கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 70

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 70


1.   தலைவர் ஜெயிலுக்குள்ளே நுழைஞ்சதும் கண் கலங்கினாராமே!
பழசெல்லாம் ஞாபகம் வந்துருச்சாம்! அப்ப லூங்கியோட போனவர் இப்ப வேட்டியோட போயிருக்கார் இல்லையா!

2.   இன்னைக்கு சட்டசபை கூடிச்சுன்னு எப்படி கரெக்டா சொல்றீங்க?
எதிர்கட்சிக்காரங்க அரைமணிநேரத்துல வெளிநடப்பு செஞ்சு கேண்டீன் ல நிக்கறாங்களே!

3.   தலைவர் தூங்கிட்டு இருக்கும்போது சத்தம் போட்டா யாருக்கும் பிடிக்காது…
அப்புறம் என்ன செய்வார்!
வெளிநடப்புதான்!

4.   படம் ஒரே சொத்தையா இருக்குன்னு பேசிக்கிட்டு இருந்தியே அப்படி என்ன படம் பார்த்தே?
  முத்தின கத்திரிக்காய்!

5.   மக்கள் மனசிலே இடம்பிடிக்கிறா மாதிரி எதையாவது செஞ்சு அசத்தனம்யா!
முதல்ல சட்ட சபையில இடம்பிடிக்கிற வழியை பாருங்க தலைவரே!

6.   அந்த ஆஸ்பிட்டல்ல ஏன் அவ்ளோ கூட்டம்?
அங்க நர்ஸுங்க பேஷண்ட்டுக்கு டிரெஸ் பண்ணி விடறதோட மேக்கப்பும் போட்டு விடறாங்களாம்!

7.   நெட்கார்டு போட்டு விடுன்னு பொண்டாட்டி சொன்னதை மறந்து வீட்டுக்கு போயிட்டேன்…
அப்புறம்?
வீட்டுக்குள்ளே நுழைய ரெட்கார்டு போட்டுட்டா!


8.   அந்த படத்தோட ஹீரோயின் டைரக்டர் மேல புகார் சொல்றாங்களாமே!
  அப்ப படத்துலே வில்லன் ரோல் அவருதான்னு சொல்லு!

9.   நம் மன்னர் எப்போதும் சாட்டிங்கில் இருப்பது எதிரிகளுக்குச் சாதகம் ஆகிவிட்டது.
  எப்படி?
”சீட்டிங்க்” பண்ணி நாட்டை அபகரித்து விட்டார்கள்!

10.  அமைச்சர் செக்ஸ் புகார்ல சிக்கிட்டதா சின்ன சின்னதா நியுஸ் வந்துகிட்டு இருக்கு!
  “பிட்டு பிட்டா” போட்டு தாக்கிட்டாங்களோ!

11.  கபாலி இப்ப ஒழுங்கா மாமூல் கட்ட மாட்டேங்கிறானாமே!
   ஆமாங்க ஐயா! கேட்டா “நெருப்புடா”ங்கிறான்!

12.   அதோ போறாரே அவர் பல குடும்பங்களை தினமும் அழ வைச்சிக்கிட்டு இருக்காரு!
     எப்படி?
டீவி சீரியல் டைரக்டரா இருக்காரு!

13. தலைவர் பேசும்போது உளறி கொட்டிட்டார்!
அப்புறம்?
வழக்கம் போல மக்கள் கைதட்டி சிரிச்சிட்டு போயிட்டாங்க!


14.  மன்னர் இன்று மவுனவிரதம் இருக்க போகிறாராமே?
   நீ வேற ராணியார் செய்த அல்வாவை தின்ற பின் வாய் திறக்க முடியவில்லையாம்!

15. அந்த புரட்யூசர் எடுத்த படங்கள்லாம் சரியா ஓடலையாம்!
  அப்புறம்?
வாங்கின கடனை கொடுக்க முடியுமா அவரே ஓடிப்போயிட்டாராம்!

16. அவர் முன்னாடியே யோசிச்சிருந்தா பின்னாடி இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டார்?
மனைவிதானேன்னு ஏடி.எம் பின் நம்பரை சொல்லிட்டு இப்ப அவஸ்தை படறாரே!

17.  அந்த ஆபிஸர் யாரையும் கிட்ட நெருங்கவே விட மாட்டேங்கிறாரே!
அவர் தொலைதூரக் கல்வியிலே படிச்சி வேலைக்கு வந்தவராம்!


18.  ராணியார் மன்னர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம்!
   எப்படி சொல்கிறாய்?
மன்னர் அந்தப்புரத்தில் நுழைந்ததும் ராணியார் இந்தப்புரம் வெளியே வந்துவிடுகிறாரே!

19.  மந்திரியாரே போரென்று வந்துவிட்டால்…!
  ஓடி ஒளிந்து கொள்ளலாமே மன்னரே!

20.  மன்னர் எப்போதும் ராணியோடு பல்லாங்குழியே கதியென்று இருந்தாரே என்ன ஆயிற்று!
  போரில் தோற்று பதுங்கு குழியே கதியென்று உள்ளார்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!  
 


Comments

  1. கொஞ்சம் அல்ல நல்லாவே சிரித்தோம் பாஸ்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சரவெடிகள் நண்பரே அனைத்தும் ரசிப்புக்குறியவையே.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்லாவே சிரித்துவிட்டோம் சுரேஷ்...

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. ஹாஹாஹா! நல்ல நகைச்சுவை உணர்வு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!