புகைப்பட ஹைக்கூ 76

புகைப்பட ஹைக்கூ

நம்பிக்கை
பிடித்திருக்கிறது
தூரிகை!

வண்ணச்சிதறலில்
ஒளிர்கிறது
நம்பிக்கை!

பிடிமானமில்லை!
படிமானமானது
ஓவியம்!

தீட்டதீட்ட
கூர்பட்டது
நம்பிக்கை!

கைவிட்டாலும்
கைவிடவில்லை!
நம்பிக்கை!

வண்ணம் பூசியதும்
மாறியது
வாழ்க்கை!

ஊக்கம் உடையாதவரை
இல்லை இவருக்கு
துக்கம்!

கைகள் முடங்கினாலும்
துளிர்த்தது
கலை!

ஊமையான விரல்கள்
பேசியது
ஓவியம்!

கலைந்த கனவுகளை
நிஜமாக்கியது
சித்திரம்!

சிந்தியது வண்ணங்கள்!
சிதறவில்லை!
நம்பிக்கை!

ஒவியத்துள்ளே
ஒளிந்து கிடக்கின்றது
நம்பிக்கை!

கை விடாத ஊக்கம்
கை கொடுத்தது
தூரிகை!

உயர்ச்சியை
நுகர வைத்தது
உலராத தூரிகை!

விதைபட்ட நம்பிக்கை!
விழுதானது
தூரிகை!

 ஊற்றெடுத்த நம்பிக்கை!
 உருவானது
 வாழ்க்கை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. எத்துனை நம்பிக்கை
    போற்றுவோம் அவரை

    ReplyDelete
  2. தன்னம்பிக்கையாளர் வாழ்க...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இந்த தன்னம்பிக்கையாளர் தரணியில் போற்றப்படுவார்! வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete
  3. நம்பிக்கை என்றால் இதுவன்றோ..
    கவிதை..அருமை.

    ReplyDelete
  4. படம் சார்ந்து எழுதுவது ஒரு சவால்
    அதுவும் நன்றாக் எழுதுவது பெரிய விசயம்
    இரண்டையும் சாதித்து விட்டீர்கள் ஸ்வாமிகள்

    ReplyDelete
    Replies
    1. வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பார்கள்! அப்படி தங்களால் புகழப்பட பாக்கியனானேன் தோழர்!

      Delete
  5. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  6. நம்பிக்'கை' கவிதை அருமை...
    சிறப்பான வரிகள்
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு வரிகளை விதைத்துள்ளேன்! நன்றி!

      Delete
  7. நம்பிக்கை விதைகளை நன்றாகவே தூவியிருக்கிறீர்கள்.

    "//ஊமையான விரல்கள்
    பேசியது
    ஓவியம்!//"

    அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. விதைத்து வைப்பது நாலுபேருக்கு பயன்பட்டால் சரி! நண்பருக்கு நன்றி!

      Delete
  8. ஆகா அற்புதம் சகோ அருமையான எண்ணக் குவியல்கள். எவ்வளவு தூரம் உணர்ந்து அப்பப்பா சொல்லி மாளாது சகோ கண்கல் கலங்கும் பாடியாய் அத்தனையும் உண்மை எத்தனை நம்பிக்கை. இருவருக்குமே hatsoff சகோ வாழ்த்துக்கள் எத்தனை திறமைகள் தங்களுக்கு wow மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே புகழ்கிறீர்கள் சகோ! ஏதோ என்னால் இயன்ற அளவு சிறப்பாக எழுத முயன்று இருக்கிறேன் அவ்வளவே!

      Delete
  9. மிக மிக அற்புதமான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தீட்டதீட்ட
    கூர்பட்டது
    நம்பிக்கை!//

    வண்ணச்சிதறலில்
    ஒளிர்கிறது
    நம்பிக்கை!

    கைகள் முடங்கினாலும்
    துளிர்த்தது
    கலை!//
    அருமை அருமை! சதியமாகக் கலக்குகின்றீர்கள் சுரேஷ்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம்தான் காரணம்! மிக்க நன்றி நண்பரே!

      Delete
  11. நம்பிக்கை தந்த படம்.....

    கவிதைகள் அருமை நண்பரே..... பாராட்டுகள்.

    ReplyDelete
  12. அருமை அருமை.. தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!