பொங்கல் வாழ்த்து

மூடிய பனித்திரை விலகி
முன்றிலில் வெய்யோன் முகம் காட்ட
வாடிய பயிர்களெல்லாம் வதனத்தில்
புன்னகை புரிய
முற்றிய கதிர்கள் எல்லாம் வெட்கத்தில்
நிலம் நோக்க
மஞ்சுள வீதியெல்லாம் மங்கல தோரணம் தொங்க
பொங்குக பொங்கலென வரும்
எங்கள் தை மகளே வருக! தங்குக நன்மையெல்லாமென
அருளை அள்ளித் தருக!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!