நான் ரசித்த பூக்கள்!

நான் ரசித்த பூக்கள்!

    இப்பகுதியில் தளிர் அண்ணா ரசித்தவைகள்  இடம் பெறும்

தொலைக்காட்சிகள் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க மக்கள் தொலைக்காட்சி மட்டும் சிறிது ஆறுதல் அளிக்கிறது. ரியல் எஸ்டேட் விளம்பர நிகழ்ச்சிகள் சிறிது ஆக்ரமித்தாலும் பல நிகழ்ச்சிகள் மன நிறைவைத்தருகின்றன
நெடுந்தொடர்கள் என்ற பெயரில் மெகா சீரியல் அழுகைகளுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு சொல் விளையாட்டு சந்தை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை சிறு பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மனதை கவருகின்றன. மணிக்கொருமுறை வரும் மணிச்செய்திகளும் பரவாயில்லை.
இதில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி திண்டுக்கல்சரவணன்,கிருத்திகா அண்ணாச்சி பங்கேற்கும் கொஞ்சம் அரட்டை,கொஞ்சம் சேட்டை
          நேரலையான இந்நிகழ்ச்ச்யில் நகைச்சுவையை போனில் கூற வேண்டும் தொடர்பில் வரும் நேயர்கள் அரத பழசான ஜோக் சொன்னாலும் தொகுத்து வழங்கும் சரவணனும் கிருத்திகாவும் அழகாக சமாளிக்கிறார்கள். தமிழனுக்கு எப்பொழுதும் குண்டு பெண்மணிகள் மீது மோகம் அதிகம் கிருத்திகாவிற்கும் இதில் விதிவிலக்கில்லை.
கிருத்திகாவின் சிரிப்பிலேயே மயங்கி போகிறான் ரசிகன். அண்ணாச்சியின் சேட்டைகள் நம்பர்1 ரகம் வழியில் செல்வோரை மறித்து ஆனா ஆவன்னா கேட்பதாகட்டும் கழித்தல் கூட்டல் கணக்கு கேட்டு மடக்குவதாகட்டும் அவர் பாணியெ தனி.
     ஆனால் நம்மவர்கள் சில சிம்பிள் கேள்விகளுக்கே திணருவது வேடிக்கை!
அவர் கேட்ட சில கேள்விகளிதோ உங்களுக்கு விடை தெரிகிறதா பாருங்கள்.

இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஆத்திச்சூடி எழுதியது யார்?
97ல் 13 போனா மீதி என்ன?
காந்தி எங்கு பிறந்தார்?
ராஜாஜி பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?
பதில் அளித்த பலரும் தவறான விடைகளையே கூறீனர். தமிழகத்தின் பொது அறிவு ரொம்ப குறைந்துவிட்டதாக தோன்றுகிறது.

நான் ரசித்த எஸ்.எம்.எஸ்  

INDIANS DON’T LIKE TO YOU STUDY IN GOVT SCHOOL,DON’T LIKE TO GO GOVT HOSPITAL,DON’T LIKE TO TRAVEL IN GOVT BUS,BUT EVERYBODY LIKE GOVT JOB! GREAT INDIANS.

எதையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி ஆனால் எதையும் செய்துவிட்டு சிந்திப்பதால் நமக்கு கிடைப்பது அனுபவம்.

Why indiyan girls don’t have intrest in sports?only 0.5 %girls playing games like tennis football cricket etc.. because 99.5% girls playing in boys life.

“a single moment of miss understanding is so poisonous….., it ii make us forget the hundred lovable moments spent together with in a minute”

வெற்றிகளை சந்தித்தவனின் இதயம்பூவைப்போல் மென்மையானது.தோல்விகளை மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது. விவேகானந்தர்.

பையனை எதுக்கு அடிக்கரீங்க?
அவன் கிட்ட லெட்டர் போஸ்ட்பண்ணீட்டு வாடான்னா போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்.

எப்போதெல்லாம் உன் உள்ளம் வலிக்கிறதோ அப்போதெல்லாம் உன்னை நேசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார் அவர்களின் அன்பு உன் மனதை சந்தோஷ படவைக்கும்.

கண்ணதாசனுக்கு பிடித்த மதம்

சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவிஞர் கண்ண தாசனை அழைத்திருந்தார்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரம் ஆகியும் கவிஞர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழ்ந்து சலசலத்தது.அந்நிலையில் கவிஞர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்.சிலருக்கு கிறிஸ்துவமதம் பிடிக்கும் எனக்கோ தாமதம் பிடிக்கும் என்று சொல்லி நிறுத்தினார். மக்கள் அவருடைய வார்த்தை நயத்தை ரசித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!