்டீங்களான்னு கேட்டுட்டு போறான்!

2.   தலைவர் எதுக்கு மதுவிலக்கை தீவிரமா ஆதரிக்கிறார்?
அப்பத்தான் நாட்டுச்சரக்கு ஃப்ரீயா கிடைக்குமாம்!

3.   மன்னர் ஏன் புலவரை கோபித்துக் கொள்கின்றார்?
அரசர் கொடுத்த முத்திரை மோதிரத்தை அடகுக் கடையில் வைத்துவிட்டாராம்!

4.   கல்யாண நாளும் அதுவுமா குடிச்சுட்டு வந்து இருக்கீங்களே! உங்களுக்கே நல்லாயிருக்கே!
  சாரிம்மா! துக்கம் தாளாம கொஞ்சம் ஊத்திக்கிட்டேன்!

5.   எதுக்குடி எங்க அம்மா தலையிலே இத்தனை பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கிப் போட்டே!
நீங்கதானே சொன்னீங்க எங்க அம்மா கிட்ட ஐஸ்வச்சி பேசிப் பழகுன்னு!

6.   மாப்பிள்ளை ரெண்டுவழியிலே சம்பாதிக்கிறார்னு சொல்றீங்களே என்னவா இருக்கார்?
கிரிக்கெட் பிளேயரா இருக்கார்! ஆடினாலும் சம்பளம்! ஆடாவிட்டாலும் சம்பளம்!

7.   வெயிட்டான ரோல் வேணும்னு கேட்டீங்களே கிடைச்சிருக்கு பண்றீங்களா?
என்ன ரோல்!
கடோத்கஜன் வேசம் தான்!

8.   டாக்டர் பேஷண்டை மாத்தி ஆபரேஷன் பண்ணீட்டீங்களே!
அதனால என்ன ரூமை மாத்தி விட்டுரு!

9.    இப்ப என்ன குடி முழுகிப்போச்சுன்னு தலைவர் கட்சியை ஆந்திராவுக்கு  மாத்திடனும்னு சொல்லிக்கிட்டிருக்கார்!
தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கு வரப்போவுதாமே!

10. அந்த எழுத்தாளராலத்தான் இன்னும் போஸ்ட் ஆபிஸ் நஷ்டம் ஆகாம இருக்கா எப்படி?
அவர் எழுதற எல்லா படைப்பும் அப்பப்ப திரும்பி வந்துக்கிட்டே இருக்கே! அதனாலதான்!

11. தலைவருக்கு ஆங்கில அறிவு கொஞ்சம் கம்மின்னு எப்படி சொல்றே?
ஓட்டல்ல சாப்பிடப் போனப்ப ரெஸ்ட் ரூம்னு போட்டிருக்கே இங்க ரெஸ்ட் எடுத்துக்கவான்னு கேக்கறாரே!


12. மன்னா இளவரசர் உங்கள் பெருமையை நிலைநாட்டி விட்டார்!
எப்படி?
கோலி ஆட்டத்தில் தோற்றுவிட்டு முட்டி தேய்ந்து வந்திருக்கிறார்!

13. அந்த டாக்டர் கிண்டல் பேர்வழின்னு எப்படி சொல்றீங்க?
ஊசிப்போடுங்க டாக்டர்னு சொன்னா.. ஊசி “ஊசி” ப்போயிருச்சுன்னு சொல்றாரே!

14. மன்னா! என் வீட்டில் அடுப்பெரிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது!
  ஏன் நீங்களும் சிலிண்டர் வாங்கி விட்டீர்களா?

15.  தலைவர் எதுக்கு சரக்கு கப்பலை தடை செய்யனும்னு சொல்லி அறிக்கை விட்டிருக்கார்!
அவர் அதை “ சரக்கு” கப்பல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கார்!

16. மந்திரியாரே! சமிபத்தில் மன்னர் போருக்கு ஏதும் செல்லவில்லையே அப்புறம் எப்படி இத்தனை தழும்புகள் முகத்தில்…!
அதெல்லாம் ராணியாரிடம் பெற்ற தழும்புகள் சும்மா இரும்!

17. என்னது மன்னர் குழியில் சிக்கி தோற்றுப்போய்விட்டாரா?
  ராணியாருடன் பல்லாங்குழி ஆடி தோற்றுப்போனதை சொன்னேன் ஐயா!

18. ஒரு தலைமுறையே இந்த படத்தால மாறிப்போயிருக்கு!
அவ்வளவு நல்லா இருக்கா படம்?
 நீ வேற அவ்வளவு மோசமா இருந்தததுனால படம் பாக்கிறதையே விட்டிருக்குன்னு சொல்ல வந்தேன்!

19.  தலைவர் எதுக்கு கட்சி ஆபீஸ்ல நிறைய சோடியம் விளக்குகளை போடச் சொல்றார்!
கட்சியில் எந்த ஒளிவு மறைவும் இல்லேன்னு சொல்றாராம்!

20.  சின்னதா இருந்த ஓரு ஓட்டைய  மறைக்க ஐம்பதாயிரம் செலவாச்சா எப்படி?
ஒண்ணுமில்லே என் வொய்ப் ஒரு டைமண்ட் மூக்குத்தி வாங்கிட்டா அதான்!

