சனியனை தீர்த்திடனும்!



கும்மிருட்டு நேரம் ஆங்காங்கே வெளிச்ச சிதறல்கள், அவன் நடந்து கொண்டிருந்தான். கண்கள் சிவந்து போயிருந்தன. முகத்தில் முப்பதுநாள் தாடி உறவாடிக்கொண்டிருந்தது.என்ன சொல்லிவிட்டாள் அவள்.நான் காட்டுமிராண்டியாம் கரடிகுட்டியாம் என்னைக்கட்டிகொண்டதற்கு வேறு யாரையாவது கட்டிக்கொண்டிருக்கலாமாம்.நாகரீகம் தெரியாதவன் என்று குத்திக்காட்டுகிறாள் அவனுக்கு ஆத்திர ஆத்திரமாய் வந்தது.
           இந்த பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டா அவன் வாழ வேண்டும் சனியன் தீர்த்துகட்டிட்டா நிம்மதி அப்புறம் அவன் நிம்மதியாக வாழலாம் மனைவியிடம் பாட்டு வாங்கத்தேவையில்லை ஜாலியோ ஜாலிதான்.அவன் முகத்தில் குரூரம். “ப்ளேட்” ஒன்று வாங்கினான். வீட்டிற்கு அவசர அவசரமாக சென்றான். அவனுக்குள் அவ்வளவு வெறி இன்று இந்த சனியனை தீர்த்திடனும் இன்றோடு ஒழியப்போகிறது சனியன்.
         வேகமாக ரேசரில் “ப்ளேடை” பொருத்தி தாடியை மழிக்க ஆரம்பித்தான் அவன். மனைவியோடு சண்டைக்கு காரணமான தாடிஒழிந்தது என்ற நிம்மதி பெருமூச்சு விட்டான் அவன்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!