21 புலவர் ஏன் கோபமாக இருக்கிறார்?
 பஞ்சத்தில் அடிபட்டு வந்த புலவர் பாட ஆரம்பித்ததும் மன்னர் காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு விட்டாராம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. #ஓரு ஓட்டைய மறைக்க ஐம்பதாயிரம் செலவாச்சா#
    நல்ல வேளை,ரெண்டு பக்க ஓட்டை இல்லாமல் போச்சே :)

    ReplyDelete
  2. ஹா ஹா... எல்லாமே அருமை....

    ReplyDelete
  3. சிரிக்க வைத்த ஜோக்ஸ்...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அஹ்ஹாஹ்ஹ் அனைத்துமே அருமை!

    ReplyDelete
  5. அனைத்தையும் ரசித்தேன். அதிகமாகச் சிரித்தேன்.

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை. சூப்பர்.

    ReplyDelete
  7. தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.

    பகவான்ஜியிடமே இந்தக் கேள்வியைத் தெரியாமல் கேட்டிருக்கிறேன்.


    இந்நகைச்சுவைகள் உங்கள் கற்பனையா?

    அல்லது பகிர்வா?

    கற்பனை எனின்................... எவ்வளவு திறமைகளைத்தான் ஒருவர் இப்படிச் சொந்தமாய் வைத்திருப்பீர்கள்.?

    பகிர்வெனின், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சந்தேகம் வேண்டாம் நண்பரே! இதெல்லாம் சொந்த தயாரிப்புக்கள்தான்! முதலில் கொஞ்ச நாள் பிறருடைய ஜோக்குகளை பகிர்ந்து கொண்டிருந்தேன்! கோவை ஆவி அவர்கள் அங்க வந்தது இங்க எதுக்கு நண்பா என்று உசுப்பு ஏற்றி விட்டார். நண்பர்களின் ஆதரவோடு சொந்தமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்! பாக்யா, மற்றும் வாரமலரிலும் ஒன்றிரண்டு ஜோக்குகள் பிரசுரம் ஆகியுள்ளது. நான் தான் வார இதழ்களுக்கு அனுப்புவது இல்லை. இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஜோக்குகள் எழுதி இருப்பேன் என்று நினைக்கிறேன்! நன்றி!

      Delete
    2. -- எம்மினும்
      கற்றாரை நோக்கிக் கருத்தழிந்தேன் கற்றதெலாம்
      எற்றே இவர்க்குமுன் என்று

      நன்றி

      Delete
    3. நண்பரே! எவ்வளவு பெரிய வார்த்தைகள்! உங்கள் தமிழ்ப்புலமையைக் கண்டு வியப்பவர்களில் நானும் ஒருவன். நானொன்றும் பல்கலை வித்தகன் அல்லன்! பல்கலையை கற்கும்ஆர்வலன் அவ்வளவே! எல்லா வழிகளிலும் என் எழுத்தினை முயன்று பார்க்கின்றேன் அவ்வளவே! நான் ஏற்கனவே சொன்னது போல இணையக் கடலில் ஓடும் ஓர் சிறு ஆறு அவ்வளவே! இன்னும் சொல்லப்போனால் அந்த ஆற்றில் விழும் ஒரு சிறு துளி என்றும் சொல்வேன்! நன்றி!

      Delete
    4. கொஞ்சம் தெரிந்திருப்பின் கோடிக் கதையுரைக்கும்!
      விஞ்சும் புகழுரைத்தே வாய்சிவக்கும் ! - பஞ்சத்தில்
      வற்றிய ஓலை கலகலக்கும் , எஞ்ஞான்றும்
      பச்சோலைக் கில்லை ஒலி.

      தங்களையும் தங்கள் வித்தகத்தையும் நன்கு அறிவேன் நண்பரே!

      என் வியத்தலுக்கு அர்த்தமுண்டு.

      நான் சொன்னது வெறும் வார்த்தையில்லை.

      தங்களது மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் நாளை வருவான்.

      நன்றி.

      Delete

  8. பலகாரக் கடையில் 'எங்கள் கடை இனிப்புகள் தனி நெய்யினால் தயாரிக்கப் பட்டவை 'என்று சொல்வதைப் போல ,ஜோக்காளி தளத்தில் வருபவை எல்லாம் என் தயாரிப்புகளே என்று ..இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. அது மதுரை பலகாரக் கடை பகவானே..!

      எங்கள் ஊர் பக்கம், நீங்கள் சொன்ன ’'எங்கள் கடை இனிப்புகள் தனி நெய்யினால் தயாரிக்கப் பட்டவை “ என்பதைப் பெரிய எழுத்தில் போட்டுவிட்டு பக்கத்தில் ‘அல்ல’ என்பதை பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் தெரியாத படி சின்ன எழுத்தில் போட்டிருப்பார்கள். :)

      அறியாப் பிள்ளை தெரியாமல் சொன்னது அப்போது.

      இப்போதுதான் பலகாரக் கடை என்று பெயர் இருந்தாலும் அங்கு ஒரிஜினல் நகைச் ‘சுவை’தான் ஸ்பெஷல் என்பதை உணர்ந்து கொண்டேனே ! :)

      நன்றி.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!